மேலும் அறிய

சமோசாவை விரும்பி சாப்பிட்ட குழந்தைகள் மரணம்.. ஆதரவற்றோர் இல்லத்தில் மர்மம்!

ஆந்திர மாநிலத்தில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் சமோசாவை சாப்பிட்ட 3 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் சமோசாவை சாப்பிட்ட 3 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை உலுக்கிய சம்பவம்: கோடௌரட்லா மண்டலத்திற்கு உட்பட்ட கைலாசா நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் நேற்று சமோசா சாப்பிட்ட 27 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர். அவர்களில் 3 பேர் அனகாப்பள்ளியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தனர்.

முதலாம் வகுப்பு படிக்கும் ஜோசுவா, மூன்றாம் வகுப்பு படிக்கும் பவானி மற்றும் ஷ்ரத்தா ஆகிய மூன்று குழந்தைகள் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள 24 குழந்தைகள் நர்சிபட்டினம் மற்றும் அனகப்பள்ளியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில், 7 குழந்தைகள் நர்சிபட்டினத்தில் உள்ள மருத்துவமனையிலும், 17 குழந்தைகள் அனகப்பள்ளியில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றன. நான்கு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு (கேஜிஹெச்) மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்தது என்ன? இறந்த குழந்தைகள் வசித்து வந்த ஆதரவற்றோர் இல்லத்தை அரசு சாரா அமைப்பு நடத்தி வந்துள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் 60 குழந்தைகள், இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளனர்.

அனகப்பள்ளி மாவட்ட ஆட்சியர் கே.விஜயா, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி அப்பா ராவ் விசாரணை மேற்கொண்டுள்ளார். உணவு தயாரிப்பதில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து மாநில மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாரா லோகேஷ் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஒய்.சத்ய குமார் மற்றும் அனகாப்பள்ளி மாவட்ட கலெக்டர்கள், அல்லூரி சீதாராமராஜு ஆகியோரிடம் விசாரித்துள்ளார்.       

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிரடி ஆக்சன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள் !
அதிரடி ஆக்சன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள் !
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
Kamala vs Trumph Debate: கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்Rahul Gandhi slams PM Modi | ”திறமை இல்லாத மோடி” வெளுத்து வாங்கிய ராகுல்.. தீப்பொறி PressmeetAarti Ravi on Divorce : விவாகரத்து!’’எனக்கே தெரியாது’’ஆர்த்தி ரவி குற்றச்சாட்டுKanimozhi Advice : ”ஏன் இப்படி வர்றீங்க”கனிமொழி அன்பு கட்டளை உடனே OK சொன்ன இளைஞர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிரடி ஆக்சன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள் !
அதிரடி ஆக்சன் எடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கலங்கிப்போன அரசு அதிகாரிகள் !
JUDO: சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
சென்னையில் தொடங்கியது கேலோ இந்தியா ஜூடோ போட்டி: நேதாஜிக்கு அர்ப்பணிப்பு..!
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
TNPSC குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள்.! மகிழ்ச்சியில் தேர்வர்கள்..கூடுதல் தகவல்கள்...
Kamala vs Trumph Debate: கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
கமலா ஹாரீஸ் - டிரம்ப் பேசிய அந்த முக்கிய 3 பிரச்னைகள்
Actor Jeeva Car Accident: அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
அதிர்ச்சி... கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா.. அவருக்கும், மனைவிக்கும் என்ன ஆனது?
ABP Nadu Exclusive: முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
முதல்வர் ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை - திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
Actor Jeeva Accident: அச்சச்சோ! மனைவியுடன் விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா - என்னாச்சு?
Actor Jeeva Accident: அச்சச்சோ! மனைவியுடன் விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா - என்னாச்சு?
அதிமுகவை தொடர்ந்து விஜய்க்கும் அழைப்பு விடுத்த திருமாவளவன் - தமிழக அரசியலில் நடப்பது என்ன?
அதிமுகவை தொடர்ந்து விஜய்க்கும் அழைப்பு விடுத்த திருமாவளவன் - தமிழக அரசியலில் நடப்பது என்ன?
Embed widget