லட்சக்கணக்கான மக்களுக்காக இதை செய்யுங்க.. கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு முதலமைச்சர்!
இந்தியாவின் தலைநகரான டெல்லியில், காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
![லட்சக்கணக்கான மக்களுக்காக இதை செய்யுங்க.. கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு முதலமைச்சர்! Chief Minister Mk Stalin's letter to Delhi Chief Minister Arvind Kejriwal to allow sale of firecrackers subject to permitted norms லட்சக்கணக்கான மக்களுக்காக இதை செய்யுங்க.. கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு முதலமைச்சர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/14/fe722e1d7b67250bc636382ebb644a1c1665726594692571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டுமென டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில், காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், உச்சநீதிமன்றம் டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதித்துள்ளதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிக்க அனுமதித்துள்ளதை சுட்டிக்காட்டி அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பண்டிகை சமயங்களில் இரண்டு மணி நேரம் கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த நாடுகள் உட்பட சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும்.
இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டிற்குப் பங்களிக்கும் காரணிகளாக வாகனங்கள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் இருக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் , ஒருசில நாட்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகளால் மிகக்குறைந்த அளவிலான மாசு ஏற்படும் என்பதால், பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தினைக் கருத்தில்கொண்டு, உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் அறிவியல் முறைப்படி உருவாக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிவகாசியை சுற்றியுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு கோரி, மாண்புமிகு தில்லி முதலமைச்சர் @ArvindKejriwal அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/Df8atL8MsC
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 12, 2022
மேலும், ”அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். வேறு எந்த மாநிலமும் பட்டாசுக்கு முழுத் தடை விதிக்காத நிலையில், உங்களின் இந்த நல்ல செயல், சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றும்.
தமிழகத்தில் சிவகாசியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் பட்டாசு விற்பனையை நம்பி வாழ்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், தீபாவளியின் போது சிவகாசி மக்கள் தங்கள் ஆண்டு வணிகத்தில் 70% பார்ப்பார்கள். இருப்பினும், கொரோனா வைரஸ் பரவல், ஊரடங்கு மற்றும் பட்டாசுகளால் ஏற்படும் மாசு உள்ளிட்ட காரணங்களால் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக விற்பனை மந்தமாகவே இருந்து வருகிறது.
இதனால், இந்த ஆண்டு தேவை அதிகரிக்கும் என தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். ஆனால், பட்டாசுக்கு தடை மற்றும் மூலப்பொருள் விலை உயர்வு ஆகியவை அவற்றின் விற்பனையை வெகுவாகக் குறைத்துள்ளன” என கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
விழிப்புணர்வு
"பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வார்டுகள் மற்றும் மாணவர்களுக்கு தீ விபத்துகள் மற்றும் பட்டாசால் ஏற்படும் காயங்களின் தீவிரத்தை விளக்க வேண்டும் மற்றும் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்" என்று காவல்துறை ஆலோசனை கூறுகிறது. தீ விபத்துகள் ஏற்பட்டால், பொதுமக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை 112 உதவி எண்ணிலும், 108 மருத்துவ அவசர உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ள வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)