மேலும் அறிய

Assembly Election 2023: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு நிறைவு!

சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

Assembly Polls 2023 : சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 
 
இன்று சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளில் கடந்த 7ம்  தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், யாரும் எதிர்பாராத விதமாக 78 சதவிகித வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம், நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த பிந்த்ராவாகர் விதான் சபா தொகுதியில் மட்டும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் துணை ராணுவத்தின் பாதுகாப்பு ஏற்பாட்டோடு அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. சத்தீஸ்கரில் பகல் 1 மணி நிலவரப்படி 38.22 சதவீத வாக்குகளும், 3 மணிக்கு 55.31 சதவீத வாக்குகளும், மாலை 5 மணிக்கு 67.34 சதவீத வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்கட்ட தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இரண்டாம் கட்டத்தில் 67.34 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இதேபோன்று பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேச மாநிலத்திலும் இன்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.  மொத்தம் உள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், நக்சல்களால் பாதிக்கப்பட்ட தொகுதிகளில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்த நிலையில் ஒரே கட்டமாக மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 230 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 71.16 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான நகுல்நாத்தை, சிந்த்வாராவின் பரரிபுராவில் உள்ள வாக்குச் சாவடிக்குள் நுழைய விடாமல் பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget