மேலும் அறிய

Manish Sisodia : முடிவுக்கு வருகிறதா சிசோடியாவின் அரசியல் வாழ்க்கை..? சிபிஐ கையில் எடுத்த மற்றொரு ஊழல் வழக்கு..!

கடந்த மாதம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிசோடியா மீது வழக்குத் தொடர மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அனுமதி அளித்தது.

டெல்லி துணை முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா. இவர் ஏற்கனவே டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சூழலில், இவருக்கு எதிராக மற்றொரு ஊழல் வழக்கை கையில் எடுத்துள்ளது சிபிஐ.

மீண்டும் சிக்கலில் சிசோடியா:

டெல்லி அரசாங்கத்தின் பின்னூட்டப் பிரிவில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு, ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு டெல்லி அரசின் பின்னூட்டப் பிரிவு உருவாக்கப்பட்டது. இதன் சட்ட விரோத செயல்பாட்டின் காரணமாக அரசுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாகத சிபிஐ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ தரப்பு, "பின்னூட்டப் பிரிவை சட்டத்திற்குப் புறம்பாக உருவாக்கி இயக்கியதால் அரசாங்க கருவூலத்திற்கு தோராயமாக ₹ 36 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

பொய் வழக்குகளா?

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி அளித்துள்ள டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், "மணீஷ் மீது பல பொய் வழக்குகளைப் போட்டு அவரை நீண்ட காலம் காவலில் வைப்பது பிரதமரின் திட்டம். நாட்டுக்கு சோகம்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடந்த மாதம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிசோடியா மீது வழக்குத் தொடர மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அனுமதி அளித்தது. சிசோடியா பின்னூட்ட பிரிவை அரசியல் சூழ்ச்சிக்கான கருவியாகப் பயன்படுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

சிசோடியாவுக்கு எதிராக வழக்குத் தொடர பாஜக கோரிக்கை விடுத்த நிலையில், முதலமைச்சர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுகளை "அரசியல் உள்நோக்கம்" கொண்டவை என மறுத்து வருகிறார். 

டெல்லி மதுபானக் கொள்கை:

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு பொறுப்பு வந்தபிறகு, மதுபான விற்பனை கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது.

அதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது.

இதனால், கடந்த 2022ஆம் ஆண்டு, புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். 

துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget