மேலும் அறிய

Brimato: இதுதான் பிரிமெட்டோ..! ஒரே செடியில் காய்க்கும் கத்தரிக்காய்.. தக்காளி..!

வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தின் வேளாண் விஞ்ஞானிகள் ஹைபிரிட் முறையில் ஒரே செடியில் கத்தரிக்காய் மற்றும் தக்காளியை வளர்த்து புதிய சாதனை செய்துள்ளனர்.

"கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும்" என்ற பழமொழியை பழைய மொழியாகவே ஆகியிருக்கிறது புதிய கண்டுபிடிப்பு. இடைவெளி விட்டு விட்டு விதை விதைத்தால் நிறைய அறுவடை செய்து களஞ்சியத்தை நிறைக்கலாம் என்பார்கள். ஆனால் இடைவெளியே வேண்டாம் ஒரே செடியில் இரண்டு வெவ்வேறு காய்கறிகளை அறுவடை செய்யலாம் என்று கூறுகிறது அறிவியல். ஏற்கனவே "பொமேட்டோ" என்ற பெயரில் உருளைக்கிழங்கும் தக்காளியும் ஒரே செடியில் முளைப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருக்கின்றன. தற்போது "பிரிமேட்ட்டோ" என்று கத்தரிக்காயையும் தக்காளியையும் இணைத்து ஒரே செடியில் காய்ப்பது போன்ற செடியை கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஐ.வி.ஆர்., எனப்படும் இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளனர்.

Brimato: இதுதான் பிரிமெட்டோ..! ஒரே செடியில் காய்க்கும் கத்தரிக்காய்.. தக்காளி..!

அந்த ஆராய்ச்சியின் முடிவில்தான் தக்காளி மற்றும் கத்தரிக்காய்களை ஒரே செடியில் வளர்க்கும் நுட்பத்தை அவர்கள் கண்டறிந்து உள்ளனர். அந்த செடிக்கு, 'பிரிமாட்டோ' என பெயரிடப்பட்டுள்ளது. கத்தரிக்காயின் ஆங்கிலப் பெயரான ‘பிரிஞ்சால்’, தக்காளியின் ஆங்கிலப் பெயரான ‘டொமாட்டோ’ ஆகியவற்றை இணைத்து இந்தச் செடிக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒரு செடியின் பாகத்தை மற்றொரு செடியின் தண்டு அல்லது வேரில் இணைத்து வளர்க்கப்படும் முறையில் இந்தப் புதிய கலப்பின செடி வளர்க்கப்பட்டுள்ளது. 25 முதல் 30 நாட்கள் ஆன கத்திரிக்காய் விதைகள், 25 நாட்களான தக்காளி விதைகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு கட்டுப்படுத்தப் பட்ட சீதோஷ்ண நிலையில் வளர்த்து பின்னர் மேலும் ஒரு வாரம் நிழலில் வளர்த்து அதன் பிறகு நிலத்தில் பயிரிடப்படுகிறது. இதுபோல் நகரங்களில் சிறிய இடத்தில் கூட வளர்க்கலாம். ஒரு பிரிமாட்டோ செடியில் 3 - 4 கிலோ கத்தரிக்காய் மற்றும் 2 - 3 கிலோ தக்காளிகள் வரை காய்க்கும் என, ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

Brimato: இதுதான் பிரிமெட்டோ..! ஒரே செடியில் காய்க்கும் கத்தரிக்காய்.. தக்காளி..!

இது குறித்து, ஐ.ஐ.வி.ஆர்., நிறுவன இயக்குனர் டாக்டர் பெஹேரா கூறியதாவது, "ஒரே தாவரத்தில் இருந்து இரண்டு விதமான காய்கறிகளை உற்பத்தி செய்யும் இந்த புதிய முறை, சராசரி செடி வளர்ப்பில் உள்ள சவால்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும். சிறிய இடங்களில் இந்த செடியை எளிதில் வளர்க்கலாம். இதற்கு முன்பு வரை, பழங்கள் மற்றும் பூக்களுடன் இந்த முறை நிறுத்திக் கொள்ளப்பட்டது. தற்போது, காய்கறி உற்பத்தியிலும் இது பின்பற்றப்படுகிறது. இதனால் செலவுகள் குறையும்; பயிர்களில் ரசாயன இருப்பும் குறையும்.இந்த பிரிமாட்டோ செடியின் விலை 45 ரூபாயாக நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல விதமான செடிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்." இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
"யோவ்.. பிஸ்தா பருப்பு" துணை முதலமைச்சரையே வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
"யோவ்.. பிஸ்தா பருப்பு" துணை முதலமைச்சரையே வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
சிவன் கோயிலில் நந்தி ஏன்  வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
TN Agri Budget 2025: யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
Patanjali: வெளிநாட்டிலும் ஆயுர்வேதத்தை பதஞ்சலி வளர்ப்பது எப்படி?
Patanjali: வெளிநாட்டிலும் ஆயுர்வேதத்தை பதஞ்சலி வளர்ப்பது எப்படி?
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
Embed widget