
Breaking LIVE: உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிப்பது ஆரிய மாடல்; எல்லோருக்குமானதுதான் திராவிட மாடல் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE

Background
சென்னையில் 117வது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. எனினும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதே விலையில் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 108 வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (செப்டம்பர் 15) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
MK Stalin Speech: உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிப்பது ஆரிய மாடல்; எல்லோருக்குமானதுதான் திராவிட மாடல் - முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin Speech: உயர்ந்தவர் தாழ்ந்தவர் என பிரிப்பது ஆரிய மாடல்; எல்லோருக்குமானதுதான் திராவிட மாடல் - முதலமைச்சர் ஸ்டாலின்
Roger Federer Retirement: ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்! நெகிழ்ச்சி பதிவு..
Roger Federer Retirement: ஓய்வை அறிவித்த டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்! நெகிழ்ச்சி பதிவு..
உக்ரைன் மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர இயலாது
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள், நம் நாட்டில் கல்வியைத் தொடர முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி மீண்டும் விசாரணை
சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் கடந்தமுறை அதிமுக அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இன்ஃப்ளுவன்சா வகை காய்ச்சலுக்கு 9 பேர் உயிரிழிழப்பு
காய்ச்சல் வரும் அனைவருக்கும் பாதிப்பு இல்லை. உரிய சிகிச்சை எடுத்தால் உயிர் இழப்பை தடுக்கலாம் - பொது சுகாதார இயக்குனர் செல்வ விநாயகம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

