Breaking News LIVE: மஹாராஷ்ட்ராவில் ஓபிசி சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி போராட்டம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Background
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளச்சாராய மரணங்கள் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து ஏற்பட்ட உடல்நலக்குறைவால் 100க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். இதில் 55 பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிலர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் உள்ள 200 பெண்களை தேர்வு செய்து ரூ. 1 லட்சம் மானியம் வழங்கும் பிங்க் ஆட்டோ திட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது, சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாகவும், பெண்களுக்கான சுய தொழில் வாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டுவதில், உரிமம் பெற்ற ஆர்வமுள்ள 200 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் - இந்தியா ஆகிய அணிகள் மோதுகின்றது. சூப்பர் 8 சுற்றுகள் நடந்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் ஆஸ்திரேலியாவில் டிஎல்எஸ் முறையில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இன்றைய ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்த முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சூப்பர் 8ல் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி அந்த வெற்றியை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் 100°Fக்கு மேல் வெயில் பதிவு!
தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் 100°Fக்கு மேல் வெயில் பதிவு!
மதுரை விமான நிலையம் - 102°F
ஈரோடு - 101°F
கடலூர் - 100°F
பரங்கிப்பேட்டை - 100°F
கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள் சந்தேகத்தை எழுப்புகின்றன - பீட்டர் அல்போன்ஸ்
"கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் சட்டசபை கூடும்போது ஏன் நடக்க வேண்டும்? நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களை வென்ற திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற திட்டமிடலோடு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டதோ என சந்தேகம் எழுந்திருக்கிறது" -பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர்





















