மேலும் அறிய
Breaking News LIVE: விஷச்சாராய மரணங்கள்: 24ம் தேதி ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Key Events

பிரேக்கிங் நியூஸ்
Background
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் எனவும் அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் மாவட்ட எஸ்.பி., மற்றும் மதுவிலக்குத்துறை போலீசார் ஆகியோர் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
20:26 PM (IST) • 20 Jun 2024
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் ஜெஜ்ரிவாலுக்கு ஜாமின்
Delhi excise policy case | Rouse Avenue court allows the bail application of CM Arvind Kejriwal and grants bail to him on a bail bond of Rs 1 lakh
— ANI (@ANI) June 20, 2024
(File photo) pic.twitter.com/kAsqVTYVtu
20:13 PM (IST) • 20 Jun 2024
"நீட் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் இல்லை" -ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
#WATCH | On UGC-NET exam cancellation, Union Education Minister Dharmendra Pradhan says, "...Paper leak is an institutional failure of NTA. We are assuring you that there will be a reform committee and action will be taken..." pic.twitter.com/zwBzqD2Eba
— ANI (@ANI) June 20, 2024
Load More
அனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement





















