மேலும் அறிய

நோயாளிகளை குணப்படுத்துகிறதா மியூசிக் தெரபி? விஞ்ஞான உலகை வியக்க வைக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

மூளை பக்கவாதத்தால் (brain stroke) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்திய இசையின் மூலம் பேச கற்றுக்கொடுக்க உள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

விஞ்ஞான உலகம், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தாமல் இருந்தது கிடையாது. மனித உலகை வியக்க வைக்கும் வகையில் அறிவியல் உலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நோயாளிகளை இசையின் மூலம் குணப்படுத்த எய்ம்ஸ் டெல்லி மற்றும் ஐஐடி டெல்லி ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். 

வியக்க வைக்கும் விஞ்ஞான உலகம்:

மூளை பக்கவாதத்தால் (brain stroke) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்திய இசையின் மூலம் பேச கற்றுக்கொடுக்க உள்ளார்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள். இசையின் மூலம் சிகிச்சையா (மியூசிக் தெரபி) என பலரும் வியந்து வருகின்றனர். மியூசிக் தெரபி என்றால் என்ன, நோயாளிகளை குணப்படுத்த அது எந்தளவுக்கு பயன்படுகிறது என்பதை எந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

மியூசிக் தெரபி குறித்து விரிவாக பேசியுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளரும் மருத்துவருமான தீப்தி விபா, "மூளை பக்கவாதத்திற்குப் பிறகு கேட்கும் மற்றும் பேசும் திறனை இழந்த நோயாளிகளுக்கு இசையின் மூலம் ஹம்மிங் மற்றும் பேசுவதைக் கற்றுக்கொடுக்க போகிறோம்.

இந்தியாவிலேயே முதன்முறையாக, அஃபாசியா கோளாறால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக இசையின் மூலம் சிகிச்சை அளிக்க ஆராய்ச்சி செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில், எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் துறை டெல்லி ஐஐடியின் உதவியை நாடி வருகிறது" என்றார்.

அஃபாசியா கோளாறு என்றால் என்ன?

மூளை பக்கவாதத்திற்குப் பிறகு, சுமார் 21 முதல் 38 சதவிகித நோயாளிகள் அஃபாசியாவால் பாதிக்கப்படுகின்றனர். அஃபாசியா நோயால் நோயாளியின் மூளையின் இடது பகுதி வேலை செய்யாமல் போய்விடுகிறது. மூளையின் இடது பகுதியால்தான் ஒருவர் பேசுகிறார். விஷயங்களைப் புரிந்துகொள்கிறார். மக்கள் முன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

அஃபாசியா கோளாறால் பாதிக்கப்பட்டவர், ஒரு சிறிய வார்த்தை கூட பேச முடியாது. இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, அஃபாசியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ம்ஸ் நரம்பியல் துறை  இசை மூலம் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் இத்தகைய நோயாளிகளுக்கு இசை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

நோயாளிகளை குணப்படுத்துகிறதா மியூசிக் தெரபி?

மியூசிக் தெரபி எப்படி அளிக்கப்படுகிறது என்பது குறித்து விவரித்துள்ள ஆராய்ச்சியாளர் தீப்தி விபா, "அஃபாசியா கோளாறால் நோயாளியின் மூளையின் இடது பகுதி வேலை செய்யாது. ஆனால் வலது பகுதி முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கும். 

இதன் காரணமாக இசையைப் புரிந்துகொள்வது மட்டுமல்லாமல், அதன் ட்யூனையும் முழுவதுமாக நோயாளியால் முணுமுணுக்க வைக்க முடியும். அஃபாசியாவால் பாதிக்கப்பட்டவர், "தண்ணீர்" என்ற வார்த்தயை கூட சொல்ல முடியாது. ஆனால், இசை மூலமான சிகிச்சை மூலம் முழு பாடலையும் முணுமுணுக்க செய்ய முடியும்" என்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
Embed widget