மேலும் அறிய

திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையா? நீதிமன்றம் பரபர

பாலியல் உறவு கொள்வதும் பெற்றோர் சம்மதிக்காததால் உறவை முறித்துக்கொண்டு திருமணம் செய்து கொள்ள மறுப்பதும் பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, பாலியல் உறவு கொள்வதும் பெற்றோர் சம்மதிக்காததால் உறவை முறித்துக்கொள்வதும் பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் ஏமாற்றப்பட்டாரா?

குற்றம்சாட்டப்பட்ட நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு, காதலித்து வந்த சமயத்தில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அந்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதும், அவர் திருமணம் செய்யப் போவதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, நாக்பூரில் உள்ள காவல்நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட நபரை வரவழைக்கப்பட்டபோது, ​​அவர் புகார்தாரரை திருமணம் செய்யத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அவர் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண், குற்றம்சாட்டப்பட்ட நபரின் தந்தையை சந்திக்கச் சென்றார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது மகனை திருமணம் செய்து வைப்பதில் விருப்பமில்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376(2)(n) கீழ் நாக்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து:

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க மறுத்த செஷன்ஸ் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுகும்படி தெரிவித்தது.

எனவே, வழக்கில் இருந்து விடுவிக்கும்படி குற்றம்சாட்டப்பட்ட நபர் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி M.W. சந்த்வானி, "திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணுடன் பாலியல் உறவில் கொண்டு, ஆனால், பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால் திருமணம் செய்து கொள்ள மறுத்த குற்றம்சாட்டப்பட்ட நபரை" விடுவிக்க உத்தரவிட்டார்.

"திருமணத்திற்கு பெற்றோர் ஒப்பு கொள்ளாத காரணத்தால் கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. இதனாலேயே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை) கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை மனுதாரர் (குற்றம்சாட்டப்பட்ட நபர்) செய்தார் என சொல்ல முடியாது.

சூழ்நிலை காரணமாக அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. என்ன நடக்கும் என்பதை குற்றம்சாட்டப்பட்ட நபர் ஊகிக்க முடியாது. அது, அவருக்கு அப்பாற்பட்ட விஷயம். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணை அவரால் திருமணம் செய்து முடியவில்லை.

திருமணம் செய்து கொள்ள பாதிக்கப்பட்ட பெண் தான் முதலில் மறுத்துள்ளார். வேறு ஒரு பையனை திருமணம் செய்து கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டவரிடம் தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்ட நபர், வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்தபோதுதான், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்" என நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget