மேலும் அறிய

காதல் உறவில் ஈடுபடும் சிறார்கள்... தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளதா..? மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து..!

பாலியல் தாக்குதல்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கவே போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாலியல் தாக்குதல்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் வகையில் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டம் குறித்து மும்பை உயர் நீதிமன்றம் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. 

அதாவது, பாலியல் தாக்குதல்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கவே போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் காதல் உறவிலோ அல்லது இருவரின் சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவில் ஈடுபடும் சிறார்களை தண்டிப்பதற்காக கொண்ட வரப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி:

22 வயது நபர் ஒருவர், மைனர் பெண் ஒருவரை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 363, 376 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு பிணை வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அனுஜா பிரபுதேசாய், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம், "பாதிக்கப்பட்ட டீன் ஏஜ் சிறுமி சம்பவம் நடந்துபோது போக்சோ சட்ட வரையறுத்தலின்படி குழந்தையாக இருந்தது உண்மையாக இருந்தாலும், சம்பவத்தின் போது குற்றம் சாட்டப்பட்டவரும் 22 வயது இளைஞராக இருந்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளிக்க வாக்குமூலத்தின்படி, இருவருக்கிடையே நடந்த உறவு சம்மதத்துடன் நடந்தது தெரியவந்துள்ளது. பிணை கேட்டு மனு தாக்கல் செய்த குற்றம்சாட்டப்பட்டவர் கடந்த 2021ஆம் ஆண்டு, பிப்ரவரி 17ஆம் தேதி முதல் காவலில் உள்ளார். 

மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து:

விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருப்பதை கருத்தில் கொண்டால், வழக்கின் விசாரணையும் உடனடியாக தொடங்க  வாய்ப்பில்லை. குற்றம்சாட்டப்பட்டவரை மேலும் காவலில் வைப்பது கடுமையான குற்றவாளிகளுடன் தொடர்பு கொள்ள வைக்கும். இது அவரது ஆர்வத்திற்கு தீங்கு விளைவிக்கும்" என தெரிவித்தது.

கடந்த 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், தனது மகள் வீடு திரும்பாததால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயால் அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் கண்டுபிடிக்கப்பட்டார். "கடந்த 2020ஆம் ஆண்டு, டிசம்பர் 27ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், தனது நண்பருடன் இரண்டு முதல் மூன்று நாட்கள் தங்கியிருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெற்றோருக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியதால், வீட்டுக்குத் திரும்ப பயத்தில் இருந்ததாகத் தெரிகிறது. அப்போது, ஒரு நாள் இரவு அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் அவரை ஒரு குறிப்பிட்ட கட்டிடம் ஒன்றின் மொட்டை மாடிக்கு வரச் சொல்லி இருக்கிறார். அவரை வற்புறுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்" என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Embed widget