மேலும் அறிய

Fingerprint Scanners: விரல்ரேகையை ஸ்கேன் செய்தாலே வரலாறு சிக்கிடும்! குற்றவாளிகளுக்கு செக் வைக்கும் கர்நாடக போலீஸ்!

Fingerprint Scanners: கைரேகையைக் கொண்டு சந்தேக நபர்களைக் கண்காணிக்கவும் குற்றங்களைத் தடுக்கவும் பெங்களூரு போலீஸார், புதிய முயற்சியை நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Fingerprint Scanners: சந்தேக நபர்களைக் கண்காணிக்கவும் குற்றங்களைத் தடுக்கவும் பெங்களூரு போலீஸார் கைரேகை ஸ்கேனர் சாதனம் மற்றும் MCCTNS செயலியைப் பயன்படுத்துகின்றனர். சந்தேக நபர்களின் கைரேகைகள் MCCTNS செயலியின் அடிப்படையில், அவர்களின் குற்றப் பின்னணியை அறிந்து கொள்ள முடியும். . கர்நாடக தலைநகரில் இந்த முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து காவல் நிலையங்களும் கைது செய்யப்பட்ட நபர்களின் கைரேகைகளை கைப்பற்றி சேமித்து வருகின்றது. 

கைரேகை போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்றவாளிகளை பிடிக்க பெங்களூரு நகர போலீசார் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் கைது செய்யப்பட்ட அனைவரின் கைரேகைகளையும் கைப்பற்றி சேமிக்க ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கைரேகைகள் மாநில காவல்துறைக்கு அனுப்பப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரவிருக்கிறது.  ஒரு நபரின் கைரேகையை MCCTNS செயலியில் ஸ்கேன் செய்தால், அதில், அவர் இதற்கு முன்னர் ஏதேனும் குற்றத்தில் ஈடுபட்டிருந்தால்,  உடனடியாக திரையில் குற்றத்தின் முழு விபரம் மற்றும் எவ்வளவு குற்றங்கள் என்பதுவரை தெரியவரும். இதற்காக மொபைல் கிரைம் மற்றும் கிரிமினல் டிராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம் ஆப் (MCCTNS) ஐ மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உருவாக்கியுள்ளனர். 

மேலும் கர்நாடக காவல் துறையினருக்கு கைரேகை ஸ்கேனர் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனால், போலீசார் சந்தேக நபரின் விரல்களை ஸ்கேன் செய்து, அவர்களின் விவரங்களை MCCTNS செயலி மூலம் சரிபார்க்கலாம். இதன் மூலம் காவல் துறை சந்தேகிக்கும் சந்தேக நபரின் அனைத்து குற்றப் பதிவுகளையும், கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களையும் அந்த கைரேகை ஸ்கேனர் திரையில் காண்பித்துவிடும். கைரேகை சரிபார்க்கப்பட்டதும், sசந்தேககிக்கப்படும் நபருக்கு குற்றப் பின்னணி இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காவலில் வைக்கலாம். கர்நாடக காவல் துறை கொண்டுவந்துள்ள இந்த புதிய நடைமுறையின் கீழ், இரவு 11 மணிக்கு மேல் சந்தேகத்திற்கிடமான முறையில் சாலையில் செல்பவர்களின் கைரேகைகளை போலீசார் ஸ்கேன் செய்து வருகின்றனர்.

இதன் மூலம் பிடிபடும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். இதில் இருந்து எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என்கிறார் பெங்களூரு நகர கிழக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் சுப்பிரமணியேஸ்வர ராவ். இந்நிலையில், நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்க மத்திய அரசு மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரித்துள்ளது. குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை கைது செய்யவும் உதவும் புதிய செயலியை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெங்களூரில் மக்கள் இரவு பகலாக உழைக்கிறார்கள். குறிப்பாக IT-BT மற்றும் MNC நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வெகுநேரம் வரை நகரத்தில் சுற்றித் திரிகின்றனர்.

இதை மூலதனமாக கொண்டு, இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் நபர்களை குற்றவாளிகள் வழிமறித்து மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுதவிர, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக நகரில் அதிகரித்து வருகின்றன. அதனால்தான் நகரங்களில் குற்றங்களைத் தடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் MCCTNS மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. MCCTNS செயலி பெங்களூர் காவல்துறைக்கு ஒரு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த செயலியை போலீசார் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர். நாட்டிலேயே கர்நாடகாவின் பெங்களூருவில் தான் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடிய விரைவில் நாடு முழுவதும் MCCTNS செயலியைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண்பது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget