![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Opposition Meet: பாட்னாவில் நடந்தது போட்டோ செஷன்; உங்களால் பாஜகவை எதுவும் செய்ய முடியாது - அமித் ஷா
Opposition Meet: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அதாவது ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை "புகைப்பட அமர்வு" என்று குறிப்பிட்டுள்ளார்.
![Opposition Meet: பாட்னாவில் நடந்தது போட்டோ செஷன்; உங்களால் பாஜகவை எதுவும் செய்ய முடியாது - அமித் ஷா Amit Shah In Public Rally Jammu Kashmir Opposition Unity Impossible Opposition Party Meeting Lok Sabha Election 2024 Opposition Meet: பாட்னாவில் நடந்தது போட்டோ செஷன்; உங்களால் பாஜகவை எதுவும் செய்ய முடியாது - அமித் ஷா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/08/7e3d60878592a77b2fe9228cc8af818a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அதாவது ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை "புகைப்பட அமர்வு" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களின் ஒற்றுமை கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றும் அடுத்த மக்களவைத் தேர்தலில் அவர்கள் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறினார்.
ஜம்முவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக சாடினார். ராகுல் காந்தி எல்லாவற்றையும் விமர்சிக்கும் பழக்கம் கொண்டவர் என்றார்.
பீகார் தலைநகரில் நடந்த எதிர்க்கட்சி கூட்டம் குறித்து அமித் ஷா கூறுகையில், "பாட்னாவில் போட்டோ செஷன் நடந்தது. பாஜக மற்றும் மோடிக்கு (2024ல்) சவால் விடுவோம் என்ற செய்தியை அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே மேடையில் அறிவித்துள்ளனர். இந்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், உங்கள் ஒற்றுமை கிட்டத்தட்ட சாத்தியமற்றது, அது உண்மையாக இருந்தாலும், 2024 இல் 300 க்கும் மேற்பட்ட இடங்களுடன் மோடி மீண்டும் ஆட்சி அமைக்க தயவுசெய்து மக்கள் முன் வாருங்கள்," என்று அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அமித் ஷா, "குறிப்பாக விண்வெளி, பாதுகாப்பு துறையில் நிறைய ஒப்பந்தங்கள் நடைபெற்று வருகின்றன. உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் இப்போது பிரதமரின் தலைமையில் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன" என்று கூறினார்.
ஒன்பது ஆண்டுகளில், 11வது இடத்தில் இருந்த இந்தியாவை உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார்.
ராகுல் காந்தியை கடுமையாக சாடிய அவர், “370வது சட்டப்பிரிவை ரத்து செய்தாலும், ராமர் கோவில் கட்டப்பட்டாலும், முத்தலாக் தடை செய்யப்பட்டாலும் சரி, ராகுல் காந்திக்கு விமர்சனம் செய்வது வழக்கம்” என கூறினார்.
2024ல் பிரதமர் பதவிக்கு மோடிக்கு எதிராக களமிறங்குவேன், ஆனால் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது மக்களுக்குத் தெரியும் ராகுல் காந்தி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தலைமை தாங்குகினர். இதில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. இதில், பாஜகவை வீழ்த்துவதற்கான முழு திட்டமும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில் முழுமையாக வகுக்கப்படும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)