மேலும் அறிய

பசுக்காவலர்கள் என்ற பெயரில் சக மனிதர்களைத் தாக்குபவர்கள் இந்துத்துவாவுக்கு எதிரானவர்கள் - ஆர்.எஸ்.எஸ் தலைவர்..!

இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்தினர் அனைவரும், இஸ்லாம் இங்கு அச்சுறுத்தலில் இருப்பதாக நினைக்கக்கூடாது என்றார்.

இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே டிஎன்ஏ தான். இந்துக்களும், முஸ்லிம்களும் வெவ்வேறு குழுவினர் இல்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.  

ஆர்எஸ்எஸ்ஸின் கிளை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் என்ற நிறுவனத்தின் சார்பில், ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் மோக பகவத் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சி இந்துஸ்தானியும் இந்துஸ்தானுமே பிரதானம் என்ற தலைப்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தி மீட்டிங்க் ஆஃப் மைண்ட்ஸ் (The Meeting of Minds: A Bridging Initiative ) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. டாக்டர் காஜா இஃப்திகார் அகமது இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இவர் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

காசியாபாத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில்  ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சிலிருந்து..

40,000 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் அனைவரும் ஒரே மூதாதையரின் வழிவந்தவர்கள் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்துக்களும், முஸ்லிம்களும் இரு வெவ்வேறு குழுவினர் அல்ல. இந்தியர்கள் அனைவருக்குமே ஒரே டிஎன்ஏ தான். இந்து முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில், ஏற்கெனவே அவர்கள் ஒன்றிணைந்துதான் உள்ளனர். இந்துக்களோ முஸ்லிம்களோ யாரும் தனித்தனியாக ஆதிக்கம் செலுத்த முடியாது. இந்தியர்களாக ஒன்றிணைந்து மட்டும்தான் ஓங்கிநிற்க முடியும். முஸ்லிம்கள் இந்தியாவில் வாழக்கூடாது என ஏதேனும் ஒரு இந்து கூறினால், அவர் இந்துவாகவே இருக்க முடியாது. பசு மாடு நிச்சயமாக ஒரு புனிதமான விலங்குதான். ஆனால், பசுக்காவலர்கள் என்ற பெயரில் சக மனிதர்களைத் தாக்குபவர்கள் இந்துத்துவா கொள்கைக்கு எதிரானவர்கள். அதேபோல், சில இடங்களில் பசுவதைக்கு எதிராக தாக்குதல் நடத்தியதாக போலியாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. சட்டம் அத்தகையோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்தினர் அனைவரும், இஸ்லாம் இங்கு அச்சுறுத்தலில் இருப்பதாக நினைக்கக் கூடாது. அவ்வாறாக ஒரு போலி கற்பிதம் உருவாக்கப்படுகிறது. அதில் இங்குள்ள முஸ்லிம்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. ஒற்றுமையின் அடிநாதம், தேசியவாதமாக இருக்க வேண்டும். நம் முன்னோர்களின் புனிதத்தன்மையை நாம் கொண்டாட வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் நாடு வளர்ச்சியடைவது சாத்தியமாகும்.  இந்து - முஸ்லிம் பிரச்சினைகளை தீர்ப்பது என்பது பேச்சுவார்த்தை மூலம்தான் முடியும். உங்கள் முன்னோர்களை இந்துக்கள் என அழைக்கவிரும்பாவிட்டால், இந்தியர்கள் என அழையுங்கள். ஆனால், வார்த்தைகள் மூலம் வேறுபாட்டை மறந்து, நாட்டுக்காக ஒன்றாக இணைந்து பணியாற்றுங்கள். இதை நான் ஏதோ அரசியல் ஆதாயத்துக்காக, வாக்குவங்கியை நிரப்புவதற்காக சொல்வதாக யாரும் திரிக்க வேண்டாம். இதற்கு முன்னர்கூட நான் தர் உல உலூம் காஜிக்களை சந்தித்துப் பேசியிருக்கிறேன். இஸ்லாமியர்கள் ஆதரித்துப் பேசுவதால் சுயபிம்பத்தை கட்டமைக்க முயற்சிக்கும் எண்ணம் எனக்கோ நான் சார்ந்துள்ள இயக்கத்தைச் சேர்ந்த எவருக்குமோ இருந்ததே இல்லை.

உத்தரப் பிரதேச மாநிலம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக கடும் பிரயத்தனம் செய்துவருகிறது. அண்மையில், நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான வெற்றியைப் பெற்றது. இதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் கிராமப்புறங்களிலும் தங்களை நிரூபிக்கமுடியும் என பாஜக நம்புகிறது. இச்சூழலில் ஆர்எஸ்எஸ் தலைவரின் இந்தப் பேச்சு, வாக்குவங்கி அரசியலே என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. 

தலைப்பு செய்திகள்

கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Entry Level Cars: எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Embed widget