மேலும் அறிய

அகமதாபாத்தில் பறிபோன 274 உயிர்கள்.. விமானி பற்றி லீக்கான புது தகவல் - இதுதான் அது

அகமதாபாத்தில் வெடித்துச் சிதறிய விமானத்தை ஓட்டிய விமானி கிளிவ் குந்தர் பற்றி அவரது ஆசிரியை ஊர்வசி புது தகவலை கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என 242 பேர் பயணித்த விமானத்தில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் 241 பேர் உயிரிழந்த நிலையில், விமானம் மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில் மாணவர்கள், பொதுமக்கள் என 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், 274 பேர் இந்த கோர விபத்தில் உயிரிழந்தனர்.

அகமதாபாத் விமான விபத்து:

ஏர் இந்தியாவின் 171 ரக போயிங் விமானத்தில் பயணித்த அனைவரின் உயிரும் நொடிப்பொழுதில் பறிபோனது. இந்த நிலையில், இந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. 

இந்த விமானத்தை 8 ஆயிரத்து 200 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்ட கேப்டன் சுமித் சபர்வாலும், அவரது உதவி விமானியாக 1100 மணி நேரம் விமானம் ஓட்டிய ஃபர்ஸ்ட் ஆபீசர் கிளிவ் குந்தரும் ஓட்டிச்சென்றனர். விமானி கிளிவ் குந்தர் குறித்து அவரது ஆசிரியை ஊர்வசி கூறியதாவது, 

ஒழுக்கமானவர்:

கிளிவ் குந்தவர் உயிரிழந்தது குறித்து அவரது வகுப்பு நண்பர்களில் ஒருவர் கூறிதான் எனக்குத் தெரிந்தது. இதைப் பற்றி கேள்விபட்டதும் எனது இதயமே உடைந்துவிட்டது. இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. கிளிவ் குந்தர் நல்ல அழகான திறமையான இளைஞன். நல்ல ஒழுக்கமான, புத்திசாலியான இளைஞன். கிளிவ் மகிழ்ச்சியான  அழகான வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டார். எனக்கு இது மிக மிக கடினமாக இருக்கிறது. அவர் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இவ்வாறு அவர் கூறினார். 

நாடே சோகம்:

ஆசிரியை ஊர்வசி கிளிவ் குந்தருக்கு 11 மற்றும் 12ம் வகுப்பில் இயற்பியல் பாட ஆசிரியையாக இருந்தவர். இந்த விமான விபத்தில் பயணிகளுடன் விமானக் குழுவினர் அனைவரும் உயிரிழந்தனர். டெல்லியில் இருந்து அகமபாதாத்திற்கு வந்த விமானம், அங்கிருந்து லண்டனுக்கு புறப்பட்ட சில நொடிகளில் வெடித்து சிதறியது அனைவரையும் கதிகலங்க வைத்தது. 

முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்பட பலரும் இந்த விபத்தில் தீக்கிரையானார்கள். ஒரே ஒரு நபர் மட்டும் அவசர கால கதவு வாயிலாக கீழே குதித்து உயிர் பிழைத்தார். இந்த விமான விபத்து குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்ன காரணம்? யாருடைய தவறால் இந்த விபத்து ஏற்பட்டது? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

கிளிவ் குந்தரின் தந்தை கிளிஃபோர்ட் குந்தர் மால்பேவைச் சார்ந்தவர். அவர் படகில் பணிபுரிந்து வந்தார். அவரது தாய் ரேகா மங்களூரைச் சேர்ந்தவர். அவர் ஏர் இந்தியா விமானப் பணிப்பெண் குழுவில் பணியாற்றியவர். கிளிவ் மும்பையில் படித்து வளர்ந்தவர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: சட்டமன்ற தேர்தல் தேதி.. விமான சேவைகள் குறைப்பு..11 மணி நிகழ்வுகள் இதோ!
Top 10 News Headlines: சட்டமன்ற தேர்தல் தேதி.. விமான சேவைகள் குறைப்பு..11 மணி நிகழ்வுகள் இதோ!
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
மதுரை மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியது.. மீனாட்சியம்மன் கோயில் வாசலில் மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி !
மதுரை மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியது.. மீனாட்சியம்மன் கோயில் வாசலில் மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி !
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election code of conduct : ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல்.! இன்று மாலை முதல் அமல்- பொதுமக்களே அலர்ட்
TN ELECTION DATE : தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகமே ரெடியா.!! இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது தேர்தல் தேதி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
ரீல்ஸ் மோகம்; மாணவர்களை முதல்வரே பாராட்டுவதா? தவறான முன்னுதாரணம்- விளாசிய ராமதாஸ்!
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
உதவிப் பேராசிரியர் நியமனம்: அதிகாரியின் அரைகுறை புரிதலால் அரசுப்பணியே இல்லையா? எழும் கேள்விகள்
Caretaker Government : இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
இன்று மாலையோடு அதிகாரத்தை இழக்கும் திமுக அரசு.! இனி காபந்து அரசு தான் - அப்படி என்றால் என்ன.?
Vijay in AIADMK alliance : ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
ஓகே சொல்வாரா விஜய்.? தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல் காத்திருக்கும் இபிஎஸ்- திடீர் திருப்பம் ஏற்படுமா.?
TNEB Salary Hike : அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
அடிதூள்.! மின்வாரிய ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- உயர்ந்தது ஊதியம் எவ்வளவு தெரியுமா.?
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
தொடரும் அதிர்ச்சி.. விஷம் வைத்து 100 நாய்கள் கொலை.. 3 மாதத்தில் மட்டும் 1300 நாய்கள்!
Embed widget