மேலும் அறிய

75 வருட சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மின்சாரம் பெறும் கிராமம் இது; மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தும் மக்கள்..

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

மின்சாரம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதிலும், குறிப்பாக அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றபடி மனிதர்களது வாழவினை அமைத்துக் கொள்ள மின்சாரம் அடிப்படையாக உள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவின் பெரும்பான்மை பகுதி 5ஜி நெட்வொர்க்கிற்கு தயாராகிக்கொண்டு இருக்கையில், ஒரு கிராமத்திற்கு இப்போது தான் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்ற நிலையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தூரு பிளாக்கில் உள்ள டெத்தனில்  பழங்குடியினர்  வசிக்கும் ஒரு குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு மின் இணைப்பு இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. நகரத்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள கிராமத்திற்கு மத்திய அரசு வழங்கும் பிரதமர் மேம்பாட்டுத் தொகுப்பு திட்டத்தின் கீழ் தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

அனந்த்நாக் மலையில் அமைந்துள்ள டெதன் கிராமத்தில் சுதந்திரம் பெற்று  75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக முதல் மின் விளக்கு எரிந்ததால் அந்த குக்கிராமத்தில் வசிப்பவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த 75 ஆண்டுகளாக, இந்த கிராம மக்கள் தங்கள்  தேவைக்காக  மரத்துண்டுகளையே  நம்பியிருக்க வேண்டி இருந்தது. இதோடு எண்ணெய் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த கிராமத்தினைச் சேர்ந்த ஃபசுல்-உ-தின் கான் கூறுகையில், "இன்று முதல் முறையாக மின்சாரத்தைப் பார்த்தோம். எங்கள் குழந்தைகள் இப்போது மின்சார வெளிச்சத்தில் படிப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மின்சாரம் இல்லாததால் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதுவரை எங்களின்  தேவைகளுக்கு  மரத்தையே நம்பியிருந்தோம். தற்போது எங்களது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மின்சாரம் வழங்கியதற்காக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் கூறினார். 

மற்றொரு கிராமவாசி  ஜாஃபர் கான் என்பவர் கூறுகையில், "எனக்கு 60 வயதாகிறது. இன்று தான்  முதல் முறையாக மின்சாரத்தைப் பார்த்தேன். எல்.ஜி. சஹாப் மற்றும் டி.சி. சஹாப் ஆகியோருக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். மின்சாரத் துறைக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். முந்தைய தலைமுறையினரால் முடியவில்லை. மின்மயமாக்கலின் அதிசயத்தைப் பாருங்கள், இன்று அரசாங்கம் மின்சாரம் வழங்கியது எங்களுக்கு அதிர்ஷ்டம்" என அவர் கூறினார்.

மின்சாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அயராத முயற்சியால், அனந்த்நாக் நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தக் கிராமத்துக்கு மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: விரைவு நடவடிக்கை மூலம் கிராமத்திற்கு மின்சாரம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அனந்த்நாக் மின் மேம்பாட்டுத் துறையின் தொழில்நுட்ப அதிகாரி ஃபயாஸ் அஹ்மத் சோஃபி ANI இடம் கூறுகையில், "நாங்கள் 2022-ல் நெட்வொர்க்கிங் செயல்முறையைத் தொடங்கினோம். ஆனால் உயர் அழுத்தக் கம்பியைத் இணைப்பதில் சிக்கல் இருந்தது. ஆனால் இன்று இந்த தொலைதூர பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு 63 (KV) டிரான்ஸ்ஃபார்மர் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மின்சாரத்தைப் பார்த்துள்ளனர், இதுவே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த கிராமத்தில் ஒரு டிரான்ஸ்ஃபார்மர், 38 உயர் அழுத்தக் கம்பங்கள் மற்றும் 57 மின்சாரக் கம்பங்கள் (மொத்தம் 95 மின்கம்பங்கள்) நிறுவப்பட்டு, 60 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, எனவும் அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஸ்பேம் கால்களுக்கு செக்.. டிராய் எடுத்த அதிரடி நடவடிக்கை! முழு விவரம்
ஸ்பேம் கால்களுக்கு செக்.. டிராய் எடுத்த அதிரடி நடவடிக்கை! முழு விவரம்
Bengaluru power cut: பெங்களூருவில் மின் தடைக்கு முற்றுப்புள்ளி! மாணவர்களுக்காக பெஸ்கமின் அதிரடி முடிவு!
Bengaluru power cut: பெங்களூருவில் மின் தடைக்கு முற்றுப்புள்ளி! மாணவர்களுக்காக பெஸ்கமின் அதிரடி முடிவு!
சபரிமலை: 2026-ல் இறுதி தீர்ப்பு! பெண்களின் தரிசனம் குறித்த கேரள அரசின் திடீர் முடிவு! பரபரப்பு!
சபரிமலை: 2026-ல் இறுதி தீர்ப்பு! பெண்களின் தரிசனம் குறித்த கேரள அரசின் திடீர் முடிவு! பரபரப்பு!
Top 10 News Headlines: சரிந்த தங்கம் விலை, இந்தியாவில் X அதிரடி, ஈரான் பகிரங்க மிரட்டல், ட்ரம்ப்பை எச்சரித்த பென்டகன் - 11 மணி செய்திகள்
சரிந்த தங்கம் விலை, இந்தியாவில் X அதிரடி, ஈரான் பகிரங்க மிரட்டல், ட்ரம்ப்பை எச்சரித்த பென்டகன் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget