மேலும் அறிய

75 வருட சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மின்சாரம் பெறும் கிராமம் இது; மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தும் மக்கள்..

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு கிராமத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

மின்சாரம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதிலும், குறிப்பாக அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றபடி மனிதர்களது வாழவினை அமைத்துக் கொள்ள மின்சாரம் அடிப்படையாக உள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவின் பெரும்பான்மை பகுதி 5ஜி நெட்வொர்க்கிற்கு தயாராகிக்கொண்டு இருக்கையில், ஒரு கிராமத்திற்கு இப்போது தான் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்ற நிலையையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. 

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தூரு பிளாக்கில் உள்ள டெத்தனில்  பழங்குடியினர்  வசிக்கும் ஒரு குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு மின் இணைப்பு இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. நகரத்தில் இருந்து தொலைதூரத்தில் உள்ள கிராமத்திற்கு மத்திய அரசு வழங்கும் பிரதமர் மேம்பாட்டுத் தொகுப்பு திட்டத்தின் கீழ் தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

அனந்த்நாக் மலையில் அமைந்துள்ள டெதன் கிராமத்தில் சுதந்திரம் பெற்று  75 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக முதல் மின் விளக்கு எரிந்ததால் அந்த குக்கிராமத்தில் வசிப்பவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த 75 ஆண்டுகளாக, இந்த கிராம மக்கள் தங்கள்  தேவைக்காக  மரத்துண்டுகளையே  நம்பியிருக்க வேண்டி இருந்தது. இதோடு எண்ணெய் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து அந்த கிராமத்தினைச் சேர்ந்த ஃபசுல்-உ-தின் கான் கூறுகையில், "இன்று முதல் முறையாக மின்சாரத்தைப் பார்த்தோம். எங்கள் குழந்தைகள் இப்போது மின்சார வெளிச்சத்தில் படிப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மின்சாரம் இல்லாததால் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதுவரை எங்களின்  தேவைகளுக்கு  மரத்தையே நம்பியிருந்தோம். தற்போது எங்களது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன. மின்சாரம் வழங்கியதற்காக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் கூறினார். 

மற்றொரு கிராமவாசி  ஜாஃபர் கான் என்பவர் கூறுகையில், "எனக்கு 60 வயதாகிறது. இன்று தான்  முதல் முறையாக மின்சாரத்தைப் பார்த்தேன். எல்.ஜி. சஹாப் மற்றும் டி.சி. சஹாப் ஆகியோருக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். மின்சாரத் துறைக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். முந்தைய தலைமுறையினரால் முடியவில்லை. மின்மயமாக்கலின் அதிசயத்தைப் பாருங்கள், இன்று அரசாங்கம் மின்சாரம் வழங்கியது எங்களுக்கு அதிர்ஷ்டம்" என அவர் கூறினார்.

மின்சாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அயராத முயற்சியால், அனந்த்நாக் நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தக் கிராமத்துக்கு மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: விரைவு நடவடிக்கை மூலம் கிராமத்திற்கு மின்சாரம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அனந்த்நாக் மின் மேம்பாட்டுத் துறையின் தொழில்நுட்ப அதிகாரி ஃபயாஸ் அஹ்மத் சோஃபி ANI இடம் கூறுகையில், "நாங்கள் 2022-ல் நெட்வொர்க்கிங் செயல்முறையைத் தொடங்கினோம். ஆனால் உயர் அழுத்தக் கம்பியைத் இணைப்பதில் சிக்கல் இருந்தது. ஆனால் இன்று இந்த தொலைதூர பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு 63 (KV) டிரான்ஸ்ஃபார்மர் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் 75 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மின்சாரத்தைப் பார்த்துள்ளனர், இதுவே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த கிராமத்தில் ஒரு டிரான்ஸ்ஃபார்மர், 38 உயர் அழுத்தக் கம்பங்கள் மற்றும் 57 மின்சாரக் கம்பங்கள் (மொத்தம் 95 மின்கம்பங்கள்) நிறுவப்பட்டு, 60 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது, எனவும் அவர் கூறினார்.

தலைப்பு செய்திகள்

2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
டெட் தேர்வு அறிவிப்பு தாமதம்: லட்சக்கணக்கான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறி! காரணம் என்ன?
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget