மேலும் அறிய

கேரளா: அன்னாச்சி பழத்தில் வெடிவைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கு... 1.5 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் திருப்பம்

யானை மரணம் தொடர்பான விசாரணையின்போது அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளுக்காக அன்னாச்சிப் பழத்தினுள் வெடிவைத்தது தெரிய வந்தது.

கேரளாவில் அன்னாச்சி பழத்துக்குள் வெடிவைத்து அதை உட்கொண்டதால் கர்ப்பிணி யானை கடந்த 2020-ஆம் ஆண்டு மே  மாதம் உயிரிழந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

இரண்டு வாரங்களாக வாய், தும்பிக்கை பகுதிகளில் காயத்தோடு அந்த யானை சுற்றித்திரிந்தது. 15 வயதான அந்த யானை காயம் காரணமாக பல நாட்களாகவே எதையும் சாப்பிட முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மூன்று நாட்களாக நீருக்குள்ளேயே இருந்தவாறு நின்றபடியே உயிரிழந்தது. பின்னர் அதன் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போதுதான் அந்த யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.  இந்நிலையில்  யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து இந்த கொடூர மரணம் பரவலான கவனத்தைப் பெற்றது. அப்போது காயமுற்று நிலையில் இருக்கும் யானையின் புகைப்படங்களும் வைரலாகின. திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் யானைக்காக குரலெழுப்பினர்.

இதையும் படிக்க

‛வசைபாடி வாங்கிய வாய்ப்பு... வருவாய் ஈட்டுவதில் ஏய்ப்பு...’ யார் இந்த விஜயபாஸ்கர்?

முன்னதாக சர்வதேச ஹியூமேன் சொசைட்டி (The Humane Society International) எனும் தொண்டு நிறுவனம் யானையின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50,000 பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. மேலும் பல்வேறு தரப்பினரும் இது தொடர்பான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.


கேரளா: அன்னாச்சி பழத்தில் வெடிவைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கு... 1.5 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் திருப்பம்

அப்போது இது குறித்த விசாரணை தீவிரமெடுத்தது. இதுகுறித்த விசாரணையின்போது வயல்வெளியினுள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக அங்கிருந்தவர்கள் அன்னாச்சிப் பழத்தினுள் வெடிவைத்தது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ரியாசுதீன் மற்றும் அவரது தந்தை அப்துல் கரீம் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் 2வதாக குற்றம்சாட்டப்பட்ட ரியாசுதீன் பாலக்காட்டில் உள்ள நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆஜரானார். அப்துல் கரீம் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் முதலாவது குற்றவாளியைத் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget