மேலும் அறிய

கேரளா: அன்னாச்சி பழத்தில் வெடிவைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கு... 1.5 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் திருப்பம்

யானை மரணம் தொடர்பான விசாரணையின்போது அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளுக்காக அன்னாச்சிப் பழத்தினுள் வெடிவைத்தது தெரிய வந்தது.

கேரளாவில் அன்னாச்சி பழத்துக்குள் வெடிவைத்து அதை உட்கொண்டதால் கர்ப்பிணி யானை கடந்த 2020-ஆம் ஆண்டு மே  மாதம் உயிரிழந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

இரண்டு வாரங்களாக வாய், தும்பிக்கை பகுதிகளில் காயத்தோடு அந்த யானை சுற்றித்திரிந்தது. 15 வயதான அந்த யானை காயம் காரணமாக பல நாட்களாகவே எதையும் சாப்பிட முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மூன்று நாட்களாக நீருக்குள்ளேயே இருந்தவாறு நின்றபடியே உயிரிழந்தது. பின்னர் அதன் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போதுதான் அந்த யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.  இந்நிலையில்  யானையின் இறப்புக்கான காரணத்தை மலப்புரம் மாவட்ட வன அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து இந்த கொடூர மரணம் பரவலான கவனத்தைப் பெற்றது. அப்போது காயமுற்று நிலையில் இருக்கும் யானையின் புகைப்படங்களும் வைரலாகின. திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் யானைக்காக குரலெழுப்பினர்.

இதையும் படிக்க

‛வசைபாடி வாங்கிய வாய்ப்பு... வருவாய் ஈட்டுவதில் ஏய்ப்பு...’ யார் இந்த விஜயபாஸ்கர்?

முன்னதாக சர்வதேச ஹியூமேன் சொசைட்டி (The Humane Society International) எனும் தொண்டு நிறுவனம் யானையின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50,000 பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. மேலும் பல்வேறு தரப்பினரும் இது தொடர்பான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.


கேரளா: அன்னாச்சி பழத்தில் வெடிவைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கு... 1.5 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் திருப்பம்

அப்போது இது குறித்த விசாரணை தீவிரமெடுத்தது. இதுகுறித்த விசாரணையின்போது வயல்வெளியினுள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக அங்கிருந்தவர்கள் அன்னாச்சிப் பழத்தினுள் வெடிவைத்தது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ரியாசுதீன் மற்றும் அவரது தந்தை அப்துல் கரீம் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் 2வதாக குற்றம்சாட்டப்பட்ட ரியாசுதீன் பாலக்காட்டில் உள்ள நீதிமன்றத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆஜரானார். அப்துல் கரீம் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் முதலாவது குற்றவாளியைத் தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Indian 2 Trailer: இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
இந்தியன் 2 ட்ரெய்லர் இன்று ரிலீஸ்.. எத்தனை மணிக்கு தெரியுமா? - அப்டேட் விட்ட லைகா!
Embed widget