மேலும் அறிய

ABP Nadu Impact: ஏபிபி நாடு செய்தி எதிரொலி... தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணிகள் தீவிரம்..!

மன்னார் வளைகுடா உயிர்க்கோள பகுதியிலேயே கழிவுகள் கலப்பதை மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக தடுக்க வேண்டும்

வடகிழக்கு பருவமழை காலத்தின் போது தூத்துக்குடியில் பெய்த மழையின் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிபராசக்தி நகர்,தபால் தந்தி காலனி, ராஜீவ் நகர், முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளை மழை நீர் சூழ்ந்து நின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் இருந்தது. இதற்கு காரணமாக பக்கிள் ஓடையை தூர்வாரததும் தான் காரணம் சொல்லப்பட்டது. கடந்தாண்டு வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக பக்கிள் ஓடை தூர்வாரப்பட்டது. ஆனாலும் மழை பொய்த்து போனதால் பாதிப்பு ஏற்படவில்லை.



ABP Nadu Impact: ஏபிபி நாடு செய்தி எதிரொலி... தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணிகள் தீவிரம்..!

ஏபிபி நாடு செய்தி எதிரொலி:

இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இன்னும் ஒரு மாத காலத்தில் துவங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கிய மழை நீர் வடிகாலான பக்கிள் ஓடையை ஆக்கிரமித்து உள்ள நாணல்களும், ஆகாயத்தாமரைகளும், குப்பைகளும் அடர்ந்து கிடக்கின்றன. இது குறித்து ஏபிபி நாடு செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பக்கிள் ஓடையை சுத்தம் செய்யும் பணியை துவங்கி வைத்து பார்வையிட்டார். அவருடன் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார்,மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


ABP Nadu Impact: ஏபிபி நாடு செய்தி எதிரொலி... தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணிகள் தீவிரம்..!

ஓடை தூர்வாரும் பணி தீவிரம்:

வடகிழக்கு பருவமழையின் போது தண்ணீர் சீராக செல்லும் வகையில் மூணாவது மைலிலிருந்து திரேஸ்புரம் கடற்கரை பாலம் வரையிலான ஆறு கிலோமீட்டர் தூரம் வரை பக்கிள் ஓடையில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் குப்பைகளை அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தொடர்ச்சியாக ஒரு மாத காலம் நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்கிள் ஓடையில் பிளாஸ்டிக் கவர்கள் கேரி பைகள் அதிக அளவு கிடக்கின்றன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் கேரி பைகள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை வீடு தேடி குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை பிரித்துக் கொடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


ABP Nadu Impact: ஏபிபி நாடு செய்தி எதிரொலி... தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணிகள் தீவிரம்..!

அதே நேரத்தில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பாலம் பகுதியில் மாநகரின் ஒட்டுமொத்த கழிவு நீர் ஒடையான பக்கிள் ஓடையின் மொத்தக் கழிவுகளும் கடற்கரை பகுதியில் கலப்பதால் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் கடல் நீர் கருமை நிறமாக காட்சியளிக்க கூடிய சூழல் உள்ளது. மேலும் இப்பகுதியில் சிறிய வகை நாட்டு படகுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் இந்த கழிவு நீரில் இறங்கி தான் படகில் ஏறி தான் மீன் பிடிக்க செல்ல வேண்டிய நிலை உள்ளது.


ABP Nadu Impact: ஏபிபி நாடு செய்தி எதிரொலி... தூத்துக்குடியில் ஓடை தூர்வாரும் பணிகள் தீவிரம்..!

மீனவர்கள் வேதனை:

தூத்துக்குடி நகரில் ஒட்டுமொத்த கழிவுகள் ஆங்காங்கே அகற்றப்பட்டாலும் கூட கடலில் கலப்பதை முற்றிலுமாக தடுக்கவில்லை என கூறும் மீனவர்கள் கடலில் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்க்கூறும் மீனவர்கள், கடலில் கழிவுகள் கலப்பதால் கடல்வாழ் உயிரினங்கள் அழியும் சூழல் உள்ளது. மேலும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள பகுதியிலேயே கழிவுகள் கலப்பதை மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக தடுக்க வேண்டும் என்கின்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget