மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 5000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின

’’குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீட்டை தமிழ்நாடு அரசு அறிவிக்காத நிலையில் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை’’

தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து நேற்று மற்றும் இன்றும் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து சிறு தூரலாக மழை மாலை முதலே பெய்து கொண்டே இருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 5000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
 
குறிப்பாக திருவாரூர் சுற்றுவட்டார பகுதியில் 3 சென்டி மீட்டர் மழையும், மன்னார்குடி பகுதியில் 7 சென்டி மீட்டர் மழையும், முத்துப்பேட்டை பகுதியில் 6 சென்டி மீட்டர் மழையும், திருத்துறைப்பூண்டி பகுதியில் 4 சென்டி மீட்டர் மழையும் கொட்டி தீர்த்தது. இந்த கனமழையின் காரணமாக சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் ஒருபுறம் குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று பெய்த தொடர் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மாவூர், கச்சனம், கொரடாச்சேரி, குடவாசல், கோட்டூர், விக்கிரபாண்டியம், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 5000 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
 
ஏற்கனவே நடப்பாண்டில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஆறுகளிலும் தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் குறுவை நெற்பயிரில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைப்பது சிரமம் என விவசாயிகள் கருதுகின்றனர். பயிர் காப்பீடு இல்லாத சூழலில் தங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். உடனடியாக மாவட்ட வருவாய்த் துறையும், வேளாண் துறையும் மழைநீர் தேங்கி உள்ள வயல்களை ஆய்வு செய்து உரிய கணக்கெடுப்பு நடத்தி நெற்பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண இழப்பீடு தொகையை வழங்க வேண்டுமெனவும் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

அனைத்தும் தனியார்மயமா? - தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
அனைத்தும் தனியார்மயமா? - தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
மணி என பெயர் வைத்துள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படமாக இருக்கும் - வதந்தி 2 சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சசிகுமார் !
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Embed widget