மேலும் அறிய

ஆடிப்பெருக்கு விழா: திரௌபதி அம்மன் கோவிலில் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

திரௌபதி அம்மன் கோவிலில் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, தருமபுரி அருகே பதினெட்டாம் போர்களம் நாடகத்தினை தத்தரூபமாக நடித்த கலைஞர்கள்-திரௌபதி அம்மன் கோவிலில் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
ஆடிப்பெருக்கு விழா: திரௌபதி அம்மன் கோவிலில் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

 

தருமபுரி மாவட்டத்தில் ஆடி பதினெட்டு தினத்தில் ஆடிப் பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் புதுமண தம்பதிகள் காவிரி ஆறு, தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் புனித நீராடி தாலி நான்களை பிரித்து கோர்த்து சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள். அதே போல் கிராமப் புறங்களில் உள்ள கோவில் தெய்வங்களை, புது வெள்ளம் ஓடுகின்ற ஆற்றங்கரைக்கு கொண்டு வந்து, புனித நீராட வைத்து பூஜை செய்து வழிபடுவதும், பாரம்பரிய தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழாக்கள் வழக்கம். அதேப்போல் ஆடி பதினெட்டாம் நாள் மகாபாரத போரில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடைபெற்ற யுத்தத்தில் கௌரவர்களை வீழ்த்தி பாண்டவர்கள் வெற்றி பெற்ற தினமாக கொண்டாடுகின்றனர். 

 இதனை நினைவுகூறும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆடி ஒன்று முதல் 18ஆம் தேதி வரை தினமும் பாரதம்  நடைபெறும். 

இதில் பதினெட்டாம் நாள் பாரதத்தில் பதினெட்டாம் போர் களம் தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.  தருமபுரி அடுத்த அன்னசாகரம் பகுதியில் பதினெட்டாம் போர்களம் தெருக்கூத்து நாடகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை துரியோதனன், பீமன், கிருஷ்ணர் வேடமணிந்த தெருக்கூத்து கலைஞர்கள் ஊர் முழுவதும் சுற்றி வந்து ஊரின் மையப் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு முன்பாக வந்தனர்.

 அங்கு துரியோதனன் உருவத்தை மண்ணால் செய்திருந்தனர். அங்கு திரௌபதி, கிருஷ்ணர், பீமன், நகுலன் உள்ளிட்ட சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு மகாபாரத காட்சிகளை தத்ரூபமாக நடித்து காட்டினர்.  அதில் பீமன் துரியோதனனை தனது ஆயுதத்தால் வீழ்த்தி துரியோதனனின் ரத்தத்தை எடுத்து திரௌபதியின் கூந்தலில் தடவி சபதத்தை முடிக்கும் காட்சியினை தத்ரூபமாக நடித்துக் காட்டினர். 

இதனை அடுத்து சுவாமி கங்கை பூஜைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுவாமிக்கு புனித அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்பாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் சாமியுடன் பக்தர்கள் பூ மிதித்தனர்.

  இந்த ஆடிப் பெருக்கு விழாவில், தருமபுரி, அன்னசாகரம், ஏ.கொல்லஹள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒரு சில கிராமங்களில் பதினெட்டாம் போர் களம் முடித்து ஆடிப் பெருக்கு விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது. 

இது போன்ற மகாபாரதப் போர் நாடகங்கள் நடத்துவதினால்  நல்ல மழை பெருகும் ஊர் செழிக்கும் உலக மக்கள் செழிப்பாக இருப்பார்கள் என்பது ஐதீகம். 

இந்த தெருக்கூத்து நாடகத்தை சிறியவர்கள் பெரியவர்கள் பொதுமக்கள் என அனைவரும் ஆர்வம் காட்டி பார்த்து ரசிக்கின்றனர். 18 நாட்கள் நடைபெறும் இந்த தெருக்கூத்து நாடகம் ஆடிப்பெருக்கு நாட்களில் மட்டும் சிறப்பாக நடைபெறும். 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sara Tendulkar Video: அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sara Tendulkar Video: அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
Embed widget