மேலும் அறிய

ஆடிப்பெருக்கு விழா: திரௌபதி அம்மன் கோவிலில் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

திரௌபதி அம்மன் கோவிலில் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, தருமபுரி அருகே பதினெட்டாம் போர்களம் நாடகத்தினை தத்தரூபமாக நடித்த கலைஞர்கள்-திரௌபதி அம்மன் கோவிலில் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
ஆடிப்பெருக்கு விழா: திரௌபதி அம்மன் கோவிலில் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

 

தருமபுரி மாவட்டத்தில் ஆடி பதினெட்டு தினத்தில் ஆடிப் பெருக்கு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் புதுமண தம்பதிகள் காவிரி ஆறு, தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் புனித நீராடி தாலி நான்களை பிரித்து கோர்த்து சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள். அதே போல் கிராமப் புறங்களில் உள்ள கோவில் தெய்வங்களை, புது வெள்ளம் ஓடுகின்ற ஆற்றங்கரைக்கு கொண்டு வந்து, புனித நீராட வைத்து பூஜை செய்து வழிபடுவதும், பாரம்பரிய தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழாக்கள் வழக்கம். அதேப்போல் ஆடி பதினெட்டாம் நாள் மகாபாரத போரில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடைபெற்ற யுத்தத்தில் கௌரவர்களை வீழ்த்தி பாண்டவர்கள் வெற்றி பெற்ற தினமாக கொண்டாடுகின்றனர். 

 இதனை நினைவுகூறும் வகையில் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆடி ஒன்று முதல் 18ஆம் தேதி வரை தினமும் பாரதம்  நடைபெறும். 

இதில் பதினெட்டாம் நாள் பாரதத்தில் பதினெட்டாம் போர் களம் தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.  தருமபுரி அடுத்த அன்னசாகரம் பகுதியில் பதினெட்டாம் போர்களம் தெருக்கூத்து நாடகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை துரியோதனன், பீமன், கிருஷ்ணர் வேடமணிந்த தெருக்கூத்து கலைஞர்கள் ஊர் முழுவதும் சுற்றி வந்து ஊரின் மையப் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு முன்பாக வந்தனர்.

 அங்கு துரியோதனன் உருவத்தை மண்ணால் செய்திருந்தனர். அங்கு திரௌபதி, கிருஷ்ணர், பீமன், நகுலன் உள்ளிட்ட சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு மகாபாரத காட்சிகளை தத்ரூபமாக நடித்து காட்டினர்.  அதில் பீமன் துரியோதனனை தனது ஆயுதத்தால் வீழ்த்தி துரியோதனனின் ரத்தத்தை எடுத்து திரௌபதியின் கூந்தலில் தடவி சபதத்தை முடிக்கும் காட்சியினை தத்ரூபமாக நடித்துக் காட்டினர். 

இதனை அடுத்து சுவாமி கங்கை பூஜைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுவாமிக்கு புனித அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்பாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் சாமியுடன் பக்தர்கள் பூ மிதித்தனர்.

  இந்த ஆடிப் பெருக்கு விழாவில், தருமபுரி, அன்னசாகரம், ஏ.கொல்லஹள்ளி, முக்கல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒரு சில கிராமங்களில் பதினெட்டாம் போர் களம் முடித்து ஆடிப் பெருக்கு விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது. 

இது போன்ற மகாபாரதப் போர் நாடகங்கள் நடத்துவதினால்  நல்ல மழை பெருகும் ஊர் செழிக்கும் உலக மக்கள் செழிப்பாக இருப்பார்கள் என்பது ஐதீகம். 

இந்த தெருக்கூத்து நாடகத்தை சிறியவர்கள் பெரியவர்கள் பொதுமக்கள் என அனைவரும் ஆர்வம் காட்டி பார்த்து ரசிக்கின்றனர். 18 நாட்கள் நடைபெறும் இந்த தெருக்கூத்து நாடகம் ஆடிப்பெருக்கு நாட்களில் மட்டும் சிறப்பாக நடைபெறும். 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
ஆளுநர் எப்போதுமே தபால்காரர்தான்: பிரதமரை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் ப்ளான்!
ஆளுநர் எப்போதுமே தபால்காரர்தான்: பிரதமரை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் ப்ளான்!
TVK Vijay: கண்ணியமாக நடந்து கொள்ள விஜய் சொன்னது ஏன்? ஓட்டு முக்கியம் பிகிலு! இதுதான் காரணமா?
TVK Vijay: கண்ணியமாக நடந்து கொள்ள விஜய் சொன்னது ஏன்? ஓட்டு முக்கியம் பிகிலு! இதுதான் காரணமா?
IPL 2025 RCB vs PBKS: பஞ்சாப்பை பழிதீர்க்குமா ஆர்சிபி? ரஜத்தின் ராஜநடையா? ஸ்ரேயாஸின் சிங்கநடையா?
IPL 2025 RCB vs PBKS: பஞ்சாப்பை பழிதீர்க்குமா ஆர்சிபி? ரஜத்தின் ராஜநடையா? ஸ்ரேயாஸின் சிங்கநடையா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ramadoss With Thirumavalavan: வன்னியர் சங்க மாநாடு! ஒரே மேடையில் ராமதாஸ் - திருமா?பாமக கணக்கு என்ன?Annamalai vs EPS | ”இபிஎஸ் - ஐ சும்மா விட மாட்டேன் கூட்டணியை உடைப்பேன்..?”அண்ணாமலை பக்கா ப்ளான்!Durai Vaiko Vs Mallai sathya | ”மோதி பார்த்திடலாம் வா?”துரை வைகோ Vs மல்லை சத்யா இரண்டாக உடையும் மதிமுக? | Vaiko | MDMKDurai Vaiko Resign | தூக்கியெறிந்த துரைவைகோவிழிபிதுங்கி நிற்கும் வைகோ மதிமுகவில் கோஷ்டி பூசல் | Vaiko | MDMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
இன்று முதல் மூன்று நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்! இந்த பக்கம் போகாதீங்க!
ஆளுநர் எப்போதுமே தபால்காரர்தான்: பிரதமரை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் ப்ளான்!
ஆளுநர் எப்போதுமே தபால்காரர்தான்: பிரதமரை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் ப்ளான்!
TVK Vijay: கண்ணியமாக நடந்து கொள்ள விஜய் சொன்னது ஏன்? ஓட்டு முக்கியம் பிகிலு! இதுதான் காரணமா?
TVK Vijay: கண்ணியமாக நடந்து கொள்ள விஜய் சொன்னது ஏன்? ஓட்டு முக்கியம் பிகிலு! இதுதான் காரணமா?
IPL 2025 RCB vs PBKS: பஞ்சாப்பை பழிதீர்க்குமா ஆர்சிபி? ரஜத்தின் ராஜநடையா? ஸ்ரேயாஸின் சிங்கநடையா?
IPL 2025 RCB vs PBKS: பஞ்சாப்பை பழிதீர்க்குமா ஆர்சிபி? ரஜத்தின் ராஜநடையா? ஸ்ரேயாஸின் சிங்கநடையா?
IPL 2025: கோப்பைக்கான சண்டை இல்ல.. கேப்டன்சிக்கான சண்டை! கோதாவில் இவங்கதான்!
IPL 2025: கோப்பைக்கான சண்டை இல்ல.. கேப்டன்சிக்கான சண்டை! கோதாவில் இவங்கதான்!
நீட் ரத்து ரகசியம் எங்கே திமுக...தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கிய அதிமுக!
நீட் ரத்து ரகசியம் எங்கே திமுக...தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கிய அதிமுக!
IPL 2025 LSG vs RR: ஆவேஷ்கானிடம் அடிபணிந்த ராஜஸ்தான்.. திடீர் த்ரில்லராக லக்னோ வெற்றி! ரசிகர்களுக்கு விறுவிறுப்பு!
IPL 2025 LSG vs RR: ஆவேஷ்கானிடம் அடிபணிந்த ராஜஸ்தான்.. திடீர் த்ரில்லராக லக்னோ வெற்றி! ரசிகர்களுக்கு விறுவிறுப்பு!
மாணவர்களுக்கு மதுபானம் வாங்கி கொடுத்த ஆசிரியர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
Embed widget