மேலும் அறிய

ஜூன் 15 இன்று உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம்

ஜூன் 15 இன்று உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம்: இந்தியாவில் முதியோருக்கு எதிரான கொடுமைகள் 50 சதவீதம் அதிகரிப்பு.. மேம்பாட்டு அமைப்புகள் வேதனை

குழந்தைகளை தெய்வத்துக்கு நிகரானவர்கள் என்பார்கள் அதேபோல் முதியவர்களை குழந்தைகள் என்று சொல்வார்கள்.  இந்த வகையில் பார்த்தால் மழலைகளும், முதியவர்களும் தெய்வத்தின் அம்சங்கள்தான் இதனால் குழந்தைகளைப் போல முதியவர்களையும் நாம் கொண்டாட வேண்டும். 

ஆனால் இயந்திரம் ஆகிவிட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் முதியவர்களை எதற்கும் உதவாதவர்களாக கருதும் மனநிலையே பெரும்பான்மை மக்களிடம் உள்ளது.  அவர்களை அரவணைத்து பாதுகாக்காமல் புறக்கணித்து துன்புறுத்தும் நிகழ்வுகளே அதிக அளவில் அரங்கேறி வருகிறது. 

அதிலும் குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாகத் தேய்ந்து நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர்களை புறக்கணிப்பது கொடுமையின் உச்சம். இதுபோன்று அவர்களுக்கு தீர்வு காணவும் நமது முன்னோடிகளாக முதியவர்களை போற்றவும் உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் ஜூன் 15-ஆம் தேதி இன்று உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் முதியோர் நலன் மற்றும் அவர்களின் உரிமை சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை தன்னார்வ அமைப்புகள் நடத்தி வருகிறது. இது குறித்து முதியோர் நலன் சார்ந்த மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது:-

வரும் 2050 ஆம் ஆண்டில் இளைஞர்களை விட 60 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

 இந்த வகையில் அதிகரித்து வரும் முதியோர் தொகையானது அவர்களுக்கு உடல் மட்டும் இன்றி மனரீதியான பல்வேறு பிரச்சனைகளையும் உருவாக்குகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஐக்கிய நாடுகளின் சபையானது ஆண்டுதோறும் ஜூன் 15 -ஆம் தேதியை உலக முதியோர் அவமதிப்பு தடுப்பு விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வருகிறது.  

உலக அளவில் முதியோருக்கு பல்வேறு கொடுமைகள் நிகழ்கிறது.  அதே நேரத்தில் இந்தியாவைப் பொறுத்தவரை முதியோர் அவமதிக்கப்படும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் முதியோருக்கான கொடுமை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 23 சதவீதம் என்று இருந்த நிலையில் தற்போது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது.  இதில் ஆண்களை பொறுத்தவரை 48% பேரும் பெண்களைப் பொருத்தவரை 53 சதவீதம் பேரும் அவமதிப்பிற்கு ஆளாகின்றனர்.  இதில் பெருநகரங்களில் தான் 75 சதவீத முதியோர் கொடுமைகளும் அவ மதிப்புக்கு ஆளாகின்றனர். 

 இதில் பெருநகரங்களில் தான் 75 சதவீதம் முதியோர் கொடுமைகளும் அவமதிப்புகளும் ஏராளமாக நடக்கிறது. குறிப்பாக முதியோர் புறக்கணிப்பு என்பது 25  சதவீதமும், அவமதிப்பு என்பது 33 சதவீதமும், வசை மொழிகள் 41% நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர உடல் ரீதியாகவும் முதியோர் துன்பப்படுத்துகின்றனர்.  தங்களுக்கும் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக காவல்துறை புகார் தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு 67% பேரிடம் உள்ளது. ஆனாலும் அவர்கள் முழு மனதோடு புகார் தெரிவிப்பதற்கு முன் வருவதில்லை.  12 சதவீதம் முதியவர்கள் மட்டுமே புகார் தெரிவிப்பதற்கு முன் வருகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

விஞ்ஞானத்திலும், தொழில் வளர்ச்சியும் நாடு அசுரவேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.  ஆனாலும் இங்கே மனிதர்களுக்கு எதிரான கொடுமைகளும் பல்வேறு நிலைகளில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.  

அதிலும் குறிப்பாக நமது வாழ்க்கையின் வழிகாட்டிகளாக திகழ்ந்த முதியோரை அவமதிப்பதும் புறக்கணிப்பதும் கொடுமையின் உச்சம். பிள்ளைகள் உறவினர்கள் சமூகம் என்று அனைத்து நிலைகளிலும் முதியோர் குறித்த பார்வை மாற வேண்டும்.  பயனற்ற பொருள்களாக அவர்களை நினைப்பதை தவிர்க்க வேண்டும்.  பண்போடு அரவணைத்து பாதுகாக்க வேண்டும் இது மட்டுமே தொடரும் துயரங்களுக்கு தீர்வு தரும் இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

தலைப்பு செய்திகள்

Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரியில் நாளை (11-08-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
தருமபுரிக்கு பேருந்து சேவை வெறும் வசதியல்ல; அது சமூகநீதி ஆயுதம்! – அமைச்சருக்கு சௌமியா அன்புமணி MLA பறக்கவிட்ட அவசரக் கடிதம்!
Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (ஜூலை 15) எங்கெல்லாம் மின் தடை: உங்க பகுதி லிஸ்டில் இருக்கா?
தருமபுரியில் நாளை (ஜூலை 15) எங்கெல்லாம் மின் தடை: உங்க பகுதி லிஸ்டில் இருக்கா?
தருமபுரியில் லிட்டர் லிட்டராக டீசல் திருட்டு.. ஃபாலோ பண்ணி ஓட்டுநரை மடக்கி பிடித்த லாரி உரிமையாளர்!
தருமபுரியில் லிட்டர் லிட்டராக டீசல் திருட்டு.. ஃபாலோ பண்ணி ஓட்டுநரை மடக்கி பிடித்த லாரி உரிமையாளர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget