மேலும் அறிய

இறந்த கழுகுக்கு பாடை கட்டி இறுதி சடங்கு செய்த கிராம மக்கள் - கோவை அருகே நெகிழ்ச்சி

மனிதர்களை போல இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்ய வேண்டும் என மக்கள் முடிவு செய்தனர். இதன்படி கிராம மக்கள் இணைந்து பூஜை செய்து பாடை கட்டி அதில் கழுகின் உடலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே விவசாய நிலத்தில் உயிரிழந்த கழுகுக்கு பாடை கட்டி கிராம மக்கள் இறுதி சடங்கு செய்தனர்.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே திம்மராயம்பாளையம் கிராமம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பவானி ஆற்று படுகையில் உள்ள இந்த கிராமத்தில், விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. மேலும் இந்த பகுதி மக்கள் அதிகளவில் பெருமாளை வழிபடுவது வழக்கம். கோவை மாவட்டத்தில் உள்ள வைணவத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் கோவில் உள்ளதால் அதனை சுற்றியுள்ள மக்கள் வைணவத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்நிலையில் திம்மராயம்பாளையம் கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியை மாரம்மாள் என்பவரது தோட்டத்தில் ஒரு கழுகு இறந்து கிடந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அக்கிராம மக்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கழுது உயிரிழந்ததால், சுற்றுவட்டார கிராமங்களுக்கு நல்லது இல்லை என கருதினர். இதனால் உயிரிழந்த கழுகிற்கு மனிதர்களை போல இறுதி சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் முடிவு செய்தனர். இதன்படி கிராம மக்கள் இணைந்து பூஜை செய்து பாடை கட்டி அதில் கழுகின் உடலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது பின்னால் வந்த கிராம மக்கள் கோவிந்தா, கோவிந்தா என கோசம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். பின்னர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே கழுகின் உடல் மீது நெய் ஊற்றி எரியூட்டினர். தொடர்ந்து எரிந்த சாம்பலை எடுத்துச் சென்று அருகே உள்ள பவானி ஆற்றில் கரைத்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ”இந்த பகுதி மக்கள் அதிகளவில் பெருமாளை வழிபடுகிறார்கள்‌. கழுகினை கருடனாக நினைத்து வழிபாடு செய்வது வழக்கம். கருடன் இறந்ததால் சுற்றுவட்டார கிராமங்களில் மழை பொழியாது எனவும், விவசாயம் பாதிக்கப்படும் எனவும் ஊர் பெரியவர்கள் கூறினர். பெரியவர்களின் அறிவுரைப்படி கருடனை முறைப்படி அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, மனிதர்கள் உயிரிழந்தால் எவ்வாறு நல்லடக்கம் செய்யப்படுமோ அதுபோல் தேர் கட்டி அதில் உடலை வைத்து எடுத்துச் சென்றோம். அப்போது காரமடையில் இருந்து வரவழைக்கப்பட்ட தாசர்கள் சங்கு, சேகிண்டி முழங்க ஊர்வலம் சென்றது. இவ்வாறு செய்தால் ஊர் செழிக்கும், தண்ணீர் பஞ்சம் வராது என்பது ஐதீகம். 10 ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற சம்பவம் நடைபெற்றதால் முன்னோர் அறிவுரைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது” எனத் தெரிவித்தனர்.

மேலும் படிக்க : Director Marimuthu: “மனவேதனை தருகிறது” .. இயக்குநர் மாரிமுத்து மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
Embed widget