மேலும் அறிய

Valparai: வால்பாறையில் சிறுத்தை தாக்கி இருவர் படுகாயம் - வெளியில் நடமாட மக்கள் அச்சம்..! விரைவில் பிடிக்க கோரிக்கை..!

கூலாங்கல் ஆற்றுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகளை வேட்டையாட வரும் சிறுத்தை, மனிதர்களை தாக்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

சிறுத்தை நடமாட்டம்:

இந்நிலையில் சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு சிறுத்தை நடமாடி வருகிறது. நேற்று அப்பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் பணி புரிந்து கொண்டிருந்த போது வட மாநிலத்தைச் சேர்ந்த அணில் ஓரான் (27) என்பவரின் காலை, தேயிலைக் காட்டிற்குள் பதுங்கி இருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தாக்கியது. அப்போது அந்த சிறுத்தை அவருடைய காலை கடித்து குதறியது. இதில் அவருடைய வலது கால் முறிவு ஏற்பட்டு, இரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார்.

அவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அவரை மீட்டனர். அப்போது அப்பகுதிக்கு ஆய்வுக்கு வந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி செல்வம் அப்பகுதியில் பணியில் இருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூற சென்ற போது, அப்பகுதியில் பணிபுரிந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கூக்குரலிட்டனர். அங்கு சென்று அவர் பார்த்த போது, அணில் ஓரானை வனத்துறை ஊழியர்கள் மற்றும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உதவியுடன் தூக்கிக் கொண்டு வந்தனர். இதையடுத்து நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவள்ளி தன்னுடைய வாகனத்தில் ஏற்றி உடனடியாக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

தொடர் தாக்குதல்:

நேற்று முன்தினம் அதே பகுதியில் பணி புரிந்த சீதா முனி குமாரி என்ற பெண்மணியை அதே சிறுத்தை தாக்கியது. அதில் அவரது விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் சிறுகுன்றா எஸ்டேட், நல்லகாத்து எஸ்டேட், நடுமலை எஸ்டேட், சோலையார் எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. கூலாங்கல் ஆற்றுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் மாடுகளை வேட்டையாட சிறுத்தை வரும் நிலையில் மனிதர்களை தாக்கி வருவதாகவும், இதுவரை 3 மாடுகளை வேட்டையாடிய சிறுத்தை இருவரை தாக்கியுள்ளது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அந்த சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
Embed widget