மேலும் அறிய

கோவை : முடங்கிக் கிடக்கும் பசுமை வீடுகள் கட்டுமானப் பணிகள்: பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்..!

முதலைமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி துறை சார்பில் வீடுகள் கட்டும் பணிகள் துவங்கிய நிலையில், இரண்டு வருடங்களாகியும் பணிகள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்கின்றன.

கோவை மாவட்டம் இக்கரை பூலுவம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்களில் சோலார் வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுவதற்கு கடந்த 2020ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஏற்கனவே வசித்து வந்த வீடுகளை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிதாக வீடுகள் கட்டும் பணிகள் துவங்கியது. 88 வீடுகளுக்கு முதலைமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ்  ஊரக வளர்ச்சி துறை சார்பில் வீடுகள் கட்டும் பணிகள் துவங்கிய நிலையில், இரண்டு வருடங்களாகியும் பணிகள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்கின்றன.


கோவை : முடங்கிக் கிடக்கும் பசுமை வீடுகள் கட்டுமானப் பணிகள்: பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்..!

நரசிபுரம் அருகே உள்ள பட்டியார் கோவில்பதியில் உள்ள இருளர் சமுதாயத்தை சார்ந்த 25 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் பயனாளிகள் சாலை ஓரத்தில் உள்ள குடிசையில் வசித்து வருகின்றனர். 


கோவை : முடங்கிக் கிடக்கும் பசுமை வீடுகள் கட்டுமானப் பணிகள்: பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்..!

இது குறித்து அப்பகுதி பழங்குடியின மக்கள் கூறுகையில், ”தாங்கள் ஏற்கனவே வசித்து வந்த வீடுகள் சிதிலமடைந்த நிலையில், அதனை மாற்றி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டும் பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் பணிகள் துவங்கிய நிலையிலேயே இன்றும் உள்ளதால், சாலை ஓரத்தில் குடிசை போட்டு வசித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில், பாதுகாப்பு பாதுகாப்பற்ற சூழலில் வசித்து வருகிறோம். 


கோவை : முடங்கிக் கிடக்கும் பசுமை வீடுகள் கட்டுமானப் பணிகள்: பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்..!

தற்போது மழைக்காலம் துவங்கியுள்ளதால் குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசிப்பது பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வீடுகள் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில வீடுகள் 90 சதவீத பணிகள் முடிந்தாலும் முழுமையடையாத காரணத்தினால் பயனாளிகளுக்கு வழங்கப்படாததால் உள்ளது. இதனால் கட்டப்பட்ட வீடுகளும் பராமரிப்பின்றி உள்ளது.


கோவை : முடங்கிக் கிடக்கும் பசுமை வீடுகள் கட்டுமானப் பணிகள்: பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்..!

இதுகுறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ”கடந்த ஆட்சிக் காலத்தில் சோலார் உடன் கூடிய பசுமை வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு கட்டும் பணிகள் துவங்கியது. ஆனால் நிதி இல்லை என கட்டுமான பணியை நிறுத்தியதால், இந்த சூழல் நிலவுகிறது. மாவட்ட நிர்வாகத்துடன் பேசி விரைவில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
Embed widget