மேலும் அறிய

Crime : கோவையில் கோவிலில் இருந்து திருடி விற்பனை செய்ய முயன்ற நடராஜர் உலோகச் சிலை பறிமுதல் ; இருவர் கைது

சிலைகளை திருடி தொன்மையான சிலைகள் எனக்கூறி, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

கோவையில் கோவிலில் இருந்து திருடி நடராஜர் உலோகச் சிலையை விற்பனை செய்ய முயன்ற இருவரை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சிலைகளை திருடி தொன்மையான சிலைகள் எனக்கூறி, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு தனிப் படையினர் கோவையில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தகவலாளி ஒருவர் மூலமாக சிலையை விற்பனை செய்பவர்களிடம் காவல் துறையினர்  சிலை வாங்குபவர்கள் போல பேசி, சிலையை கோவைக்கு கொண்டு வரும்படி கூறியுள்ளனர். இதன்படி நேற்று அதிகாலையில் கோவை - பல்லடம் சாலையில் இருகூர் பிரிவு என்ற இடத்தில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு  காவல் துறையினர் காத்திருந்தனர். அப்போது அவர்கள் சொன்ன அடையாளத்துடன் வந்த கேரள பதிவெண் கொண்ட காரில் வந்தவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல் துறையினர் காரில் சோதனை மேற்கொண்ட போது, காரின் பின்னால் டிக்கியில் வெள்ளை நிற சாக்கு பையில் சுருட்டிய நிலையில் சுமார் 3 அடி உயரமுள்ள திருவாச்சியுடன் கூடிய நடராஜர் உலோகச் சிலை மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. 


Crime : கோவையில் கோவிலில் இருந்து திருடி  விற்பனை செய்ய முயன்ற நடராஜர் உலோகச் சிலை பறிமுதல் ; இருவர் கைது

இதனைத் தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காரை ஓட்டி வந்தவர் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜெயந்த் (22) என்பதும், அவருடன் இருந்த மற்றொரு நபர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சிவபிரசாத் நம்பூதிரி என்பதும் தெரியவந்தது. சிலையைப் பற்றி அவர்களிடம் விசாரித்த போது நடராஜர் உலோகச் சிலையை காரில் கொண்டு வந்ததற்கு உரிய காரணம் சொல்லாமல், முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளனர். இதனால் நடராஜர் உலோகச் சிலையை ஒரு பழமையான கோவிலில் இருந்து திருடி, சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்ய காரில் எடுத்து வந்துள்ளார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நடராஜர் உலோகச் சிலை மற்றும் காரினை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.  இது தொடர்பாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடராஜர் சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்தும், கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்தும், இதேபோல கோவில் சிலைகளை திருடி விற்பனை செய்துள்ளார்களா என்பது குறித்தும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை,  மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை, மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
Citroen C3: ரூபாய் 6 லட்சம்தான் பட்ஜெட்..  Citroen C3 மைலேஜ், தரம் எப்படி? முழு விவரம் உள்ளே
Citroen C3: ரூபாய் 6 லட்சம்தான் பட்ஜெட்.. Citroen C3 மைலேஜ், தரம் எப்படி? முழு விவரம் உள்ளே
Embed widget