மேலும் அறிய

’முகக் கவசம் இல்லையா? சுடுகாட்டுக்கு வாங்க’ - மரண பயம் காட்டி எச்சரித்த ஊராட்சி.!

முகக் கவசம் அணியாமல் இருந்தவர்களை முழு கவச உடை அணிந்து வந்த நபர்கள் பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி அரசூர் மயானத்திற்கு அழைத்துச் சென்றனர். மயானத்தை சுற்றிக் காட்டிய ஊராட்சி நிர்வாகத்தினர் கொரொனா ஆபத்துகளை குறித்து எடுத்துரைத்தனர்.

கோவை அருகே அரசூர் ஊராட்சியில் முகக் கவசம் அணியாமல் சாலையோரம் சென்றவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தினர், மயானத்திற்கு அழைத்து சென்று கொரோனா ஆபத்து குறித்து எடுத்துரைத்து நூதன முறையில் எச்சரிக்கை விடுத்தனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது. அதேசமயம் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் சென்னையை விட கோவையில் அதிகமாக பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. அதேசமயம் கோவையில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.  


’முகக் கவசம் இல்லையா? சுடுகாட்டுக்கு வாங்க’ - மரண பயம் காட்டி எச்சரித்த ஊராட்சி.!

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு அடுத்த இடத்தில், சூலூர் பகுதி உள்ளது. கோவை மாவட்டம்  சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி, அரசூர் ஊராட்சி. இப்பகுதியில் கொரோனா  தொற்று அதிகளவில் உள்ளது. அங்கு கடந்த வாரங்களில் தினசரி 300 பேருக்கு மேல் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது, தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது என பொதுமக்கள் அலட்சியமாக இருந்து வந்தனர்.  பல முறை எடுத்துரைத்தும், அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையிலும், பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் இருந்துள்ளது.


’முகக் கவசம் இல்லையா? சுடுகாட்டுக்கு வாங்க’ - மரண பயம் காட்டி எச்சரித்த ஊராட்சி.!

இந்நிலையில் முகக் கவசம் அணிவதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசூர் ஊராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதன்படி அரசூர் பகுதியில் சாலையில்  முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு  ஊராட்சி நிர்வாகம் கடுமையான  எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து முகக் கவசம் அணியாமல் இருந்தவர்களை முழு கவச உடை அணிந்து வந்த நபர்கள் பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி அரசூர் மயானத்திற்கு அழைத்துச் சென்றனர். மயானத்தை சுற்றிக் காட்டிய ஊராட்சி நிர்வாகத்தினர் கொரொனா ஆபத்துகளை குறித்து எடுத்துரைத்தனர். அப்போது கொரோனா பாதித்தால்  உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை என்பதையும், மயானத்தில்  புதைக்கக் கூட இடம்  இல்லை என்பதை எடுத்துக் கூறி அனுப்பி வைத்தனர். இது அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும், கொரொனாவின் ஆபத்தை எடுத்துரைக்கும் வகையில்  முகக் கவசம் அணியாமல் சாலையோரம் செல்பவர்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், மற்றவர்களும் முறையாக முகக் கவசம் அணிய வேண்டுமென்பதற்காகவும் இதனை செய்ததாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்  -  மதுரையில் எடப்பாடி பழனிசாமி
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி
Breaking News LIVE : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான செய்திகளை, ஆசிகளை வழங்க வாட்சப் எண்ணை அறிவித்தார் சுனிதா கெஜ்ரிவால்
Breaking News LIVE : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான செய்திகளை, ஆசிகளை வழங்க வாட்சப் எண்ணை அறிவித்தார் சுனிதா கெஜ்ரிவால்
Prithviraj Sukumaran : 98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
ICC Elite Panel: ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Elections 2024: பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்  -  மதுரையில் எடப்பாடி பழனிசாமி
பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம் - மதுரையில் எடப்பாடி பழனிசாமி
Breaking News LIVE : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான செய்திகளை, ஆசிகளை வழங்க வாட்சப் எண்ணை அறிவித்தார் சுனிதா கெஜ்ரிவால்
Breaking News LIVE : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கான செய்திகளை, ஆசிகளை வழங்க வாட்சப் எண்ணை அறிவித்தார் சுனிதா கெஜ்ரிவால்
Prithviraj Sukumaran : 98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
98-இல் இருந்து 68 கிலோ.. ஆடு ஜீவிதம் படத்திற்காக 30 கிலோ எடை குறைத்த பிருத்விராஜ்
ICC Elite Panel: ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
ஐசிசி எலைட் பேனலில் இடம்பிடித்த முதல் வங்கதேச அம்பயர்.. சிறப்பு பெருமையை பெற்ற ஷரபுத்தவுலா..!
Class 10th Exam: 10-ஆம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வு: 16,550 மாணவர்கள் ஆப்சென்ட்; 4 பேர் முறைகேடு- விவரம்
Class 10th Exam: 10-ஆம் வகுப்பு ஆங்கில பொதுத்தேர்வு: 16,550 மாணவர்கள் ஆப்சென்ட்; 4 பேர் முறைகேடு- விவரம்
Mumbai Indians: பாண்ட்யாவால் இரண்டாக உடைந்த மும்பை அணி? ரோகித் பக்கம் யார்? உடைக்கும் வீடியோ ஆதாரங்கள்..!
Mumbai Indians: பாண்ட்யாவால் இரண்டாக உடைந்த மும்பை அணி? ரோகித் பக்கம் யார்? உடைக்கும் வீடியோ ஆதாரங்கள்..!
Aadu Jeevitham Box Office : எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
எல்லா மொழிகளிலும் வசூல் மழை.. பிருத்விராஜின் ஆடுஜீவிதம் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்
Embed widget