மேலும் அறிய

’முகக் கவசம் இல்லையா? சுடுகாட்டுக்கு வாங்க’ - மரண பயம் காட்டி எச்சரித்த ஊராட்சி.!

முகக் கவசம் அணியாமல் இருந்தவர்களை முழு கவச உடை அணிந்து வந்த நபர்கள் பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி அரசூர் மயானத்திற்கு அழைத்துச் சென்றனர். மயானத்தை சுற்றிக் காட்டிய ஊராட்சி நிர்வாகத்தினர் கொரொனா ஆபத்துகளை குறித்து எடுத்துரைத்தனர்.

கோவை அருகே அரசூர் ஊராட்சியில் முகக் கவசம் அணியாமல் சாலையோரம் சென்றவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தினர், மயானத்திற்கு அழைத்து சென்று கொரோனா ஆபத்து குறித்து எடுத்துரைத்து நூதன முறையில் எச்சரிக்கை விடுத்தனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமாக சென்னை உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் கோவை உள்ளது. அதேசமயம் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் சென்னையை விட கோவையில் அதிகமாக பதிவாகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. அதேசமயம் கோவையில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.  


’முகக் கவசம் இல்லையா? சுடுகாட்டுக்கு வாங்க’ - மரண பயம் காட்டி எச்சரித்த ஊராட்சி.!

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு அடுத்த இடத்தில், சூலூர் பகுதி உள்ளது. கோவை மாவட்டம்  சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி, அரசூர் ஊராட்சி. இப்பகுதியில் கொரோனா  தொற்று அதிகளவில் உள்ளது. அங்கு கடந்த வாரங்களில் தினசரி 300 பேருக்கு மேல் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது, தனி நபர் இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது என பொதுமக்கள் அலட்சியமாக இருந்து வந்தனர்.  பல முறை எடுத்துரைத்தும், அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையிலும், பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாமல் இருந்துள்ளது.


’முகக் கவசம் இல்லையா? சுடுகாட்டுக்கு வாங்க’ - மரண பயம் காட்டி எச்சரித்த ஊராட்சி.!

இந்நிலையில் முகக் கவசம் அணிவதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசூர் ஊராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதன்படி அரசூர் பகுதியில் சாலையில்  முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு  ஊராட்சி நிர்வாகம் கடுமையான  எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து முகக் கவசம் அணியாமல் இருந்தவர்களை முழு கவச உடை அணிந்து வந்த நபர்கள் பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி அரசூர் மயானத்திற்கு அழைத்துச் சென்றனர். மயானத்தை சுற்றிக் காட்டிய ஊராட்சி நிர்வாகத்தினர் கொரொனா ஆபத்துகளை குறித்து எடுத்துரைத்தனர். அப்போது கொரோனா பாதித்தால்  உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை என்பதையும், மயானத்தில்  புதைக்கக் கூட இடம்  இல்லை என்பதை எடுத்துக் கூறி அனுப்பி வைத்தனர். இது அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும், கொரொனாவின் ஆபத்தை எடுத்துரைக்கும் வகையில்  முகக் கவசம் அணியாமல் சாலையோரம் செல்பவர்களை எச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், மற்றவர்களும் முறையாக முகக் கவசம் அணிய வேண்டுமென்பதற்காகவும் இதனை செய்ததாக ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
அ.தி.மு.க.,வில் ஓபிஎஸ் இணைப்பு; HINT கொடுத்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ., - 2026 தேர்தலில் வெற்றி கிடைக்குமா?
அ.தி.மு.க.,வில் ஓபிஎஸ் இணைப்பு; HINT கொடுத்த உசிலம்பட்டி எம்.எல்.ஏ., - 2026 தேர்தலில் வெற்றி கிடைக்குமா?
Trump on 3rd World War: மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
மூன்றாம் உலகப் போரை நோக்கி செல்கிறோம்; ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Embed widget