மேலும் அறிய

கறுப்பை மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது - முதல்வரை ஆதீனங்கள் சந்தித்தது தொடர்பாக தமிழிசை சூசக பேச்சு

"ஆளுநர்கள் என்றால் அவர்களும் மரியாதைக்கு உரியவர்கள் தான். கருத்து வேறுபாடு இருக்கின்றது என்பதற்காக ஆளுநர்களை அவமரியாதையாகவும், தரக்குறைவாகவும், பேசுவதையும், நடத்துவதையும் மாற்றி கொள்ள வேண்டும்"

கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்வி நிறுவனத்தில் சுபகிருது ஆண்டுப் பிறப்பு, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் தமிழிசை சவுந்திரராஜன் பேசும் போது, ”தமிழ் நிகழ்வு என்ற அழைப்பு வரும் போது தமிழிசை அங்கே இருப்பேன். ஒரு ராமசாமி மட்டும் (பெரியார்) தமிழர்களுக்கும், தமிழுக்கும் தொண்டு செய்யவில்லை. இங்கே உள்ள சாந்தலிங்க ராமசாமி அடிகளாரும் தமிழுக்கு தொண்டாற்றி உள்ளார். 

75 ஆண்டு சுதந்திர தினத்தை ஓராண்டுக்கு கொண்டாட உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி. இதன்மூலம் மாணவர்கள் சுதந்திர போராட்டம் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகம் தான் தமிழ் வளர்ச்சிக்கு உதவியது. எல்லா மடங்களுக்கும் செல்லும் பழக்கம் எனக்கு இருக்கிறது. அங்கு என்ன பழக்கங்கள் இருக்கிறதோ அதை ஏற்றுக் கொள்வேன். ஆனால் அங்கு நடந்த சம்பவங்களை மாற்றி எழுதுகின்றனர். என் மனதில் இருப்பது மக்கள் சேவை, ஆன்மீக சேவை மட்டுமே.


கறுப்பை மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது - முதல்வரை ஆதீனங்கள் சந்தித்தது தொடர்பாக தமிழிசை சூசக பேச்சு

கறுப்பை மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அரசு மடாலய அதிபதிகளை அழைத்து பேசும் போது, அவர்களுக்கு உரிய இருக்கைகளை அமைத்து கொடுக்க வேண்டும். காவி ஆன்மீகத்தை குறிக்கிறது. அதனால் தான் காவி தமிழகத்தில் பெரியது. நம்மால் முடிந்ததை ஆதீனங்களுக்கு செல்வமாக, தானமாக வழங்க வேண்டும். நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி. பணமதிப்பிழப்பின் போது எந்த பிரச்னையும் தனக்கு வரவில்லை. மோடி எங்களுக்கு சொல்லவுமில்லை, எங்களிடம் கருப்பு பணமும் இல்லை.  மடாலயங்கள் மூலமாக நடத்தப்படும் கல்வி நிலையங்களுக்கு சிறப்பு கவனத்தை அரசு செலுத்த வேண்டும். அப்போது தான் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ முடியும். ஆளுநர்களுக்கு ஆளுமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், ஆளுநர்களும் சாமானிய மக்களில் ஒருவர் தான்” என அவர் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஆதீனங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் மகளாக  இங்கு வந்துள்ளேன். இவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்பதாக வந்துள்ளேன். தமிழக அரசு ஆன்மீக குருக்களை அழைத்து பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆன்மீக குருக்களுக்கும், மடாதிபதிகளுக்கும், அரசு இன்னும் பக்கபலமாக இருக்க வேண்டும். 


கறுப்பை மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது - முதல்வரை ஆதீனங்கள் சந்தித்தது தொடர்பாக தமிழிசை சூசக பேச்சு

ஆளுநர்கள் என்றால் அவர்களும் மரியாதைக்கு உரியவர்கள் தான். கருத்து வேறுபாடு இருக்கின்றது என்பதற்காக ஆளுநர்களை  அவமரியாதையாகவும், தரக்குறைவாகவும், பேசுவதையும், நடத்துவதையும் மாற்றி கொள்ள வேண்டும். ஆளுநர்களுக்கு என  தனிப்பட்ட கருத்து என்று இருக்க முடியாது. சில நேரங்களில் நீதிமன்றங்களில் சில வழக்குகளுக்கு சொல்லப்படும் கருத்துக்களை எல்லா ஆளுநர்களுக்கும் பொருத்தி பார்க்க முடியாது. ஆளுநர்கள் எல்லாரும் மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். 

தமிழக பிரச்சினையை தான் பேசவில்லை. டீ சாப்பிட, மதிய, இரவு உணவு சாப்பிட கூப்பிட்டால் வர மாட்டேன் என சொல்லாமல் உட்கார்ந்து பேசினால் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. அமர்ந்து பேசி தீர்க்க பழகுவோம். துணைவேந்தர்களை நியனமத்தில் அனைவர் பங்கும் இருக்க வேண்டும். அரசியல் சார்பு இருக்க கூடாது என்பதற்காக தான் துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கின்றனர். தமிழக அரசுக்கு துணைவேந்தரை தேர்வு செய்வோம் என்று சொல்வதற்கு உரிமையுண்டு. அதே சமயம் ஆளுநருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆளுநர்களுக்கும், முதலமைச்சருக்கும் சுமூகமான உறவு இருக்க வேண்டும். ஆளுநரும் முதலமைச்சரும் இணைந்து பணியாற்றும் போது மக்கள் பலன் பெறுவார்கள். எல்லாவற்றிக்கும் எதிர்வினை ஆற்றும் போது அது வருங்கால சந்த்திக்கு பலனளிக்காது. மசோக்களின் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு நேர, காலம் எதுவும் கிடையாது” என அவர் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
Best Car 2025: SUV-க்களை பின்னுக்குதள்ளி, விற்பனையில் அசத்திய செடான் - 41 வருடங்களில் ஒரே மாடல் தானாம்..
Best Car 2025: SUV-க்களை பின்னுக்குதள்ளி, விற்பனையில் அசத்திய செடான் - 41 வருடங்களில் ஒரே மாடல் தானாம்..
MK STALIN DMK: திராவிடப் பொங்கல்.! திமுகவினருக்கு பறந்த மு.க. ஸ்டாலினின் முக்கிய உத்தரவு
திராவிடப் பொங்கல்.! திமுகவினருக்கு பறந்த மு.க. ஸ்டாலினின் முக்கிய உத்தரவு
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Embed widget