மேலும் அறிய

’டி 23 புலி ஆட்கொல்லி இல்லை’ – தமிழ்நாடு முதன்மை வன உயிரின பாதுகாவலர் விளக்கம்..!

"ஆட்கொல்லி என இந்த டி 23 புலியை சொல்ல முடியாது. ஆட்கொல்லி புலியின் முதன்மை உணவாக மனிதர்களாக இருக்க வேண்டும். தினமும் 1 கிலோ உணவு வரை புலிக்கு தேவை"

ஆப்ரேசன் டி 23 குறித்து நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழ்நாடு முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “புலி மனிதர்களை சில இடங்களில் கொன்றது குறித்து அறிவியல் பூர்வமான விசாரணை நடைபெற்று வருகின்றது. தினமும் புதிய வியூகங்களை அறிவியல் பூர்வமாக செயல்படுத்தி புலியை பிடிக்க முயன்று வருகிறோம். புலியின் பாதுகாப்பு, வனத்துறையினர் பாதுகாப்பு கருத்தில் வைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. சிங்காரா பகுதியில் டி 23 புலியின் தடயங்கள் இருப்பதால் அங்கு கண்காணிப்பு அதிகப்படுத்தி இருக்கிறோம்.


’டி 23 புலி ஆட்கொல்லி இல்லை’ – தமிழ்நாடு முதன்மை வன உயிரின பாதுகாவலர் விளக்கம்..!

காட்டில் டி 23 புலிக்கு  வேட்டையாடுவதில் வயது காரணமாக   சிரமங்கள் இருக்கிறது. வனப்பகுதியில் பரண்கள்  அமைத்து புலியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அந்த பகுதியில் எந்தவித  இடையூறும் இல்லாதபடி பார்த்து கொள்ளப்படுகின்றது. மன்றாடியார் வனப் பகுதியிலும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. டிரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அறிவியல் பூர்வமாக புலியை பிடிக்க அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 6 மருத்துவர்கள் குழுவினர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


’டி 23 புலி ஆட்கொல்லி இல்லை’ – தமிழ்நாடு முதன்மை வன உயிரின பாதுகாவலர் விளக்கம்..!

ஆட்கொல்லி என இந்த டி 23  புலியை சொல்ல முடியாது. ஆட்கொல்லி புலியின் முதன்மை உணவாக மனிதர்களாக இருக்க வேண்டும். தினமும் 1 கிலோ உணவு வரை புலிக்கு தேவை. ஆட்கொல்லி புலியாக  டி 23 புலியை எடுத்துக் கொள்ள முடியாது. புலியை மயக்க ஊசி செலுத்தி  பிடித்து அதை மருத்துவ குழுவினர் மூலம் கண்காணித்து அதன் நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட இருக்கின்றது. 4 மரணங்களில் முதல் இரு மரணங்கள் இந்த புலியால் நடந்தது என்பதை உறுதிப்படுத்த வில்லை. டி.என்.ஏ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

வேட்டை தடுப்பு காவலர்களிக்கு ஊதியத்தை 15 ஆயிரம் ரூபாயாக  உயர்த்த வேண்டும் என அரசு பிரதிநிதிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. புலியை பிடித்து கூண்டில் அடைத்தால் மன ரீதியாக புலியாக பாதிக்கப்படும் என்பது உண்மை. ஆனால் அதை சரி செய்து கொள்ள முடியும். வருங்காலங்களில் பிரச்சினைக்குரிய  புலிகளை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடியும். ரேடியோ காலர்களின் எடையும் 5 கிலோ வரை இருக்கும் என்பதால் பிரச்சினை இருக்காது. தன்னார்வலர்களின் செயல்பாடுகளையும் இந்த புலியை பிடிக்க பயன்படுத்தி கொள்கிறோம்.



’டி 23 புலி ஆட்கொல்லி இல்லை’ – தமிழ்நாடு முதன்மை வன உயிரின பாதுகாவலர் விளக்கம்..!

மயக்க மருத்து கொடுத்து பிடித்த பின்னர் அடுத்த என்ன செய்யலாம் என்பதை மருத்துவக்குழுவினர் முடிவு செய்வார்கள். காடுகளில் வாழும் புலி 14 வருடங்கள் வரை இருக்கும். ஆனால் வன  உயிரின பூங்காகளில் அடைத்து பாதுகாக்கும்  போது 10 ஆண்டுகள் புலி உயிருடன் இருக்கும். டி 23 புலியை பிடிக்கும் பணிகள் அறிவியல் ரீதியாக தீவிரமாக நடைபெற்று வருகிறது” என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை : கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல், வனத்துறை அறிவிப்பு !!!
மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை : கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல், வனத்துறை அறிவிப்பு !!!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
ஓடுபாதையில் வெடித்து சிதறிய விமானம்..! வானுயர தீப்பிழம்பு - பரிதாபமாக இருவர் பலி - வீடியோ வைரல்
ஓடுபாதையில் வெடித்து சிதறிய விமானம்..! வானுயர தீப்பிழம்பு - பரிதாபமாக இருவர் பலி - வீடியோ வைரல்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
Teachers Promotion : ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
ஆசிரியர்களுக்கு ஷாக்.! பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு கட்டாயமா.? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
Embed widget