மேலும் அறிய

Watch Video : கோவை அருகே சிறுத்தை நடமாட்டம், வெளியான வீடியோ ; அச்சத்தில் மக்கள்..

குடியிருப்புக்குள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை உலா வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் சுகுணாபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வனச் சரகத்திற்கு உட்பட்ட மதுக்கரை, சுகுணாபுரம், மைல்கல் ஆகிய பகுதிகள் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. மதுக்கரை வனச்சரக பகுதியில் யானை, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம். மதுக்கரை அருகேயுள்ள சுகுணாபுரம் பகுதி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. ஏராளமான குடியிருப்புகள் உள்ள இந்த பகுதிக்கு அடிக்கடி யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வருவதும் வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சுகுணாபுரம் குடியிருப்புப் பகுதியில் மாலை நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. வனப் பகுதியை ஒட்டியுள்ள இந்த குடியிருப்புக்குள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிறுத்தை மலை மீது இருக்கும் காட்சிகளை அப்பகுதியை சேர்ந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள கோலமாவு மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால், அப்பகுதி மக்கள் அச்சம்@abpnadu pic.twitter.com/wGV38dyZGy

— Prasanth V (@PrasanthV_93) November 30, 2021

">

சிறுத்தையை நேரில் பார்த்த சிலர் மதுக்கரை வனத் துறையினருக்கு சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை வனத் துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து சுகுணாபுரம் கோலமாவு மலை பகுதியில் உள்ளவர்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ப்பதற்காக தனியாக செல்ல வேண்டாம் எனவும் வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை வனத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தெரிவித்தும் இதுவரை சிறுத்தையை பிடிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்றுவிட வேண்டும். கால்நடை மற்றும் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (19-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (18-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
Embed widget