மேலும் அறிய

Crime : கஞ்சா பயிரிட்ட 4 பேர் கைது.. 15 கிலோ கஞ்சா செடி பறிமுதல்.. கோவை போலீசார் அதிரடி..

கோவை மாவட்டம் பெரியநாய்க்கன்பாளையம் அருகே கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கஞ்சா இல்லாத கிராமங்களை உருவாக்கும் முயற்சியாக கஞ்சா புழக்கம் உள்ள கிராமங்களைக் கண்டறிந்து, அப்பகுதியில் கஞ்சா விற்பனையை தடுத்தல், குற்றவாளிகளைக் கைது செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியநாய்க்கன்பாளையம் அருகே உள்ள பசுமலை வனப்பகுதி மற்றும் விவசாய நிலங்களில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 150 செண்ட் பரப்பளவில் ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்து வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பசுமலைப் பகுதியை சேர்ந்த செல்லன் (63) என்பவருக்கு சொந்தமான 100 செண்ட் இடம் மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த பழனிசாமி (53) என்பவருக்கு சொந்தமான 50 செண்ட் இடத்தில் கஞ்சா பயிரிடப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் செல்லனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து 3.200 கிலோ கஞ்சா செடிகள். பழனிசாமிக்கு சொந்தமான இடத்தில் இருந்து 11.400 கிலோ கஞ்சா செடிகள் என மொத்தம் 14.600 கிலோ எடையுள்ள 300 கஞ்சா செடிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல அப்பகுதியில் அதேகிராமத்தை சேர்ந்த ராஜப்பன் (33)ம் வேலுசாமி (28) ஆகியோரும் கஞ்சா பயிரிட்டது தெரியவந்தது.


Crime : கஞ்சா பயிரிட்ட 4 பேர் கைது.. 15 கிலோ கஞ்சா செடி பறிமுதல்.. கோவை போலீசார் அதிரடி..

இதனைத் தொடர்ந்து செல்லன், பழனிசாமி, ராஜப்பன், வேலுசாமி ஆகிய 4 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். கஞ்சா பயிரிடப்பட்ட இடத்தை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேரில் பார்வையிட்டார். மேலும் அப்பகுதி மக்களிடம் கஞ்சா பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதேபோல கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக, சூலூர் காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சூலூரைச் சேர்ந்த கோகுல் (26) மற்றும் ராவத்தூர் பகுதியைச் சேர்ந்த சேதுபதி (26) ஆகியோர் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.  இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் 2.300 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 

இதேபோல மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ள அறிவொளி நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, மேட்டுப்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (26) என்பவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது விருதுநகரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்த 1.250 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget