மேலும் அறிய

ABP Impact : ’கோத்தகிரி லாங்வுட் சோலையில் கட்டுமானங்கள் கட்டப்படாது’ - நீலகிரி மாவட்ட வன அலுவலர் விளக்கம்

லாங்வுட் சோலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விளக்க மையம் அமைக்க கட்டுமானங்கள் கட்டவும், சூழல் சுற்றுலா அமைக்கவும் சூழலியல் செயற்பாட்டாளர்களும், அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் லாங்வுட் சோலை அமைந்துள்ளது. 116 ஹெக்டர் பரப்பளவில் பல்லுயிர் சூழல் மண்டலத்தில் அமைந்துள்ள இந்த காட்டில், அரிய வகை தாவரங்கள், ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக இருந்து வருகிறது. பசுமை மாறாத காடான இந்த காட்டில் உள்ள சதுப்பு நிலங்களில் இருந்து ஆண்டுதோறும் தண்ணீர் உற்பத்தியாகி வருகிறது.

லாங்வுட் சோலை:

இந்த தண்ணீர் கோத்தகிரி பகுதியில் உள்ள 18 கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. சிறந்த காடுகளில் ஒன்றான லாங்வுட் சோலைக்குகுயின்ஸ் கெனோபிஎன்ற சர்வதேச அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் லாங்வுட் சோலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விளக்க மையம் அமைக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கட்டுமானங்கள் கட்டவும், சூழல் சுற்றுலா அமைக்கவும் சூழலியல் செயற்பாட்டாளர்களும், அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “லாங்க்வுட் சோலைகாட்டினில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விளக்க மையம் என்ற பெயரில் பெரிய அளவிலான கட்டிடங்களும், கழிவறைகளும் கட்டுவதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் மிகவும் தொன்மையான லாங்க்வுட் வனமும், வாழும் உயிரினங்களும், நீர் சேமிக்கும் ஈர நிலங்களும், பன்னெடுங்காலமாக உயிர் நீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகளும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் வந்தால், காடு குப்பை மேடாகும். வளர்ச்சி என்ற பெயரில் காடழிப்பு நடக்கும். அதனால் இந்த திட்டத்தை கைவிட கோரி கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.


ABP Impact : ’கோத்தகிரி லாங்வுட் சோலையில் கட்டுமானங்கள் கட்டப்படாது’ - நீலகிரி மாவட்ட வன அலுவலர் விளக்கம்

ABP Impact:

இது குறித்து ஏபிபிநாடு செய்தி வெளியிட்ட நிலையில், நீலகிரி மாவட்ட வன அலுவலர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நீலகிரி மாவட்டம் சோலை காடுகளின் தாயகமாக இருப்பதால், சோலா பாதுகாப்பு மையத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்தத் திட்டம், சோலாவின் முக்கியத்துவம், நீரியல் துறையில் சோலாக்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றி பொதுமக்களுக்கும், மாணவர் சமூகங்களுக்கும் கல்வி கற்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீலகிரியில் சோலா பாதுகாப்பு மையம் அமைப்பதற்காக பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. லாங்வுட் சோலா அனைத்திலும் தனித்துவமான சோலாவாக இருப்பதால், தேர்வு செய்யப்பட்ட தளங்களில் ஒன்றாக மாறியது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகருக்கு அருகில் உள்ள லாங்வுட் சோலா ஒரு முக்கியமான சோலா காடு. லாங்வுட் சோலா காடு உள்ளூர் மக்களால் தொட்டா சோலா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சோலா நீலகிரி சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கோத்தகிரி நகரின் அருகே எஞ்சியிருக்கும் இயற்கையான சோலாவின் ஒரே பெரிய சோலா இது. இந்த சோலா பகுதி, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வளமான பன்முகத்தன்மையை ஆதரிக்கிறது. அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, லாங்வுட் ஷோலா காப்புக்காட்டில் ஒரு சோலா பாதுகாப்பு மையத்தை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன் பாதுகாப்பு முயற்சிகளில் உள்ளூர் சமூகத்தையும் ஈடுபடுத்துகிறது. திட்ட தயாரிப்புத் துறையின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு மையத்தை நிறுவுவது குறித்து மக்களின் கருத்துக்களைப் பெற மூன்று பங்குதாரர்களின் கூட்டங்களை நடத்தியது மற்றும் 21.11.2023 அன்று 3வது கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் சுமார் 70 பேர் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை கேட்டறியப்பட்டது.

கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை:

இதற்கிடையில் அரசு மற்றும் வனத்துறையினர் லாங்வுட் சோலாவை கட்டிடங்கள் கட்டி அழித்து, அதன் மூலம் கோத்தகிரி மக்களின் நீர்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவது தெரிய வருகிறது. இதை பொய்யான செய்தி என வனத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. சோலாவைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக ஒரு பாதுகாப்பு மையத்தை நிறுவுவதே துறையின் நோக்கம். லாங்வுட் சோலாவில் இருக்கும் காலி இடத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்க கவனமாக திட்டமிடப்பட்டது. இருப்பினும் லாங்வுட் சோலா பகுதிகளில் எந்த வித கட்டுமானமும் தொடங்கப்படவில்லை.

ஏனெனில் திட்டம் இன்னும் உருவாக்கும் (ஆரம்ப) கட்டத்தில் தான் உள்ளது. இந்தத் திட்டத்தை ஜனநாயகமாக்குவதற்கும், அவர்களின் கருத்துகளை உள்ளடக்குவதற்கும் பங்குதாரர் கூட்டம் துறையால் நடத்தப்பட்டது. சோலா காடுகளில் அழிவுகரமான கட்டுமானங்களை அரசாங்கம் மேற்கொள்ள விரும்புவது போல் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றது. இது ஆதாரமற்றது மற்றும் திட்டத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் எதிரானது. ஒரு சோலா பாதுகாப்பு மையம் காலத்தின் தேவை, அது நீலகிரியில் மேற்கொள்ளப்படும் மற்றும் பங்குதாரர்களின் கருத்துகளுக்கு இடமளித்து மையத்திற்கான இடம் ஆராயப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget