மேலும் அறிய

ABP Impact : ’கோத்தகிரி லாங்வுட் சோலையில் கட்டுமானங்கள் கட்டப்படாது’ - நீலகிரி மாவட்ட வன அலுவலர் விளக்கம்

லாங்வுட் சோலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விளக்க மையம் அமைக்க கட்டுமானங்கள் கட்டவும், சூழல் சுற்றுலா அமைக்கவும் சூழலியல் செயற்பாட்டாளர்களும், அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் லாங்வுட் சோலை அமைந்துள்ளது. 116 ஹெக்டர் பரப்பளவில் பல்லுயிர் சூழல் மண்டலத்தில் அமைந்துள்ள இந்த காட்டில், அரிய வகை தாவரங்கள், ஏராளமான பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாக இருந்து வருகிறது. பசுமை மாறாத காடான இந்த காட்டில் உள்ள சதுப்பு நிலங்களில் இருந்து ஆண்டுதோறும் தண்ணீர் உற்பத்தியாகி வருகிறது.

லாங்வுட் சோலை:

இந்த தண்ணீர் கோத்தகிரி பகுதியில் உள்ள 18 கிராமங்களை சேர்ந்த 50 ஆயிரம் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. சிறந்த காடுகளில் ஒன்றான லாங்வுட் சோலைக்குகுயின்ஸ் கெனோபிஎன்ற சர்வதேச அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் லாங்வுட் சோலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விளக்க மையம் அமைக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கட்டுமானங்கள் கட்டவும், சூழல் சுற்றுலா அமைக்கவும் சூழலியல் செயற்பாட்டாளர்களும், அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “லாங்க்வுட் சோலைகாட்டினில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விளக்க மையம் என்ற பெயரில் பெரிய அளவிலான கட்டிடங்களும், கழிவறைகளும் கட்டுவதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் மிகவும் தொன்மையான லாங்க்வுட் வனமும், வாழும் உயிரினங்களும், நீர் சேமிக்கும் ஈர நிலங்களும், பன்னெடுங்காலமாக உயிர் நீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகளும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. சுற்றுலா பயணிகள் வந்தால், காடு குப்பை மேடாகும். வளர்ச்சி என்ற பெயரில் காடழிப்பு நடக்கும். அதனால் இந்த திட்டத்தை கைவிட கோரி கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்தனர்.


ABP Impact : ’கோத்தகிரி லாங்வுட் சோலையில் கட்டுமானங்கள் கட்டப்படாது’ - நீலகிரி மாவட்ட வன அலுவலர் விளக்கம்

ABP Impact:

இது குறித்து ஏபிபிநாடு செய்தி வெளியிட்ட நிலையில், நீலகிரி மாவட்ட வன அலுவலர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நீலகிரி மாவட்டம் சோலை காடுகளின் தாயகமாக இருப்பதால், சோலா பாதுகாப்பு மையத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்தத் திட்டம், சோலாவின் முக்கியத்துவம், நீரியல் துறையில் சோலாக்களின் பங்கு ஆகியவற்றைப் பற்றி பொதுமக்களுக்கும், மாணவர் சமூகங்களுக்கும் கல்வி கற்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீலகிரியில் சோலா பாதுகாப்பு மையம் அமைப்பதற்காக பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. லாங்வுட் சோலா அனைத்திலும் தனித்துவமான சோலாவாக இருப்பதால், தேர்வு செய்யப்பட்ட தளங்களில் ஒன்றாக மாறியது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகருக்கு அருகில் உள்ள லாங்வுட் சோலா ஒரு முக்கியமான சோலா காடு. லாங்வுட் சோலா காடு உள்ளூர் மக்களால் தொட்டா சோலா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சோலா நீலகிரி சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கோத்தகிரி நகரின் அருகே எஞ்சியிருக்கும் இயற்கையான சோலாவின் ஒரே பெரிய சோலா இது. இந்த சோலா பகுதி, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வளமான பன்முகத்தன்மையை ஆதரிக்கிறது. அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, லாங்வுட் ஷோலா காப்புக்காட்டில் ஒரு சோலா பாதுகாப்பு மையத்தை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன் பாதுகாப்பு முயற்சிகளில் உள்ளூர் சமூகத்தையும் ஈடுபடுத்துகிறது. திட்ட தயாரிப்புத் துறையின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு மையத்தை நிறுவுவது குறித்து மக்களின் கருத்துக்களைப் பெற மூன்று பங்குதாரர்களின் கூட்டங்களை நடத்தியது மற்றும் 21.11.2023 அன்று 3வது கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் சுமார் 70 பேர் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை கேட்டறியப்பட்டது.

கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை:

இதற்கிடையில் அரசு மற்றும் வனத்துறையினர் லாங்வுட் சோலாவை கட்டிடங்கள் கட்டி அழித்து, அதன் மூலம் கோத்தகிரி மக்களின் நீர்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவது தெரிய வருகிறது. இதை பொய்யான செய்தி என வனத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. சோலாவைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக ஒரு பாதுகாப்பு மையத்தை நிறுவுவதே துறையின் நோக்கம். லாங்வுட் சோலாவில் இருக்கும் காலி இடத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்க கவனமாக திட்டமிடப்பட்டது. இருப்பினும் லாங்வுட் சோலா பகுதிகளில் எந்த வித கட்டுமானமும் தொடங்கப்படவில்லை.

ஏனெனில் திட்டம் இன்னும் உருவாக்கும் (ஆரம்ப) கட்டத்தில் தான் உள்ளது. இந்தத் திட்டத்தை ஜனநாயகமாக்குவதற்கும், அவர்களின் கருத்துகளை உள்ளடக்குவதற்கும் பங்குதாரர் கூட்டம் துறையால் நடத்தப்பட்டது. சோலா காடுகளில் அழிவுகரமான கட்டுமானங்களை அரசாங்கம் மேற்கொள்ள விரும்புவது போல் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றது. இது ஆதாரமற்றது மற்றும் திட்டத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் எதிரானது. ஒரு சோலா பாதுகாப்பு மையம் காலத்தின் தேவை, அது நீலகிரியில் மேற்கொள்ளப்படும் மற்றும் பங்குதாரர்களின் கருத்துகளுக்கு இடமளித்து மையத்திற்கான இடம் ஆராயப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Virat Kohli: இன்று மூன்றாவது 3வது ஒருநாள் போட்டி! கையில் இருக்கும் புது ரெக்கார்ட்.. ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கிங் கோலி?
Embed widget