மேலும் அறிய

தீபாவளி போனஸ் கொடுக்காத கடை முன்பு குப்பைகளை கொட்டிய தூய்மைப் பணியாளர்

கடை அருகே இருந்த குப்பையை எடுத்து வந்து, பூட்டப்பட்டு இருந்த கடை முன்பாக கொட்டியுள்ளார். இது அந்த கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீபாவளி போனஸ் கொடுக்காத கடையின் முன்பு தூய்மைப் பணியாளர் குப்பை கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயங்கி வருகின்றன. நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் என்பவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராமச்சந்திரா சாலையில் எல்.இ.டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜேம்ஸ் கடைக்கு கடந்த 4 ஆம் தேதி தூய்மைப் பணியாளர் ஒருவர் வந்து அப்பகுதியில் தூய்மை பணி செய்து வருவதாகவும், தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி தீபாவளி போனஸ் வழங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது 20 ஆம் தேதிக்கு மேல் தருவதாக ஜேம்ஸ் கூறியுள்ளார். 

அப்போது உடனடியாக 500 ரூபாய் தர வேண்டும் என அந்த தூய்மைப் பணியாளர் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அந்த தூய்மைப் பணியாளர் அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி காலையில் அந்த தூய்மைப் பணியாளர் அந்த கடை அருகே இருந்த குப்பையை எடுத்து வந்து, பூட்டப்பட்டு இருந்த கடை முன்பாக கொட்டியுள்ளார். இது அந்த கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.


தீபாவளி போனஸ் கொடுக்காத கடை முன்பு குப்பைகளை கொட்டிய தூய்மைப் பணியாளர்

பின்னர் கடையை திறக்க ஜேம்ஸ் வந்து பார்த்த போது, கடையின் முன்பாக குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அந்த குப்பைகளை அங்கிருந்து அகற்றி தூய்மை செய்துள்ளார். கடை முன்பு எப்படி குப்பை வந்தது என்பதை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் ஜேம்ஸ் பார்த்துள்ளார். அப்போது தூய்மைப் பணியாளர் குப்பைகளை எடுத்து வந்து கடை முன்பாக கொட்டியது தெரியவந்தது. இந்த காட்சிகளை ஜேம்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பல தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளில் பணம் கேட்டு வருவதாகவும், கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் பணம் கேட்டு கொடுக்காத கடை முன்பு தூய்மைப் பணியாளர் சிலர் குப்பையை கொட்டி செல்வது வாடிக்கையாக கொண்டு இருப்பதாகவும் அப்பகுதி வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். வலுக்கட்டாயமாக வியாபாரிகளிடம் தீபாவளி பணம் கேட்கும் ஊழியர்கள் மீது கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கடையின் முன்பு குப்பைகளை கொட்டிய தூய்மை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தீபாவளி போனஸ் கொடுக்காத கடை முன்பு தூய்மைப் பணியாளர் குப்பை கொட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Also Read : Crime: பாஸ்போர்ட் இணையதளத்தில் ஊடுருவிய ஹேக்கர்ஸ்..! அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: என் கேரியரை எவன்டா முடிப்பான்? சதத்தால் சவுக்கடி தந்த விராட் கோலி!
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
Virat Kohli: ஒத்த சதம்.. சச்சினின் மொத்த ரெக்கார்டையும் காலி செய்த கோலி - ரெக்கார்டை பாருங்க
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
டிட்வா புயலால் தொடர் மழை... 25 லட்சம் வாழை இலை அறுவடை முடக்கம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
காதலன் இறந்த சோகம்! காதலி எடுத்த விபரீத முடிவு.. திருப்பத்தூரில் பரபரப்பு
Embed widget