மேலும் அறிய

’அலுவல் மொழியை தேசிய மொழியாக்குவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது’ - கனிமொழி எம்.பி.

ஒவ்வொரின் அடையாளமும் அவர்களின் மொழி. என் மீது ஒரு மொழியை பேச வேண்டுமென கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது - கனிமொழி

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தலைமை விருந்தினராக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கனிமொழி எம்பி மாணவர்களிடையே பேசும் போது, “சத்துணவு திட்டத்தை முதலில் தொடங்கிய மாநிலம் தமிழ்நாடு. காலை உணவு திட்டத்தை இந்திய அளவில் துவங்கி வைத்துள்ளது தமிழ்நாடு. இந்திய அளவில் ஐ.டி. பாலிசியை உருவாக்கியவர் கலைஞர். மிகச்சிறந்த தலைவர்கள் மக்களை படிக்கக் கூடியவர்கள். கம்யூனிகேசன் என்பது வளர்ந்து வருகிறது. மாறிக் கொண்டே வருகிறது.


’அலுவல் மொழியை தேசிய மொழியாக்குவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது’ - கனிமொழி எம்.பி.

அரசியலில் தவறுகள் நடைபெறும் போது தொழில் நுட்பத்தால் வைரல் ஆகிறது. இது இளைஞர், இளம் பெண்களின் உலகமாக உள்ளது. தந்தை பெரியார், அண்ணா ஆகியோரை இணைத்து கருத்துகளை தெரிவிக்கும் தலைவராக கலைஞர் இருந்துள்ளார். தமிழ்நாட்டில் இன்று அறிவியல் பூர்வமாக நல்ல கம்யூனிகேஷன் தொடர்பு உள்ளதற்கு காரணம் மேலே குறிப்பிட்ட 3 தலைவர்கள். பெண்கள் போலியான பாதுகாப்பில் இருந்து வெளியே வர வேண்டும். நாம் கம்யூனிகேஷனில் எந்த இடத்தில் இருக்கோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் உணர்வு அனைவருக்கும் உள்ளது. மொழி ,அடையாளம் ஆகியவை பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி, ”ஒவ்வொரின் அடையாளமும் அவர்களின் மொழி. என் மீது ஒரு மொழியை பேச வேண்டுமென கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. மொழி என்பது என்னுடைய அடையாளம் என்னை பற்றியும், என் வரலாற்றை தெரிந்துக் கொள்ள உதவுகிறது. நம்முடைய மொழி அடையாளம், சுயமரியாதை. மீண்டும் மொழி போர் நிலை வந்துவிடக்கூடாது என்று தான் முதல்வர் அறிக்கை வெளியிடுள்ளார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகள் இருக்ககூடிய சூழல் தான் தமிழகத்தில் உள்ளது. எதையும் அழித்து விட வேண்டுமென கிடையாது.


’அலுவல் மொழியை தேசிய மொழியாக்குவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது’ - கனிமொழி எம்.பி.

உலகத்துடன் தொடர்பு கொள்ள ஆங்கிலம், நம்முடன் பேசுவதற்கு தமிழ் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. இந்தியாவை பொறுத்தவரை பட்டியல் 8ல் உள்ள மொழிகள் எல்லாம் இணையாக, ஒரே நிலையில் வைத்து பார்க்க வேண்டும். ஆனால் சில மொழிகளுக்கு முக்கியத்துவம் தருவது, அலுவல் மொழியை தேசிய மொழியாக கொண்டு வந்து சேர்ப்பதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய முதல்வர் மட்டுமின்றி, மற்ற மாநில முதல்வர்கள் கூட எதிர்வினை ஆற்றி உள்ளார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். தமிழிசை செளந்தரராஜன் பெண்கள் ஆடை அணிவது குறித்த கருத்து தொடர்பான கேள்விக்கு ”பெரியார் குறிப்பிட்ட மாதிரி பெண் தனக்கு எது வசதியான உடையோ அலங்காரமோ அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அதை பெரியார் வலியுறுத்தியுள்ளார். கட்டுபாடு என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்” என பதிலளித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை : கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல், வனத்துறை அறிவிப்பு !!!
மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை : கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல், வனத்துறை அறிவிப்பு !!!
தமிழ்நாட்டுக்கு வயநாடு போன்ற ஆபத்தா.? – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்....
தமிழ்நாட்டுக்கு வயநாடு போன்ற ஆபத்தா.? – அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அதிரடி விளக்கம்....
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Putin Backs India: “இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
“இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தா எதிர்விளைவுகள ஏற்படுத்தும்“ - US-க்கு புதின் மறைமுக எச்சரிக்கை
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
டாடா EV காருக்கு ரூ.1.45 லட்சம் மெகா தள்ளுபடி: செம சேஃப்டி, ரேஞ்ச், இறுதி விலை- இதோ விவரம்!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Embed widget