மேலும் அறிய

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தி பதாகை அகற்றம் ; எதிர்ப்பு கிளம்பியதால் நடவடிக்கை

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தியில் மட்டும் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ரயில்வே அதிகாரிகள் அப்பதாகையை கிழித்து அகற்றினர்.

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த இரயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தில் சேவை மையத்தின் அறிவிப்பு பதாகை, ஆங்கிலம், தமிழ் மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் எழுதப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக அச்சிடப்பட்ட காகித அறிவிப்பு பதாகை சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டது. இதில் ஹிந்தி எழுத்துக்களில் ’சகயோக்; என எழுதப்பட்டிருந்தது. அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வருவதால் அவர்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்டிருப்பதாக பலரும் எண்ணிய நிலையில், அதன் மேலே ஆங்கிலத்திலும் சகயோக் எனவும் தமிழ் எழுத்திலும் சகயோக் என அச்சிடப்பட்டிருந்தது. 


திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தி பதாகை அகற்றம் ; எதிர்ப்பு கிளம்பியதால் நடவடிக்கை

தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளை புறக்கணிக்கப்பட்டு, இந்தி மொழியில் மட்டும் அறிவிப்பு பதாகை இருந்தது. இதனால் அதன் அர்த்தம் பலருக்கும் புரியாத சூழல் ஏற்பட்டது. ஹிந்தியில் சகயோக் என எழுதப்பட்டால் ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர் எனவும், தமிழில் சேவை மையம் என எழுதப்பட்டால் தானே அனைத்து மொழியினருக்கும் புரியும் என இரயில் பயணிகள் தெரிவித்தனர். மேலும் அனைத்து மொழியினரும் சகயோக் என படித்தால் அதன் அர்த்தத்தை எப்படி புரிந்து கொள்வது எனக் கேள்வி எழுப்பிய இரயில் பயணிகள், இது அப்பட்டமான இந்தி திணிப்பு என தெரிவித்தனர். இது தொடர்பான  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இந்தி திணிப்பிற்கு கண்டனம் தெரிவித்தனர்.இதனையடுத்து சுதாரித்த ரயில்வே அதிகாரிகள் சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பெயர் பதாகை கிழிக்கப்பட்டு அகற்றினர்.

திருப்பூர் ரயில் நிலைய சேவை மைய பெயர் தமிழில் எழுதப்பட்டதை அகற்றி இந்தி எழுத்தால் எழுதியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அதிகாரிகளால் இன்று அந்தப் பதாகை அகற்றப்பட்டுள்ளது. 'காவி'களின் இந்தித் திணிப்பை, 'கருப்பு' தார் கொண்டு அழித்த திராவிட மண் என்றும் அனுமதிக்காது. எச்சரிக்கிறோம். pic.twitter.com/O3MUuSSR59

— Udhay (@Udhaystalin) November 29, 2022

">

இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “திருப்பூர் ரயில் நிலைய சேவை மைய பெயர் தமிழில் எழுதப்பட்டதை அகற்றி இந்தி எழுத்தால் எழுதியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் அதிகாரிகளால் இன்று அந்தப் பதாகை அகற்றப்பட்டுள்ளது. 'காவி'களின் இந்தித் திணிப்பை, 'கருப்பு' தார் கொண்டு அழித்த திராவிட மண் என்றும் அனுமதிக்காது. எச்சரிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதே போல ’தொடர்வண்டி நிலையங்களா... இந்தி திணிப்பு மையங்களா? மறைமுக இந்தித் திணிப்பை கைவிட வேண்டும்’ என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு அலுவலகங்களாக இருந்தாலும்  பொதுமக்களுக்கு சேவை வழங்கும் தொடர்வண்டி நிலையம் போன்ற இடங்களில் உள்ளூர் மொழியான தமிழில் தான்  அறிவிப்பு பலகைகள்  முதன்மையாக வைக்கப்பட வேண்டும். கூடுதலாக ஆங்கிலம், இந்தியில் வைத்துக் கொள்ளலாம்.

திருப்பூர்தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது!(1/4) pic.twitter.com/KFS3Udcg4y

— Dr S RAMADOSS (@drramadoss) November 29, 2022

">

ஆனால், திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் சேவை மையம் என்ற தமிழ்ச் சொற்களால் ஆன பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற இந்தி சொல் தமிழ், ஆங்கிலம், இந்தியில் எழுதப்பட்டுள்ளது. இந்தி தெரிந்தவர்களைத் தவிர வேறு யாருக்கும் இது  புரியாது. இது புதிய வகை இந்தித் திணிப்பாகும். புதிய, புதிய வகைகளில் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் தொடர்வண்டித்துறை விளையாடக் கூடாது. இந்தியைத் திணிக்கும் இத்தகைய அறிவிப்பு பலகைகள் திருப்பூர் உட்பட எங்கு இருந்தாலும்  அவற்றை தொடர்வண்டித் துறை உடனடியாக அகற்ற வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சிBahujan Samaj state president death | பகுஜன் சமாஜ் மாநில தலைவர் வெட்டிக் கொலை!POLICE தேடுதல் வேட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!
Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
Embed widget