மேலும் அறிய

Local Body Election | 'கோவையை கலவர பூமியாக மாற்ற திமுக முயற்சிக்கிறது’ - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

”வெளியூர் ரவுடிகளை திமுக கோவையில் களமிறக்கியுள்ளது. இதற்காக சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரவுடிகளை வார்டு வாரியாக போட்டு மக்களையும், மாற்றுக் கட்சியினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்”

கோவையில் அதிமுகவினர் மீது காவல் துறையினர் பொய் வழக்கு போடுவதாக கூறி, ராமநாதபுரம் காவல் நிலையத்தை 100 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதலின் பேரில், அதிமுகவினர் மீது காவல் துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில் கோவையில் கரூர் மற்றும் வெளி மாநில ரவுடிகள் திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்துவதோடு, வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும் அதிமுகவினர் புகார் அளித்ததால் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல், அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் கூறிய அவர்கள், உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


Local Body Election | 'கோவையை கலவர பூமியாக மாற்ற திமுக முயற்சிக்கிறது’ - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி, “கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது திமுக கோவையை கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கிறது. சென்னை, கரூர் உள்ளிட்ட வெளியூர் ரவுடிகளை திமுக கோவையில் களமிறக்கியுள்ளது. இதற்காக சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரவுடிகளை வார்டு வாரியாக போட்டு மக்களையும், மாற்றுக் கட்சியினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி 150 கண்டெய்னர்களில் பரிசுப் பொருட்களை கொண்டு வந்து, வாக்காளர்களுக்கு வெளிப்படையாக கொடுத்து வருகின்றனர். இது போல ஒரு தேர்தலை பார்த்ததில்லை. கோவை மக்கள் அமைதியானவர்கள். அமைதியை கெடுக்கும் விதமாக வெளியூர் ரவுடிகளால் மோசமான சூழலை உருவாக்கி வருகின்றனர். திமுக அரசு தோல்வி பயத்தால் மோசமான செயலில் ஈடுபட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவுகளை மீறி திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். இதற்கு காவல் துறையினர் உடந்தையாக உள்ளனர். காவல் துறையினர் திமுகவினர் போல மாறி, திமுகவினர் உடன் இணைந்து பணம் கொடுத்து வருகின்றனர். தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.


Local Body Election | 'கோவையை கலவர பூமியாக மாற்ற திமுக முயற்சிக்கிறது’ - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

வெளியூர் ரவுடிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுத்த அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாண சுந்தரத்தை கைது செய்து இரவு முழுவதும் சித்ரவதை செய்துள்ளனர். பூத் சிலிப்பை அதிகாரிகள் கொடுக்காமல், திமுகவினர் வழங்கி வருகின்றனர். திமுக அரசு 9 மாதங்களாக துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. அதிமுக திட்டங்களை தான் திமுக செய்து வருகிறது. மக்களை துன்புறுத்துவதை வேடிக்கை பார்க்க மாட்டோம். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில், ஆளுநரிடம் புகார் அளிப்போம்” என அவர் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Embed widget