மேலும் அறிய

மாஞ்சோலை எஸ்டேட்டை ‘டேன் டீ’ எடுத்து நடத்த வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயமாக கையெழுத்து வாங்கி வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் நீலகிரி, நெல்லை, திண்டுக்கல் உட்பட 5 மாவட்டங்களில் தேயிலை தோட்டங்கள், காபி தோட்டங்கள் உருவாக்கப்பட்டு 10 லட்சம் தொழிலாளர்கள் வேலையில்  இருக்கின்றனர். நெல்லை களக்காடு முண்டந்துறை வனப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கபட்டவை. இவை 99 வருட குத்தகைக்காக பிபிடிசி என்ற நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டது. குத்தகை காலம் முடிவடைய உள்ள நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயமாக கையெழுத்து வாங்கி வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இன்றுடன் வேலையை நிறுத்தி விட்டனர். 45 நாட்களுக்குள் இருப்பிடத்தை காலி செய்ய வலியுறுத்துகின்றனர்.

டேன் டீ எடுக்க வேண்டும்

8700 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமான நிலம். இந்த நிர்வாகத்திற்கான ஒப்பந்தம் முடிவடைகின்றதே தவிர, இதை காரணம் காட்டி வெளியேற்றுவது என்பது சரியல்ல. 20 முதல் 30 வருடம் பணிபுரிந்த தொழிலாளர் களுக்கு ஒரு லட்சம் தருவதாக கூறி விட்டு இப்போது 25 சதவீதம் மட்டுமே முதலில் கொடுப்பதாக சொல்லி மோசடி செய்து இருக்கின்றனர். தமிழகத்தை சார்ந்த இலங்கை மலையகத் தமிழர்கள் திரும்பி வந்த போது, அவர்களுக்கு வேலை வாய்ப்பிற்காக தேயிலை தோட்டங்கள் ஏற்படுத்தபட்டது. நான்கைந்து தலைமுறையாக இருப்பவர்களை வெளியேற சொல்வது என்பது சரியல்ல. முதல்வர் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு தொழிலாளர் வாழ்வை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குத்தகை முடிந்தால் அதை டேன்டீ நிர்வாகம் எடுத்து நடத்த வேண்டும். சட்டமன்றத்தில் இது குறித்து கவனத்திற்கு கொண்டு சென்று  தீர்வை கொடுக்க வேண்டும். இது தொடர்பாக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் கொடுத்துள்ளேன். இதில் அரசியல் பாராது அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

அனுமதிக்க கூடாது

மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் 8700 நிலத்தை ஹெச்டிஎப்சி வங்கியில் அடகு வைத்து கடன் வாங்கி இருக்கின்றனர். அதில் பல அத்துமீறல்கள் நடந்து இருக்கின்றது. வேறு ஏதோ தவறான செயலில் ஈடுபட சதி இருப்பதாகவே கருதுகின்றேன். 2015 ல் கடன் வாங்கி இருக்கின்றனர்.அரசு இவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தாசில்தார் எப்படி சர்டிபிகேட் கொடுத்தார்? அரசின் நிலத்தை எப்படி அடகு வைத்தனர்? சட்ட சிக்கலை ஏற்படுத்தி தொழிலாளர்களை வெளியேற்ற பார்க்கின்றனர். தமிழக அரசு மீண்டும் தேயிலை தோட்டங்களை அழிப்பற்கு அனுமதிக்க கூடாது” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

100% குற்றமற்ற தமிழகம் சாத்தியமில்லை – துரை வைகோ கோவையில் பரபரப்பு பேட்டி...
100% குற்றமற்ற தமிழகம் சாத்தியமில்லை – துரை வைகோ கோவையில் பரபரப்பு பேட்டி...
ஒரே நாளில் 3 இடங்களில் ரெய்டு! கோவை பத்திர பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..
ஒரே நாளில் 3 இடங்களில் ரெய்டு! கோவை பத்திர பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி..
சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட இளைஞர் உடல்! கோவையில் கொலை மர்மம் அம்பலம்.
சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசப்பட்ட இளைஞர் உடல்! கோவையில் கொலை மர்மம் அம்பலம்.
அனைத்து திட்டங்களையும் உடனே செயல்படுத்த முடியாது.தவெக அரசுக்கு ஆதரவாக துரை வைகோ கருத்து!
அனைத்து திட்டங்களையும் உடனே செயல்படுத்த முடியாது.தவெக அரசுக்கு ஆதரவாக துரை வைகோ கருத்து!

வீடியோ

Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget