மேலும் அறிய

‘யேசுவே இந்தியாவை ஆசிர்வதியும்’ தேசியக் கொடிக்கு கீழ் சர்ச்சை வாசகம் - பாஜகவினர் போலீசில் புகார்

தேசியக் கொடியின் கீழ் ‘யேசுவை இந்தியாவை ஆசிர்வதியும்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகை இருந்துள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் தேசியக் கொடிக்கு கீழ் ‘யேசுவே இந்தியாவை ஆசிர்வதியும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பதாகை வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்திய நாட்டின் 75 ஆண்டு நிறைவு சுதந்திர தின விழா, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண தேசியக்கொடி என்ற திட்டம் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 13 முதல் 15 ம் தேதி வரை நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பறக்க விட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இதன்படி நாடு முழுவதும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து, சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

கோவை மாவட்டத்திலும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் தேசியக் கொடி ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடினர். இந்த நிலையில் கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மச்சாம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டின் முன்பு தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. சுதந்திர தினம் முடிவடைந்த பின்னரும் அந்தக் கொடி அகற்றப்படாமல் உள்ளது. தேசியக் கொடியின் கீழ் ‘யேசுவை இந்தியாவை ஆசிர்வதியும்’ என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகை இருந்துள்ளது. இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


‘யேசுவே இந்தியாவை ஆசிர்வதியும்’ தேசியக் கொடிக்கு கீழ் சர்ச்சை வாசகம் - பாஜகவினர் போலீசில் புகார்

இந்த நிலையில் தேசியக் கொடியை அவமதிப்பு செய்யும் வகையிலும், மதப்பிரச்சாரம் செய்யும் வகையிலும் செயல்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜகவினர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். பாஜக கோவை மாநகர சுந்தராபுரம் மண்டல தலைவர் முகுந்தன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “மச்சாம்பாளையம் வாரண்ட் ஆபீஸ் வீதியில் சண்முகம் என்பவரது வீட்டில் முன்பு ஒரு கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடாமல் ஒரு பதாகையில் பொருத்தப்பட்டு இருந்தது. 

முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் கொண்ட காலண்டர் அட்டையில் தேசியக் கொடி பின் செய்யப்பட்டு இருந்தது. அதன் முன்புறம் ‘ஏசுவே என் இந்தியாவை ஆசிர்வதியும்’ என்ற வாசகத்துடன் கட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு காரில் மதப்பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தேசியக் கொடியை அவமதித்த சண்முகம் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது தேசியக்கொடி அவமதிப்பு, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், சுதந்திர தினம் முடிவடைந்தும் தேசியக்கொடியை அகற்றாமல் பறக்க விட்டு அவமதிப்பு செய்தல் ஆகிய குற்றங்களுக்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில்  தேசியக்கொடி வைக்கப்பட்ட சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க : OPS Case Judgement : அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது..! நீதிபதி பரபரப்பு தீர்ப்பு..! இபிஎஸ்க்கு பின்னடைவு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
Coimbatore power cut: கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore power cut: கோவையில் நாளை (24-07-2026) எங்கெல்லாம் பவர் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (24-07-2026) எங்கெல்லாம் பவர் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore power cut: கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (23-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
DMK: தேர்தலில் படுதோல்வி.. பறிபோகிறது 20 மாவட்டச் செயலாளர்கள் பதவி? மு.க.ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு!
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
13 நாட்களுக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய ட்ரம்ப்; ஏன் இந்த முடிவு.? இத்தனை காரணங்களா.?
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
ரிஸ்க் இல்லை... ரிட்டர்ன்ஸ் டபுள்! ரூ.1 லட்சம் முதலீடு; ரூ.1 லட்சம் ரிட்டர்ன்.. அஞ்சல் துறை ஜாக்பாட் திட்டம்!
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினா 497 கி.மீட்டர் மைலேஜ்.. TVS Apache RTR 160 4V பைக் வாங்கலாமா?
Iran Vs Trump: ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
ஆறுச்சாமி ஆன ஈரான்; பெருமாள் பிச்சை ஆன ட்ரம்ப்; பாதி வழியில் விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
Embed widget