மேலும் அறிய

Coimbatore Water Scarcity: ஒரு வாரமாக தண்ணீர் இல்லை.. அவதியில் கோவை மக்கள்! காரணம் என்ன?

Coimbatore Water Scarcity: குந்தா அணை பராமரிப்பு பணிகள் காரணமாக பில்லூர் குடிநீர் திட்டத்தின் II, III கட்டங்கள் மற்றும் கவுண்டம்பாளையம்–வடவள்ளி–வீரகேரளம் (KVV) ஆகிய தண்ணீர் விநியோகம் தடைப்பட்டுள்ளன.

கோவை: குந்தா அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளைத் தொடர்ந்து பில்லூர் அணையிலிருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், கோயம்புத்தூரின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. தினசரி அவசிய தேவைகளுக்குத் தேவையான நீர் கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன.

தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) மேற்கொண்டு வரும் குந்தா அணை பராமரிப்பு பணிகள் எதிர்பார்த்ததை விட நீண்டுகொண்டே போனதால், பில்லூர் குடிநீர் திட்டத்தின் II, III கட்டங்கள் மற்றும் கவுண்டம்பாளையம்–வடவள்ளி–வீரகேரளம் (KVV) ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்திலும் விநியோகம் தடைப்பட்டுள்ளன.

மழையால் தாமதமான பணிகள்:

ஆரம்பத்தில் 2–3 நாட்கள் இடைநிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பருவமழை தாக்கம் காரணமாக அணை பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை, பராமரிப்பு பணிகளை மந்தமாக்கி, இடைநிறுத்தம் ஒரு வாரத்தைத் தாண்டியுள்ளது. இதனால் நகரின் பெரும்பகுதிகள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றன.

முன்கூட்டியே தகவல் இல்லை:

திடீர் தடை குறித்து முன்கூட்டியே தகவல் வழங்கப்பட்டிருந்தால், தண்ணீர் சேமித்து வைத்திருப்போம் என பொதுமக்கள்  குற்றம் சாட்டி வருகின்றனட்

"ஒரு வாரத்துக்கும் மேலாக தண்ணீர் வரவில்லை. தடைக்கு முன் ஒரு முறை தண்ணீரானது விநியோகம் செய்யப்பட்டிருந்தால் நாங்கள் தயாராக இருக்க முடிந்திருக்கும்," என்று பொதுமக்கள் தெரிவித்தனர்

தனித்தொழில் செய்பவர்கள், முதியவர்கள் மற்றும் குடும்பங்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் தண்ணீர் பற்றாக்குறையால் தினசரி வாழ்க்கையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். "வானிலை குளிர்ந்தாலும், தண்ணீர் இல்லாததால்தான் வீட்டில் உண்மையான ‘வெப்பம்’ எங்களுக்கு தான்," என பலர் ஏமாற்றத்துடன் கூறுகின்றனர்.

CCMC: சனிக்கிழமை மாலைக்குள் பணிகள் முடியும்

பொதுமக்களின் புகாருக்கு பதிலளித்த கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் எம். சிவகுரு பிரபாகரன், TNEB மேற்கொண்டு வரும் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை மாலைக்குள் முடிவடையும் என தெரிவித்துள்ளனர்

மேலும் அவர்கள் தெரிவித்ததாவது “கோவை நீர் விநியோகத்தின் முதன்மை ஆதாரம் பில்லூர். பராமரிப்பு காரணமாக பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. TNEB-க்கு இடையிடையே நீர் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அதே நேரத்தில் நகரத்தின் பிற ஆதாரங்களைப் பயன்படுத்தி சூழ்நிலையை சமாளித்து வருகிறோம்,” என அவர் தெரிவித்தார்.

CCMC மற்றும் TWAD வாரியங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றன. நீர் விநியோகம் மீண்டும் எப்போது சீராகும் என்ற எதிர்பார்ப்புடன், குடியிருப்புகள் சிரமங்களைக் கடந்து காத்திருக்கின்றன.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (14-8-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (13-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Embed widget