மேலும் அறிய

Coimbatore Water Scarcity: ஒரு வாரமாக தண்ணீர் இல்லை.. அவதியில் கோவை மக்கள்! காரணம் என்ன?

Coimbatore Water Scarcity: குந்தா அணை பராமரிப்பு பணிகள் காரணமாக பில்லூர் குடிநீர் திட்டத்தின் II, III கட்டங்கள் மற்றும் கவுண்டம்பாளையம்–வடவள்ளி–வீரகேரளம் (KVV) ஆகிய தண்ணீர் விநியோகம் தடைப்பட்டுள்ளன.

கோவை: குந்தா அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளைத் தொடர்ந்து பில்லூர் அணையிலிருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், கோயம்புத்தூரின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளது. தினசரி அவசிய தேவைகளுக்குத் தேவையான நீர் கூட இல்லாமல் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றன.

தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) மேற்கொண்டு வரும் குந்தா அணை பராமரிப்பு பணிகள் எதிர்பார்த்ததை விட நீண்டுகொண்டே போனதால், பில்லூர் குடிநீர் திட்டத்தின் II, III கட்டங்கள் மற்றும் கவுண்டம்பாளையம்–வடவள்ளி–வீரகேரளம் (KVV) ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டத்திலும் விநியோகம் தடைப்பட்டுள்ளன.

மழையால் தாமதமான பணிகள்:

ஆரம்பத்தில் 2–3 நாட்கள் இடைநிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பருவமழை தாக்கம் காரணமாக அணை பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை, பராமரிப்பு பணிகளை மந்தமாக்கி, இடைநிறுத்தம் ஒரு வாரத்தைத் தாண்டியுள்ளது. இதனால் நகரின் பெரும்பகுதிகள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றன.

முன்கூட்டியே தகவல் இல்லை:

திடீர் தடை குறித்து முன்கூட்டியே தகவல் வழங்கப்பட்டிருந்தால், தண்ணீர் சேமித்து வைத்திருப்போம் என பொதுமக்கள்  குற்றம் சாட்டி வருகின்றனட்

"ஒரு வாரத்துக்கும் மேலாக தண்ணீர் வரவில்லை. தடைக்கு முன் ஒரு முறை தண்ணீரானது விநியோகம் செய்யப்பட்டிருந்தால் நாங்கள் தயாராக இருக்க முடிந்திருக்கும்," என்று பொதுமக்கள் தெரிவித்தனர்

தனித்தொழில் செய்பவர்கள், முதியவர்கள் மற்றும் குடும்பங்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் தண்ணீர் பற்றாக்குறையால் தினசரி வாழ்க்கையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். "வானிலை குளிர்ந்தாலும், தண்ணீர் இல்லாததால்தான் வீட்டில் உண்மையான ‘வெப்பம்’ எங்களுக்கு தான்," என பலர் ஏமாற்றத்துடன் கூறுகின்றனர்.

CCMC: சனிக்கிழமை மாலைக்குள் பணிகள் முடியும்

பொதுமக்களின் புகாருக்கு பதிலளித்த கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் எம். சிவகுரு பிரபாகரன், TNEB மேற்கொண்டு வரும் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை மாலைக்குள் முடிவடையும் என தெரிவித்துள்ளனர்

மேலும் அவர்கள் தெரிவித்ததாவது “கோவை நீர் விநியோகத்தின் முதன்மை ஆதாரம் பில்லூர். பராமரிப்பு காரணமாக பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. TNEB-க்கு இடையிடையே நீர் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். அதே நேரத்தில் நகரத்தின் பிற ஆதாரங்களைப் பயன்படுத்தி சூழ்நிலையை சமாளித்து வருகிறோம்,” என அவர் தெரிவித்தார்.

CCMC மற்றும் TWAD வாரியங்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றன. நீர் விநியோகம் மீண்டும் எப்போது சீராகும் என்ற எதிர்பார்ப்புடன், குடியிருப்புகள் சிரமங்களைக் கடந்து காத்திருக்கின்றன.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
"கிக் பாக்சிங்கில் கோவை மாணவர்கள் கோல்டன் வேட்டை" - 20 தங்கம் வென்று சாதனை...
Coimbatore power cut: கோவையில் நாளை (06-06-2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க?
கோவையில் நாளை (06-06-2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க?
"அரைகுறை நிர்வாகம் நடத்துகிறது தமிழக அரசு" – செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்...

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget