மேலும் அறிய

கோவை: சிறிய ரயில் நிலையங்களை புறக்கணிக்கும் ரயில்கள் ; பயணிகள் கடும் அவதி

ரயில்கள் நின்று செல்லக்கூடிய ரயில் நிலையங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிய ரயில் நிலையங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாநகரங்கள் தொழில் வளர்ச்சி பெற்ற நகரங்களாக விளங்கி வருகின்றன.  இம்மாவட்டங்கள் இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பகுதிகளாக இருந்து வருகின்றன. இந்த மாவட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர்  எளிதாக சென்று வர ரயில் சேவையை பெரிதும் நம்பியுள்ளனர். குறைந்த கட்டணம், எளிதாக வந்து செல்லும் வசதி, குறுகிய நேரத்திற்குள் சென்றடைதல் உள்ளிட்ட காரணங்கள் அவர்கள் ரயில் பயணங்களை தேர்ந்தெடுக்க காரணங்களாக உள்ளது.


கோவை: சிறிய ரயில் நிலையங்களை புறக்கணிக்கும் ரயில்கள் ; பயணிகள் கடும் அவதி

கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, வழியாக சேலம் வரை செல்லும் இரயில்கள் 22 சிறிய இரயில் நிலையங்களில் நின்று சென்று வந்தன. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்பட்ட பாலக்காடு - திருச்சி இரயில், கோவை - நாகர்கோவில் ரயில், கோவை - சேலம்  இரயில் ஆகியவை தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தப்பட்டு இருந்த இந்த ரயில் சேவைகள் மீண்டும் துவங்கிய நிலையில், ரயில்கள் நின்று செல்லக்கூடிய ரயில் நிலையங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிய ரயில் நிலையங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முக்கியமான பெரிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும் இந்த ரயில்கள் சிங்காநல்லூர், இருகூர், சோமனூர், வஞ்சிபாளையம் உள்ளிட்ட சிறிய ரயில் நிலையங்களில் நின்று செல்வதில்லை. இதனால் அந்த ரயில்களை நம்பி வேலைகளுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வந்த ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிங்காநல்லூர், இருகூர் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காததால், பீளமேடு இரயில் நிலையம் வரை சென்று ரயில்களில் செல்ல வேண்டிய நிலை இருப்பதாக ரயில் பயணிகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி ரயில்கள் இயக்கும் நேரங்களும் மாற்றப்பட்டு இருப்பதால் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அந்த ரயில்களை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


கோவை: சிறிய ரயில் நிலையங்களை புறக்கணிக்கும் ரயில்கள் ; பயணிகள் கடும் அவதி

இது குறித்து ரயில் பயணியான வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் கூறுகையில், ”நான் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சிங்காநல்லூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து ரயில்களில் திருப்பூர் சென்று திரும்பி வருவது வழக்கம். கொரோனா பரவலுக்கு பிறகு சிங்காநல்லூர், இருகூர் ரயில் நிறுத்தங்களில் ரயில்கள் நிற்காமல் செல்கின்றன. இதனால் என்னைப் போன்ற திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு வேலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த கட்டணம், குறித்த நேரத்தில் சென்றடைய ரயில் பயணம் மட்டுமே சரியாக தேர்வாக இருந்து வந்தது.

தற்போது பீளமேடு ரயில் நிலையம் சென்று ரயில் ஏறுதல் அல்லது பேருந்தில் பயணம் செய்தல் ஆகியவைக்கு கூடுதல் செலவு, நேர விரயம், அலைச்சல் ஆகியவை ரயில் பயணிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்து வருவதால் அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மனு அளித்தும் ரயில்வே துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரயில்வே நிர்வாகம் அனைத்து ரயில் பயணிகளும் பயனடையும் வகையில் பழையபடி அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்லவும், உரிய நேரத்தில் ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

‘சவால்’ போட்டியில் சோகம் – நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
‘சவால்’ போட்டியில் சோகம் – நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
காம்பவுண்ட் சுவரில் தாவிய விலங்கு... சிறுத்தையா? காட்டு பூனையா? - பீதியில் கோவை மக்கள்...
காம்பவுண்ட் சுவரில் தாவிய விலங்கு... சிறுத்தையா? காட்டு பூனையா? - பீதியில் கோவை மக்கள்...
மதுபோதையில் மிரட்டல் ரைடு... கோவையில் இரவில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்....
மதுபோதையில் மிரட்டல் ரைடு... கோவையில் இரவில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்....
“கோவிந்தா கோவிந்தா” முழக்கத்தில் அதிர்ந்த காரமடை – மாசி மகா தேர் திருவிழா விமர்சை!
“கோவிந்தா கோவிந்தா” முழக்கத்தில் அதிர்ந்த காரமடை – மாசி மகா தேர் திருவிழா விமர்சை!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
T20 WC NZ vs SA: இதுக்குப் பேருதான் ஆலன் ஆடி! தென்னாப்பிரிக்க படுதோல்வி! இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
H Raja on Vijay:
H Raja on Vijay: "கட்டுப்படுத்துங்க விஜய்... ரொம்ப கவலையா இருக்கு.." அட்வைஸ் கொடுத்த எச்.பாஜக
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
Embed widget