மேலும் அறிய

கோவை: சிறிய ரயில் நிலையங்களை புறக்கணிக்கும் ரயில்கள் ; பயணிகள் கடும் அவதி

ரயில்கள் நின்று செல்லக்கூடிய ரயில் நிலையங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிய ரயில் நிலையங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாநகரங்கள் தொழில் வளர்ச்சி பெற்ற நகரங்களாக விளங்கி வருகின்றன.  இம்மாவட்டங்கள் இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் பகுதிகளாக இருந்து வருகின்றன. இந்த மாவட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர்  எளிதாக சென்று வர ரயில் சேவையை பெரிதும் நம்பியுள்ளனர். குறைந்த கட்டணம், எளிதாக வந்து செல்லும் வசதி, குறுகிய நேரத்திற்குள் சென்றடைதல் உள்ளிட்ட காரணங்கள் அவர்கள் ரயில் பயணங்களை தேர்ந்தெடுக்க காரணங்களாக உள்ளது.


கோவை: சிறிய ரயில் நிலையங்களை புறக்கணிக்கும் ரயில்கள் ; பயணிகள் கடும் அவதி

கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, வழியாக சேலம் வரை செல்லும் இரயில்கள் 22 சிறிய இரயில் நிலையங்களில் நின்று சென்று வந்தன. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்பட்ட பாலக்காடு - திருச்சி இரயில், கோவை - நாகர்கோவில் ரயில், கோவை - சேலம்  இரயில் ஆகியவை தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தப்பட்டு இருந்த இந்த ரயில் சேவைகள் மீண்டும் துவங்கிய நிலையில், ரயில்கள் நின்று செல்லக்கூடிய ரயில் நிலையங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிய ரயில் நிலையங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முக்கியமான பெரிய ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும் இந்த ரயில்கள் சிங்காநல்லூர், இருகூர், சோமனூர், வஞ்சிபாளையம் உள்ளிட்ட சிறிய ரயில் நிலையங்களில் நின்று செல்வதில்லை. இதனால் அந்த ரயில்களை நம்பி வேலைகளுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வந்த ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிங்காநல்லூர், இருகூர் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காததால், பீளமேடு இரயில் நிலையம் வரை சென்று ரயில்களில் செல்ல வேண்டிய நிலை இருப்பதாக ரயில் பயணிகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி ரயில்கள் இயக்கும் நேரங்களும் மாற்றப்பட்டு இருப்பதால் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அந்த ரயில்களை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


கோவை: சிறிய ரயில் நிலையங்களை புறக்கணிக்கும் ரயில்கள் ; பயணிகள் கடும் அவதி

இது குறித்து ரயில் பயணியான வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் கூறுகையில், ”நான் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். சிங்காநல்லூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து ரயில்களில் திருப்பூர் சென்று திரும்பி வருவது வழக்கம். கொரோனா பரவலுக்கு பிறகு சிங்காநல்லூர், இருகூர் ரயில் நிறுத்தங்களில் ரயில்கள் நிற்காமல் செல்கின்றன. இதனால் என்னைப் போன்ற திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு வேலைகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த கட்டணம், குறித்த நேரத்தில் சென்றடைய ரயில் பயணம் மட்டுமே சரியாக தேர்வாக இருந்து வந்தது.

தற்போது பீளமேடு ரயில் நிலையம் சென்று ரயில் ஏறுதல் அல்லது பேருந்தில் பயணம் செய்தல் ஆகியவைக்கு கூடுதல் செலவு, நேர விரயம், அலைச்சல் ஆகியவை ரயில் பயணிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. ரயில் பயணிகள் கடும் அவதி அடைந்து வருவதால் அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மனு அளித்தும் ரயில்வே துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரயில்வே நிர்வாகம் அனைத்து ரயில் பயணிகளும் பயனடையும் வகையில் பழையபடி அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்லவும், உரிய நேரத்தில் ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளப்பாளையம் சிறுமி படுகொலை: தமிழகத்தையே உலுக்கிய கொடூரம் - குற்றவாளிகளை தூக்கிலிட அன்புமணி முழக்கம்!
பள்ளப்பாளையம் சிறுமி படுகொலை: தமிழகத்தையே உலுக்கிய கொடூரம் - குற்றவாளிகளை தூக்கிலிட அன்புமணி முழக்கம்!
Kovai Child Murder Case: சூலூர் சிறுமி மரண வழக்கில் சிக்கிய அரக்கர்கள்... கோவையை உலுக்கிய நள்ளிரவு சம்பவம்...
Kovai Child Murder Case: சூலூர் சிறுமி மரண வழக்கில் சிக்கிய அரக்கர்கள்... கோவையை உலுக்கிய நள்ளிரவு சம்பவம்...
லட்சங்கள் செலவில் கட்டிய புதிய பஸ் ஸ்டாண்ட்… திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றிய ஊழியர்கள்.?
லட்சங்கள் செலவில் கட்டிய புதிய பஸ் ஸ்டாண்ட்… திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றிய ஊழியர்கள்.?
உறவினர் வீட்டில் நடந்த கொடூரம்… 2 வயது குழந்தை பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறை...
உறவினர் வீட்டில் நடந்த கொடூரம்… 2 வயது குழந்தை பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறை...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
TN Govt Power Cut: நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
Vijay vs Eps : வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
TVK VIJAY: ”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
Embed widget