மேலும் அறிய

கோவை - சீரடி இடையே தனியார் ரயில்; எகிறும் டிக்கெட் விலை - எதிர்க்கும் தொழிற்சங்கங்கள்..!

பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதல் முறையாக தனியார் ரயில் சேவை இன்று தொடங்குகிறது. கோவையில் இருந்து சீரடிக்கு ஆன்மிக சுற்றுலா ரயிலாக இயக்கப்படுகிறது.

பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதல் முறையாக தனியார் ரயில் சேவை இன்று தொடக்க உள்ளது. கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதனை இயக்கவுள்ளது. கோவையில் இருந்து சீரடிக்கு ஆன்மிக சுற்றுலா ரயிலாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், இன்று முதல் பயணத்தை தொடங்க உள்ளது. வாரம் ஒரு முறை செல்லும் இந்த ரயிலில் டிக்கெட் முதல் பராமரிப்பு பணிகள் வரை தனியார் நிறுவனமே மேற்கொள்ள உள்ளது.


கோவை - சீரடி இடையே தனியார் ரயில்; எகிறும் டிக்கெட் விலை - எதிர்க்கும் தொழிற்சங்கங்கள்..!

பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் தனியார் வசம் கொடுக்கப்பட்டுள்ள ரயிலில் உள்கட்டமைப்பு வடிவங்களை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த ரயில் கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு, மந்திராலயம் வழியாக சீரடி சென்றடையும். இதற்கான டிக்கெட் ஆனது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலத்தில் உள்ள சாய்பாபா கோயில்களில் கிடைக்கும் என தனியார் ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில் கட்டணம்

இந்த ரயில் சேவையின் கட்டணமானது ரயில் கட்டணம், பேக்கேஜ் கட்டணம் என இரண்டு வகையாக உள்ளது. கோவையில் இருந்து சீரடிக்கு செல்ல 1,458 கிலோமீட்டர் தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் 1,280 ரூபாயாக உள்ள நிலையில், தனியார் நிறுவனம் வசூலிக்கும் ரயில் கட்டணம் ரூ.2,500 மற்றும் பேக்கேஜ் கட்டணமானது 4,999 ரூபாயாக உள்ளது. மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.2,360 உள்ள நிலையில், தனியார் ரயில் கட்டணம் ரூ. 5,000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 7,999 ரூபாயாக உள்ளது. குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.4,820 உள்ள நிலையில், தனியார் ரயில்கட்டணம் ரூ.7000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 9,999 ரூபாயாக உள்ளது. குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.8,190. ஆனால் தனியார் ரயில் கட்டணம் ரூ.10,000 மற்றும் பேக்கேஜ் கட்டணம் 12,999 வசூலிக்கப்படுகிறது. 

தெற்கு ரயில்வேயில் முதல் தனியார் ரயில்
கோவையிலிருந்து சீரடிக்கு !

இரயில்வே அமைச்சர் சென்னையில் பேசியது
அத்தனையும் பொய்யா?

இரயில்வே நிர்வாகமே உத்தரவை திரும்பப்பெறு.

ரயில்வே மக்களின் சொத்து. உங்களின் சொத்தல்ல, யாருக்கும் தாரைவார்க்க. 1/2#Private #Railway #Coimbatore #Seeradi pic.twitter.com/1mmXvye0hS

— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 11, 2022

">

தனியார் ரயில் சேவைக்கு எதிர்ப்பு

ரயில் சேவைகளை தனியார் வசம் ஒப்படைக்க பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனியார் ரயிலில் கட்டண கொள்ளை நடப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.


கோவை - சீரடி இடையே தனியார் ரயில்; எகிறும் டிக்கெட் விலை - எதிர்க்கும் தொழிற்சங்கங்கள்..!

இந்நிலையில் ரயில்கள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எஸ்.ஆர்.எம்.யூ எனப்படும் சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பினர் கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர். ரயில்கள் தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவை ரயில் நிலையம் முன்பு அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கோவை முதல் சீரடி வரை தொடங்ப்பட்டுள்ள ரயிலை தனியாருக்கு அளித்ததை திரும்பப் பெற வேண்டும், டெல்லி நேபாளம் ரயிலை ஐஆர்சிடிசிக்கு விற்றதை வாபஸ் பெற வேண்டும், பாரத் கெளரவ் என்ற பெயரில் 100 விரைவு ரயில்களை தனியாருக்கு அளிக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (04-06-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் இதுதான்
கோவையில் நாளை (04-06-2026) மின் தடை ஏற்படும் பகுதிகள் இதுதான்
அ.தி.மு.க-வில் அடுத்த உள்கட்சிப் போர்!பொள்ளாச்சியில் எஸ்.பி வேலுமணியை ‘துரோகி’ என முழங்கித் தீர்த்த தொண்டர்கள் !!!
அ.தி.மு.க-வில் அடுத்த உள்கட்சிப் போர்!பொள்ளாச்சியில் எஸ்.பி வேலுமணியை ‘துரோகி’ என முழங்கித் தீர்த்த தொண்டர்கள் !!!
Coimbatore power cut: கோவையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் முழு லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் முழு லிஸ்ட் இதோ
நேபாளத்திற்கு தப்பியிருக்கலாம்.. கொலை வழக்கில் தேடப்படும் தம்பதியை பிடிக்க போலீஸ் தீவிரம்.
நேபாளத்திற்கு தப்பியிருக்கலாம்.. கொலை வழக்கில் தேடப்படும் தம்பதியை பிடிக்க போலீஸ் தீவிரம்.

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
Embed widget