மேலும் அறிய

சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவு: அர்ஜீன் சம்பத் மீது கோவை காவல் துறையினர் வழக்குப் பதிவு

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் மற்றும் அதற்கு எதிராக கருத்து பதிவிட்ட தடா ஜெ ரஹீம் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் மற்றும் அதற்கு எதிராக கருத்து பதிவிட்ட தடா ஜெ ரஹீம் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜீன் சம்பத். இவர் இந்து மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதும், இதன் காரணமாக காவல் துறையினர் இவர் மீது நடவடிக்கை எடுத்து வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை அர்ஜீன் சம்பத் வெளியிட்டுள்ளார். அதில், “அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள், இந்துக்களின் வெற்றித் திருநாள். அயோத்தில் ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டிட சபதமேற்போம்” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Jai Sri Ram pic.twitter.com/fjSKCxsWqz

— Arjun Sampath (@imkarjunsampath) December 5, 2022

">

இந்நிலையில் அர்ஜீன் சம்பத்தின் டிவிட்டர் பதிவு இரு மதத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக, பந்தய சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரேம் சுகுமார் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பந்தய சாலை காவல் துறையினர் அர்ஜீன் சம்பத் மீது  இரு மதத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்துதல், இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடிமைச்சின்னம் அகற்றப்பட்ட நாள் என நீங்க போஸ்டர் போடுவது சரி என்றால் ?

பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் அவமானச்சின்னம் எழுப்ப சதி செய்யப்பட்ட நாள் என நான் பதிவு போடுவதில் என்ன தவறு.. pic.twitter.com/AQlySfY5Ef

— தடா ஜெ ரஹிம் 🇮🇳 (@tadarahim7) December 5, 2022

">

இதேபோல இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத்தின் டிவிட்டர் பதிவிற்கு எதிராக கருத்து பதிவிட்ட இந்திய தேசிய லீக் கட்சியை சேர்ந்த தடா ஜெ ரஹீம் மீது பந்தய சாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தடா ஜெ ரஹீம் தனது டிவிட்டர் பக்கத்தில் அர்ஜீன் சம்பத் கருத்திற்கு எதிராக இரு மதத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக, பந்தய சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரேம் சுகுமார் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் பந்தய சாலை காவல் துறையினர் தடா ஜெ ரஹீம் மீது  இரு மதத்தினர் இடையே பகைமையை ஏற்படுத்துதல், இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புLoan Agent Harassment | ’’ரோட்டுல தள்ளி அடிச்சாங்க குழந்தை ABORTION ஆகிடுச்சு’’ கலங்கி நிற்கும் தாய் | VPMNamakkal Collector : ’’பாதையை அடைச்சா அவ்ளோதான்’’அதிகாரிகளை அலறவிட்ட கலெக்டர்..காலில் விழுந்த மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.