மேலும் அறிய

’விநாயகர் சதுர்த்தி விழாவில் மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவித்தால் கடும் நடவடிக்கை’ - கோவை மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாநகரில் உள்ள மாநகராட்சி பள்ளிக் குழந்தைகள் காவல் துறை செயல்பாடுகளை பற்றி அறிந்து கொள்ளும் விதமாக 100 பேர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். மாணவ, மாணவிகளிடம் உரையாடல் மூலமாக வாழ்க்கை குறிக்கோள், போதைப் பொருட்கள் தவிர்ப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் பிரச்சனை தொடர்பான விழிப்புணர்வு, சட்டம் குறித்த அறிமுக விழிப்புணர்வு ஆகியவை எடுத்துரைக்கப்பட்டன. மாணவர்கள் எதிர்காலத்தில் குற்றமில்லாத வாழ்க்கை, குற்றப் பாதிப்பு இல்லாத வாழ்க்கை வாழவும் ’காபி வித் கமிசனர்’ என்ற நிகழ்ச்சி தொடர்ந்து மாநகராட்சி பள்ளிக் குழந்தைகளுக்கு நடத்தப்பட உள்ளது

கோவை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 500 சிலைகள் வைக்கப்பட உள்ளன. இவ்விழாவின் போது பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் மக்கள் கொண்டாடும் வகையிலும், பொது அமைதிக்கு எந்த பங்கமும் ஏற்படாத வகையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1500 காவலர்கள், ஊர்காவல் படையினர் மற்றும் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பல்வேறு அமைப்பினரிடம் கூட்டங்கள் நடத்தப்பட்டு விநாயர் சதுர்த்தி அமைதியாக நடக்க ஒத்துழைப்பு தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையிலும், பிரச்சனை ஏற்படாத வகையில் எல்லோரது நடவடிக்கை இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை உடனடியாக பாயும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகர எல்லைகளில் உள்ள 11 சோதனைச் சாவடிகளை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதட்டமான இடங்களில் கேமராக்கள் மூலம் பதிவு செய்து பிரச்சணைகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போதும் கண்காணிப்பு கேமரா மூலம் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். இவ்விழா  அமைதியாக நடைபெற அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

சிங்காநல்லூர் பகுதியில் ஒருவரிடம் திருநங்கைகள் வழிப்பறி செய்தது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கைது நடவடிக்கை எடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல் துறை மும்முரமாக செயல்பட்டு வருகிறது. திருநங்கைகள் மீது பல புகார்கள் வந்ததன் அடிப்படையில் இரண்டு முறை கூட்டங்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதனை மீறி செயல்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
Embed widget