மேலும் அறிய

Coimbatore: மனைவிக்கு நினைவு மண்டபம் அமைத்து திருவுருவச்சிலைக்கு தினசரி பூஜை செய்து வழிபடும் விவசாயி

பழனிச்சாமி தனது மனைவியின் திருவுருவச்சிலைக்கு தினசரி மாலை இரண்டு வேளையும் தீபம் ஏற்றி ஊதுபத்தி கற்பூர தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டு வருகிறார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ள கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. 75 வயதான இவர் விவசாயியாக உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி. திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி பாசத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஒரு நாள் கூட சண்டை சச்சரவு ஏற்பட்டது இல்லை என தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2019 ஆண்டு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சரஸ்வதி குளியல் அறைக்கு சென்ற போது, திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 


Coimbatore: மனைவிக்கு நினைவு மண்டபம் அமைத்து திருவுருவச்சிலைக்கு தினசரி பூஜை செய்து வழிபடும் விவசாயி

இந்த அதிர்ச்சியை பழனிசாமியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்ணீர் விட்டு கதறி அழுத அவர், தனது மனைவியின் உடலை தோட்டத்திலேயே அடக்கம் செய்தார். பின்னர் தனது மனைவி சரஸ்வதிக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது. இதனைத் தொடர்ந்து பழனிசாமி தனது மனைவியை அடக்கம் செய்த இடத்தில், நினைவு மண்டபம் அமைத்து மனைவி சரஸ்வதியின் திருவுருவச் சிலையை தனது மனைவி இறந்த ஓராண்டுக்கு பின்னர் நிறுவினார். பழனிச்சாமி தனது மனைவியின் திருவுருவச்சிலைக்கு தினசரி மாலை இரண்டு வேளையும் தீபம் ஏற்றி ஊதுபத்தி கற்பூர தீபம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டு வருகிறார். எங்காவது வெளியூர் சென்றால் பூஜை செய்வது தவறிவிடும் என்ற எண்ணத்தில் வெளியே எங்கும் செல்லாமல் தனது தோட்டத்திலேயே தனது மனைவியை நினைத்து கண்ணீர் சிந்தி வாழ் நாளை கழித்து வருகிறார். 

இது குறித்து விவசாயி பழனிசாமி கூறியதாவது, ”திருமணமான நாள் முதல் கணவன் மனைவி இரண்டு பேரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். ஒரு நாள் கூட எங்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்படவில்லை. என்னை நல்ல முறையில் கவனித்து வந்தார். இரண்டு பேரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நேரத்தில், திடீரென அவர் உயிரிழந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது நினைவால் நினைவு மண்டபம் அமைத்து அதில் அவரது திரு உருவச் சிலையை வைத்து காலை, மாலை இரண்டு வேளையும் கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறேன். 


Coimbatore: மனைவிக்கு நினைவு மண்டபம் அமைத்து திருவுருவச்சிலைக்கு தினசரி பூஜை செய்து வழிபடும் விவசாயி

இதற்காக திருமுருகன் பூண்டியில் உள்ள ஒரு சிற்ப கலைக்கூடத்தில் அவரது போட்டோவை கொடுத்து அவரைப் போலவே தத்ரூபமாக எனது மனைவியின் உருவச் சிலையை சிற்பமாக வண்ணம் தீட்டி வடிவமைத்துள்ளனர். மனைவி இறந்த பின்பு அவரது நினைவுகளுடன் வாழ்வதைவிட, ஒவ்வொருவரும் மனைவி தன்னுடன் வாழும் போது அவரை உயிருக்கு உயிராக அன்புடன் நேசித்து பாசம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். உயிரிழந்த மனைவி நினைவாக சிலை அமைத்து கணவர் தினமும் பூஜை செய்து வருவது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
Embed widget