மேலும் அறிய

காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க ட்ரோன் மூலம் தேடும் வனத்துறை - கும்கி யானைகளை வரவழைக்க முடிவு

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காட்டு யானையின் இருப்பிடத்தை கண்டறிய ட்ரோன் மூலம் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதி தமிழ்நாடு - கேரளா மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது 70 சதவீத வனப்பகுதி கொண்ட ஆணையிட்டி பகுதியில் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றனர். குறிப்பாக காட்டு யானைகளின் வலசை பாதையில் முக்கிய பங்கு வைக்கும் ஆனைகட்டி பகுதியில் எப்போதும் யானைகளின் நடமாட்டம் காணப்படும். அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும் உண்டு.


காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க ட்ரோன் மூலம் தேடும் வனத்துறை - கும்கி யானைகளை வரவழைக்க முடிவு

இந்நிலையில், ஆனைகட்டி அருகே உள்ள பட்டிசாலை பகுதியில் தமிழக கேரள மாநிலங்களை பிரிக்கும் கொடுங்கரை ஆற்றின் நடுவே உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சோர்வுடன் 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நின்று கொண்டிருக்கிறது. வாயில் காயம் ஏற்பட்ட நிலையில் உணவு எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் யானை இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று மாலை முதல் இந்த யானை ஆற்றில் நின்று கொண்டு இருப்பதால், இதற்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் இடையே குழப்பம் நீடித்து வந்தது.

அதே சமயம் கேரளா வனப்பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் கேரள வனத்துறையும், தமிழக வனப் பகுதிக்குள் வந்து விடாமல் தடுக்கும் வகையில் தமிழக வனத்துறையினரும் நின்றனர். இதன் காரணமாக அந்த காட்டு யானை எந்த பகுதிக்கு செல்வது என தெரியாமல் ஆற்றின் நடுவில் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்தது.


காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க ட்ரோன் மூலம் தேடும் வனத்துறை - கும்கி யானைகளை வரவழைக்க முடிவு

இதுகுறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், “ஆற்றின் நடுவே நின்று கொண்டிருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு உடனடியாக தமிழக வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும். கேரள வனத் துறையினர் நேற்று முதல் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர். யானையை காப்பாற்ற தமிழக வனத்துறையினர் முன் வர வேண்டும். யார் சிகிச்சை அளிப்பது என்ற குழப்பத்தில் இழுத்தடிப்பு செய்து வருவது முறையல்ல. காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

வழக்கமாக காவல் துறையில் எல்லைப் பிரச்சனை காரணமாக வழக்குகளை யார் விசாரிப்பது என்பதில் குழப்பம் இருந்து வரும் நிலையில், வனத்துறையிலும் எல்லை பிரச்சனையால் யானைக்கு சிகிச்சை அளிக்க தமிழக கேரளா வனத்துறையினர் யோசனை செய்து வருவது சூழலியல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க ட்ரோன் மூலம் தேடும் வனத்துறை - கும்கி யானைகளை வரவழைக்க முடிவு

இது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், தமிழ்நாடு வனத்துறையினர் காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கொடுங்கரை ஆற்றுப் பகுதிக்கு வனத்துறையினர் சென்று பார்த்த போது, அப்பகுதியில் இருந்த காட்டு யானை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த யானையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காட்டு யானையின் இருப்பிடத்தை கண்டறிய ட்ரோன் மூலம் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க ட்ரோன் மூலம் தேடும் வனத்துறை - கும்கி யானைகளை வரவழைக்க முடிவு

உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க வனத்துறை திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் கோழிக்கமுதியில் இருந்து இரண்டு கும்கி யானைகள் ஆனைகட்டி கொண்டு வரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து யானையின் இருப்பிடம் தமிழ்நாடு பகுதிக்குள் இருந்தால் கோவை வனத்துறையினரும், கேரளாவிற்குள் இருந்தால் அம்மாநில வனத்துறையினரும் சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளனர்.


 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
Breaking News LIVE:  தூத்துக்குடி : 61 நாட்களுக்குப் பிறகு ஆர்வத்துடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
தூத்துக்குடி : 61 நாட்களுக்குப் பிறகு ஆர்வத்துடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
TVK Vijay: தொண்டர்களுக்கு பணத்தை விட விஜய் மேல் பாசம் அதிகம்.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு இணையத்தில் வைரல்!
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
SA Vs NEP, T20 Worldcup: தென்னாப்ரிக்காவிற்கு மரண பயம் காட்டிய நேபாளம் - வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
Breaking News LIVE:  தூத்துக்குடி : 61 நாட்களுக்குப் பிறகு ஆர்வத்துடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
தூத்துக்குடி : 61 நாட்களுக்குப் பிறகு ஆர்வத்துடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
Rajat Sharma : காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர் ரஜத் சர்மா வழக்கு - டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Rajat Sharma : காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர் ரஜத் சர்மா வழக்கு - டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Hip Hop Aadhi: “படிப்பு ரொம்ப முக்கியம்.. என்னைக்கும் தலை நிமிர வைக்கும்” - ஹிப்ஹாப் ஆதி பேச்சு!
“படிப்பு ரொம்ப முக்கியம்.. என்னைக்கும் தலை நிமிர வைக்கும்” - ஹிப்ஹாப் ஆதி பேச்சு!
EPFO Rules Changed: இனி பி.எஃப்., கணக்கில் கோவிட் 19 அட்வான்ஸ் பணம் வழங்கப்படாது - EPFO அறிவிப்பு
EPFO Rules Changed: இனி பி.எஃப்., கணக்கில் கோவிட் 19 அட்வான்ஸ் பணம் வழங்கப்படாது-EPFO அறிவிப்பு
Embed widget