மேலும் அறிய

கோவையில் யானைகளால் தொடர் பயிர் சேதம்; வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்..!

பயிர் சேதங்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கவில்லை. வனத்துறையினர் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டத்தை குறைக்க ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு

கோவை தொண்டாமுத்தூர் அருகே காட்டு யானைகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காத வனத்துறையினரை கண்டித்து, அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இதன் காரணமாக பயிர் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டும் வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களிலும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக கிராமப் பகுதிக்குள் சுற்றி வருகின்றன.


கோவையில் யானைகளால் தொடர் பயிர் சேதம்; வனத்துறையினரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்..!

குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தேவராயபுரம், நரசிபுரம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தொடர்ந்து, இரவு நேரங்களில் கிராமப்பகுதிகளுக்குள் நுழைந்து விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கவில்லை எனவும், வனத்துறையினர் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டத்தை குறைக்க ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினரை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவராயபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ”மாலை நேரம் ஆனவுடன் வனப்பகுதிக்குள் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர் சேதம் செய்கிறது. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்களை அடியோடு சாய்த்து விடுகின்றன. விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல காட்டு யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் விவசாயிகள் ஒன்றினைந்து தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம்” எனத் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிட செய்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கோவையை உலுக்கிய சூறாவளி காற்று!! சாலையில் பறந்த கடை மேற்கூரைகள்...
கோவையை உலுக்கிய சூறாவளி காற்று!! சாலையில் பறந்த கடை மேற்கூரைகள்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
பழைய தேருக்கு விடை... ரூ.1.40 கோடியில் பேரூர் பட்டீஸ்வரருக்கு புதிய பிரம்மாண்ட தேர்...
பழைய தேருக்கு விடை... ரூ.1.40 கோடியில் பேரூர் பட்டீஸ்வரருக்கு புதிய பிரம்மாண்ட தேர்...
சூலூரை உலுக்கிய 0 வயது சிறுமி கொலை வழக்கு... சிறைக்குள்ளேயே தாக்கப்பட்ட முக்கிய குற்றவாளி...
சூலூரை உலுக்கிய 0 வயது சிறுமி கொலை வழக்கு... சிறைக்குள்ளேயே தாக்கப்பட்ட முக்கிய குற்றவாளி...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
Annamalai: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
CV Shanmugam Next Plan : சி.வி.சண்முகத்தின் ராஜினாமா முடிவை மாற்றிய அந்த ஒரு போன் கால்.! திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
சி.வி.சண்முகத்தின் ராஜினாமா முடிவை மாற்றிய அந்த ஒரு போன் கால்.! திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
Mamata Banerjee: ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?
ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?
CM Vijay: திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கெடுக்க திமுக சதி? - விஜயை விளாசும் நெட்டிசன்கள்!
CM Vijay: திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கெடுக்க திமுக சதி? - விஜயை விளாசும் நெட்டிசன்கள்!
TN DGP: புதிய டிஜிபி இதுவரை பொறுப்பேற்காதது ஏன்? மகேஷ் குமார் அகர்வால் எங்கே? சிஎம் விஜய் டிக் அடித்தது ஏன்?
புதிய டிஜிபி இதுவரை பொறுப்பேற்காதது ஏன்? மகேஷ் குமார் அகர்வால் எங்கே? சிஎம் விஜய் டிக் அடித்தது ஏன்?
Embed widget