மேலும் அறிய

கோவையில் சர்ச்சையை ஏற்படுத்திய இரட்டை கழிவறை ; சிறுநீர் கழிப்பிடமாக மாற்றிய மாநகராட்சி நிர்வாகம்

கோவையில் 2 பேர் ஒரே அறையில் அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட மாநகராட்சி கழிவறை கட்டுமானம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கோவை மாநகராட்சி உட்பட்ட 66 வது வார்டு அம்மன்குளம் ராஜீவ் காந்தி நகர். இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒரு பொதுக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.. இந்த கழிப்பறையானது பெண்கள் மற்றும் ஆண்கள் பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.. கூடுதலாக சிறுவர்களுக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த கழிவறையின் ஒரு பகுதியில் இரண்டு பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்ட கட்டுமானம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரே அறைக்குள் 2 கழிவறைகள் அருகருகே அமைக்கப்பட்டுள்ள நிலையில், கழிவறைக்கு இடையிலே கதவுகளோ அல்லது தடுப்புகளோ கட்டப்படாமல் இருந்தது.


கோவையில் சர்ச்சையை ஏற்படுத்திய இரட்டை கழிவறை ; சிறுநீர் கழிப்பிடமாக மாற்றிய மாநகராட்சி நிர்வாகம்

இரண்டு பேர் அடுத்தடுத்து அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த கழிவறை கதவுகள் இல்லாமல் கட்டப்பட்டு இருந்ததால், ஒரே நேரத்தில் இருவர் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். முறையான திட்டமிடல் இல்லாமல் கழிவறை கட்டப்பட்டு இருப்பதாகவும், கதவு அல்லது தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தால் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பயன்படுத்தும் வகையில் இருந்திருக்கும் எனவும் அவர்கள் தெரித்தனர். இரண்டு பேர் பயன்படுத்தும் வகையில் கழிவறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த கழிப்பறை மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் கிண்டலான கருத்துக்களை பகிர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தை விமர்சித்தனர்.


கோவையில் சர்ச்சையை ஏற்படுத்திய இரட்டை கழிவறை ; சிறுநீர் கழிப்பிடமாக மாற்றிய மாநகராட்சி நிர்வாகம்

இது தொடர்பாக கோவை மாநகராட்சி பொறுப்பு ஆணையாளர் ஷர்மிளா ஒரு விளக்க அறிக்கை அளித்தார். அதில் இந்த மாநகராட்சி கழிப்பிடம் 1995 ம் ஆண்டு கட்டப்பட்டது எனவும், சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில் பெரியவர்களின் கண்காணிப்பில் உபயோகப்படுத்த வேண்டுமென்பதற்கான கதவுகள் இல்லாமல் கட்டப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கதவுகள் இருந்தால் குழந்தைகள் உள்புறம் தாழிட்ட பின் திறந்து வெளியே வர இயலாது என்பதால் கதவுகள் பொருத்தப்படவில்லை எனவும், இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி பராமரிப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். உபயோகம் இல்லாமல் இருந்த அக்கழிப்பிடம் பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றப்படும் எனவும் கூறிய அவர், விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அக்கழிப்பிடம் சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணிகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
கொந்தளித்த விவசாயிகள்.. பரபரப்பில் மயிலாடுதுறை..
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
எஸ்பிபி-க்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உதயமான ஜாம்பவான் பாடகர் - யாரு தெரியுமா? எப்படி?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
Embed widget