மேலும் அறிய

கோவை மேம்பாலம் பணியில் புதிய சட்ட சிக்கல்! ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படுமா? தாமதத்தின் காரணம் என்ன?

கோவையில் உள்ள கோல்ட்வின்ஸ் வரையிலான பகுதிக்கு மேல் வழிச்சாலை அமைப்பதற்கான முக்கிய முயற்சியாக உள்ளது. மாநில நெடுஞ்சாலை துறையின் சிறப்பு திட்ட பிரிவு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கோயம்புத்தூர்: கோவை மாநகரின் போக்குவரத்து சிக்கல்களை குறைக்கும் முக்கிய திட்டமான அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத் திட்டம், புதிய சட்ட தடையை எதிர்கொண்டு மீண்டும் தாமதம் அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது

அவினாசி மேம்பாலம்:

கட்டப்பட்டு வரும் இந்த புதிய மேம்பாலம் மொத்தம் 10.1 கிலோமீட்டர் நீளத்தில் ரூ.1,621.3 கோடி மதிப்பீட்டில் உருவாகும். இந்த மேம்பாலம், அண்ணா சிலை சந்திப்பில் இருந்து கோவையில் உள்ள கோல்ட்வின்ஸ் வரையிலான பகுதிக்கு மேல் வழிச்சாலை அமைப்பதற்கான முக்கிய முயற்சியாக உள்ளது. மாநில நெடுஞ்சாலை துறையின் சிறப்பு திட்ட பிரிவு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

 புதுச்சட்ட சிக்கல்

தற்போது, பிஆர்எஸ் மைதானம் அருகே உள்ள ரெசிடென்சி ஹோட்டல் அருகேயுள்ள ஒரு தனியார் நில உரிமையாளர், தனது நிலத்திற்கான நுழைவு பாதையை மேம்பாலத் தூண் முற்றிலும் தடுத்துவிட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இதன் காரணமாக, அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த ரேம்ப் அமைக்கும் பணி நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரேம்ப் அண்ணா சிலை சந்திப்பிலிருந்து கோவை விமானநிலையம் செல்லும் பாதையின் ஒரு பகுதியாக உள்ளது.

எங்கு எங்கு பணி முடிந்தது?

  • பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உள்ள ரேம்ப் பணி முடிக்கப்பட்டுள்ளது.

  • சுகுணா கல்யாண மண்டபம், ஜி.டி. மியூசியம், பீலமேடு காவல் நிலையம் எதிரே போன்ற இடங்களில் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • ஹோப்ஸ் கல்லூரி சந்திப்பில் இரும்பு கீர்டர்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு, 8 ஸ்டீல் டெக்குகளில் 4 பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மழைநீர் சேமிப்பு, நீர்த்தேக்கம் தடுக்கும் பணிகள்

மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்படாமல் தடுக்க ஸ்டார்ம்வாட்டர் டிரெயின் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 120 இடங்களில் மழைநீர் சேமிப்பு கிணறுகள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"முக்கிய பணிகள் முழு வேகத்தில் நடக்கின்றன" – அதிகாரிகள் நம்பிக்கை

இந்த வழக்குத் தடை இருந்தபோதும், திட்டத்தின் மற்ற பகுதிகள் மீது எந்தவித தாக்கமும் இல்லாமல் பணி வேகமாக நடக்கிறது என்று திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்டில் திறக்க வாயப்பு:

தனியார் நில உரிமையாளரின் வழக்கை எதிர்த்து, நெடுஞ்சாலைத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு இந்த மாதத்திற்குள் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.

எல்லா சட்ட சிக்கல்களும் விலகினால், மேம்பாலம் வரும் ஆகஸ்ட் மாதம் மத்திய பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவை மக்களே அலர்ட் - நாளை (25-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ
கோவை மக்களே அலர்ட் - நாளை (25-06-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் முழுப் பட்டியல் இதோ
சொந்த குழந்தையை கொன்ற தாய்... 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு
சொந்த குழந்தையை கொன்ற தாய்... 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு
நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்... பேருந்தை முந்த முயன்றபோது நேர்ந்த பயங்கரம்
நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்... பேருந்தை முந்த முயன்றபோது நேர்ந்த பயங்கரம்
ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் குஜராத் வியாபாரிகள் எஸ்கேப்... வலைவீசும் கோவை போலீசார்
ரூ.10 கோடி தங்கம், வெள்ளியுடன் குஜராத் வியாபாரிகள் எஸ்கேப்... வலைவீசும் கோவை போலீசார்

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
Chennai Power Cut: சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
New Tata Altroz Turbo CNG: நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
Embed widget