மேலும் அறிய

Coimbatore: 'அரசியல் கண்ணோட்டத்தில் பட்ஜெட் போடப்படவில்லை' - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

"அரசியல் நோக்கத்தோடு இந்த பட்ஜெட் உருவாக்கப்படவில்லை. மக்கள் வளர்ச்சிக்காகவும் இந்தியர்களின் எதிர்காலத்திற்காகவும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது”

பட்ஜெட் விளக்க கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கோவைக்கு வருகை தந்தார். கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவிட் பாதிப்பிற்கு பிறகு உலக நாடுகள் பல்வேறு பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும் சூழலில் இந்தியா மிக வேகமாக பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது. குறிப்பாக சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த நாடுகளான சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கோவிட் பாதிப்பு மட்டுமின்றி அதனை தொடர்ந்து ஏற்பட்ட ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் பொருளாதார பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.

சீனாவில் தொடர்ந்து கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பண வீக்கம், வேலையின்மை ஆகிய பிரச்சினைகள் உள்ளன. இந்த சூழலில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட்டினை சுமார் 45 லட்சம் கோடி மதிப்பீட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளது. பொது மக்கள் நலன் சார்ந்தும் ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் கிராமங்கள் ஊரக பகுதிகள் தலித் மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என அனைத்து தரப்பினரையும் முன்னேற்றம் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
குறிப்பாக விவசாயம், நகர கட்டமைப்புகள் மற்றும் டிஜிட்டல் மேம்பாட்டுக்காக பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியரின் எதிர்காலத்திற்காகவும் ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சிக்காகவும் இந்த பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் Green growth - பசுமை வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் என ஏழு அம்சங்களை கொண்ட பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.


Coimbatore: 'அரசியல் கண்ணோட்டத்தில் பட்ஜெட் போடப்படவில்லை' - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

சர்வதேச அளவில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் இந்தியா முன்னணியில் விளங்கி வருகிறது. டிஜிட்டலைசேஷன் பெருமளவில் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. பாரத பிரதமர் அவர்களின் அரசில் எந்தவிதமான ஊழலும் இன்றி தாமதம் இன்றி மக்கள் நலத்திட்டங்கள் பயனாளிகளை சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடரும். மற்ற நாடுகளும் இந்தியாவிடம் இருந்து பல்வேறு விஷயங்களை கற்று வருகின்றன. கடந்த 10 வருடங்களில் பாரத பிரதமர் அவர்கள் இந்தியாவை தொழில்நுட்ப வளர்ச்சி பாதையில் செலுத்தி வருகிறார். புதிதாக நர்சிங் கல்லூரிகள் திறக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் திறனை வளர்க்கும் விதத்தில் ஸ்கில் பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், 65 ஆண்டுகளாக இந்தியா கண்டிராத வளர்ச்சியினை கண்டுள்ளது.

டெல்லியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அனைவருக்குமான வளர்ச்சியை பாரத பிரதமர் மோடியின் அரசு வழங்கி வருகிறது. அடுத்த 15 வருடங்களில் சர்வதேச அளவில் முக்கிய பொருளாதார சக்தி மிகுந்த நாடாக இந்தியா திகழும்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தவர், ”ஜி.எஸ்.டி என்பது ஜிஎஸ்டி கவுன்சிலால் நடைமுறைப்படுத்தப்படுவது. கோவிட் பாதிப்பு மற்றும் போர் சூழல் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த பட்ஜெட் அவற்றை கட்டுக்குள் வைத்து ஒவ்வொரு இந்தியரின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய ஊக்குவிக்கும். அரசியல் நோக்கத்தோடு இந்த பட்ஜெட் உருவாக்கப்படவில்லை. மக்கள் வளர்ச்சிக்காகவும் இந்தியர்களின் எதிர்காலத்திற்காகவும் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget