மேலும் அறிய

’மனிதன் பிறந்தாலும் மரம், இறந்தாலும் மரம்’ - மரப்பூங்காக்களை உருவாக்கி அசத்தும் கிராம மக்கள்!

அத்தப்பகவுண்டன்புதுர் கிராமத்தில் நிழல் மரங்கள், மூலிகை மரங்கள், பழ மரங்கள் உள்ளிட்ட 6 ஆயிரம் மரங்களை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இதனால் பல்லுயிர் சூழல் மேம்பட்டு பசுமையான சூழல் உருவானது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே அத்தப்பகவுண்டன்புதுர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அக்கிராமத்தில் நீர்வழிப்பாதை இல்லாததால் தண்ணீர் தேங்காத ஒரு குட்டை, குப்பைகள் கொட்டப்பட்டதால் குப்பை மேடாக மாறியுள்ளது. அதனால் காசு மாற்று அடைந்து தூர்நாற்றம் வீசியதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டுமென அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் பலர் இணைந்து பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன், குட்டையில் இருந்த குப்பைகளை வெளியேற்றியுள்ளனர்.

பின்னர் அந்த இடத்தை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாற்ற வேண்டுமென தீர்மானித்த தன்னார்வலர்கள், மரப்பூங்காவை உருவாக்க முடிவு செய்தனர். இதன்படி அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிழல் மரங்கள், மூலிகை மரங்கள், பழ மரங்கள் உள்ளிட்டவற்றை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இதனால் குப்பை மேடு பசுமை வனமானது.


’மனிதன் பிறந்தாலும் மரம், இறந்தாலும் மரம்’ - மரப்பூங்காக்களை உருவாக்கி அசத்தும் கிராம மக்கள்!

மரப்பூங்கா உருவாக்கும் முயற்சி வெற்றி அடைந்ததால் உற்சாகம் அடைந்த தன்னார்வலர்கள், அப்பகுதியில் மேலும் 3 மரப்பூங்காக்களை உருவாக்கினர். ஓடைப்பகுதி மற்றும் மயான பகுதிகளில் மொத்தம் 6 ஆயிரம் மரங்களை நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இதனிடையே மரம் வளர்ப்பில் மக்களது பங்களிப்பை உருவாக்கும் வகையில் குழந்தைகள் பிறக்கும் போதும், குடும்ப உறுப்பினர்கள் இறக்கும் போதும் அவர்களது நினைவாக ஒரு மரம் நடுவது என்ற ஒரு புதிய முயற்சியை தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் காரணமாக அதிக அளவிலான மரங்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து மரங்கள் பராமரிக்கப்பட்டு வருவதால், பல்லுயிர் சூழல் மேம்பட்டதோடு, பசுமையான சூழல் உருவானது.


’மனிதன் பிறந்தாலும் மரம், இறந்தாலும் மரம்’ - மரப்பூங்காக்களை உருவாக்கி அசத்தும் கிராம மக்கள்!

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலரும், இயற்கை விவசாயியுமான தங்கவேலு கூறும் போது, “நீர்வழிப்பாதை இல்லாத குட்டை குப்பை மேடாக இருந்தது. அங்கு கடந்த 2014 ம் ஆண்டு சமூக ஆர்வலர்கள் இணைந்து குப்பைகளை வெளியேற்றி, மரங்கள் நடவு செய்ய முடிவு செய்தோம். அதன்படி பல தன்னார்வலர்களின் உதவியுடன் பல வகையான மரங்கள் நடவு செய்து செய்து, வனத்தை உருவாக்கினோம். மரங்களுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்ய இருகூர் பேரூராட்சி உதவியுடன் ஆழ்துளை கிணறு அமைத்து சொட்டு நீர் பாசனம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல ஓடை மற்றும் மயான பகுதிகளிலும் மரங்கள் நட்டு மரப்பூங்காக்களை உருவாக்கியுள்ளோம். மொத்தம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து வருகிறோம்.


’மனிதன் பிறந்தாலும் மரம், இறந்தாலும் மரம்’ - மரப்பூங்காக்களை உருவாக்கி அசத்தும் கிராம மக்கள்!

மரங்களால் நல்ல காற்று கிடைப்பதுடன், வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. பறவைகள் கூடு கட்டி வாழ உகந்த சூழல் ஏற்படுத்தினோம். பறவைகளின் உணவு தேவைக்கு பழ மரங்கள் நட்டதால், பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. மரங்கள் காற்று மாசை குறைக்கவும், நோயில் இருந்து மக்களை காக்கவும் பெருமளவு உதவி செய்கின்றன. மனிதன் பிறந்தாலும் மரம், இறந்தாலும் மரம் என மரங்களை நட்டு வருகிறோம். குழந்தைகள் பிறந்தால் அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரங்களை வைக்கிறார்கள்.

அதேபோல குடும்ப உறுப்பினர்கள் இறந்தால் அவர்களது நினைவாக மரம் நடப்படுகிறது. திருமண நாள் கொண்டாட்டத்தின் போதும் மரங்கள் வைக்கப்படுகிறது. இப்படி 4 மரப்பூங்காக்களை உருவாக்கிள்ளோம். அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வாழ மரங்களை தொடர்ந்து நட்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.


’மனிதன் பிறந்தாலும் மரம், இறந்தாலும் மரம்’ - மரப்பூங்காக்களை உருவாக்கி அசத்தும் கிராம மக்கள்!

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த துரைசாமி கூறுகையில், “எனது அப்பாவின் நினைவாக மரம் வைத்து பராமரித்து வருகிறோம். ஆண்டுதோறும் அவரது நினைவு நாளில் அந்த மரத்திற்கு மரியாதை செலுத்தி வருகிறோம். அந்த மரம் எனது அப்பா இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைக்க வைக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

“திமுக மீது குற்றச்சாட்டு, அதிமுக வெற்றி நம்பிக்கை – கோவையில் எஸ்.பி. வேலுமணி பேச்சு”
“திமுக மீது குற்றச்சாட்டு, அதிமுக வெற்றி நம்பிக்கை – கோவையில் எஸ்.பி. வேலுமணி பேச்சு”
கேரள தேர்தல் களம்: மோடி வருகையால் பரபரப்பு! நாளை பிரச்சாரத்தில் பிரதமர், பாஜகவினர் உற்சாகம்!
கேரள தேர்தல் களம்: மோடி வருகையால் பரபரப்பு! நாளை பிரச்சாரத்தில் பிரதமர், பாஜகவினர் உற்சாகம்!
பொள்ளாச்சியில் தங்கத்திற்காக 75 வயது மூதாட்டி கொலை! அதிர்ச்சி திருப்பம்: சரோஜா சிக்கியது எப்படி?
பொள்ளாச்சியில் தங்கத்திற்காக 75 வயது மூதாட்டி கொலை! அதிர்ச்சி திருப்பம்: சரோஜா சிக்கியது எப்படி?
பொள்ளாச்சி அருகே பரபரப்பு: 8 பவுன் நகைக்காக தோழியையே கொன்ற 75 வயது மூதாட்டி கைது
பொள்ளாச்சி அருகே பரபரப்பு: 8 பவுன் நகைக்காக தோழியையே கொன்ற 75 வயது மூதாட்டி கைது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: சென்னையின் 16 தொகுதிகள் - திமுக Vs அதிமுக களமிறக்கிய வேட்பாளர்கள் யார்? கைமாறும் தி.நகர்?
TN Election 2026: சென்னையின் 16 தொகுதிகள் - திமுக Vs அதிமுக களமிறக்கிய வேட்பாளர்கள் யார்? கைமாறும் தி.நகர்?
USA Iran War: ”உள்ள வந்துருவிங்களா? நரகத்திற்கு வெல்கம்” ஈரான் அருகே குவியும் அமெரிக்க படைகள் - தெஹ்ரான் வார்னிங்
USA Iran War: ”உள்ள வந்துருவிங்களா? நரகத்திற்கு வெல்கம்” ஈரான் அருகே குவியும் அமெரிக்க படைகள் - தெஹ்ரான் வார்னிங்
MI Vs KKR: கடப்பாரை Vs வாரியர்ஸ் - மும்பையை தொடரும் 13 வருட சாபம்? பாண்ட்யா டீம் ரூ.25 கோடியை சமாளிக்குமா?
MI Vs KKR: கடப்பாரை Vs வாரியர்ஸ் - மும்பையை தொடரும் 13 வருட சாபம்? பாண்ட்யா டீம் ரூ.25 கோடியை சமாளிக்குமா?
IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!
IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
Embed widget