மேலும் அறிய

நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் யார்? - அண்ணாமலை அளித்த பதில்

மத்திய அரசின் ஒரே பிரதிநிதியாக எல்.முருகன் தமிழகத்தில் இருந்து வருகிறார். பா.ஜ.க.வை தமிழகத்தில் வளப்படுத்தி இருக்கின்றார்.

ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று பிற்பகல் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன் ராஜ்யசபா உறுப்பினராக இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்ட பிறகு தமிழகத்திற்கு முதல் முறையாக வந்துள்ளார். அவரை உற்சாகப்படுத்தும் விதமாக பாஜக தொண்டர்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதற்காக பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். காரணம் 8.5 கோடி தமிழ் மக்களின் இணைப்பு பாலமாக எல்.முருகன் அவர்களை ராஜ்யசபா உறுப்பினராக்கியுள்ளது மகிழ்ச்சியும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய பிரதேச முதல்வர், மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்திற்கு வரவேண்டிய வளர்ச்சி திட்டங்களுக்கு உறுதுணையாக எல்.முருகன் இருப்பார். கடந்த முறை உறுப்பினராக இருந்த போதும் இவருடைய பணிகள் மிகவும் முக்கியமானவை. இரண்டு துறைகளை செயல்படுத்தி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக கொண்டு சென்றார். தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக எல்.முருகன் தேர்வு செய்யப்பட்டு இருப்பது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுவடையச் செய்யும்” எனக் கூறினார்.

இதனையடுத்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ”பிரதமர் மோடி அவர்கள் இரண்டாவது முறையாக மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்துள்ளதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திலிருந்து பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற அடிப்படையில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக இணைப்பு பாலமாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இது தமிழக மக்கள் மீது பிரதமர் வைத்திருக்கும் மரியாதையை காட்டுகிறது. உலகத்தில் எங்கு சென்றாலும் தமிழ் இலக்கியத்தை போற்றியும், திருக்குறளை போற்றியும் பிரதமர் மோடி பேசி வருகிறார். தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் தமிழகத்தின் உள்கட்டமைப்புகள் அபரிவிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீலகிரி மட்டுமல்லாது அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் எல்.முருகன் அவர்கள் தொடர்ந்து கட்சியை வளர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்வார். வேட்பாளர் அறிவிப்பது பாஜக அகில இந்திய தலைமையின் முடிவாகும். எந்த பொறுப்பை கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்வோம்/ நடிகை திரிஷா குறித்த அவதூறு கருத்துக்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது, இது கருத்து சுதந்திரம் கிடையாது எனவும், காவல்துறையினர் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 2014 ம் ஆண்டுக்கு முன்பு பி.எம்.ஆவாஸ் யோஜனா திட்டமானது, இந்திரா காந்தி யோஜனா திட்டம் என்கிற பெயரில் வெறும் 18 லட்சம் வீடுகள் மட்டுமே குறைந்த மானியத்தில் கட்டப்பட்டு வந்தன. 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. இதை பயன்படுத்தி ஏழை எளிய மக்கள் வீடு கட்டி வருகின்றனர்.  இதற்கு கலைஞர் கருணாநிதி இல்லம் என பெயர் வைப்பதில் என்ன காரணம் இருக்கிறது என்பதைத்தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கின்றனர்.

அனைத்து திட்டங்களுக்கும் தலைவர்களின் பெயர்களை வைப்பது நல்ல ஆட்சிக்கு உதாரணமாக இருக்காது. தமிழக பட்ஜெட்டை பொருத்தவரை சென்னையின் கழிவுநீர் வசதிகளுக்கு 400 கோடி கொடுக்கப்பட்டதுபோல் கோயம்புத்தூரிலும் கொண்டு வரப்படும். கலைஞர் நூலகம் வரும் என கூறியுள்ளனர். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. வெறும் எழுத்தளவில் மட்டுமே அறிவிப்புகள் உள்ளன. தமிழக மக்களை பொருத்தவரை இது ஏமாற்றத்திற்குரிய பட்ஜெட்டாகவே பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இட நெருக்கடி அதிகமாகி வருகிறது. ரயில்கள் வரும்போது அதிக டிராபிக் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் போத்தனூர் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி இரட்டிப்பாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது. கோவை ரயில் நிலையமும் போத்தனூர் ரயில் நிலையமும் மேம்படுத்தப்படும், வந்தே பாரத் ரயில் போன்று புல்லட் ரயில் வரலாம். அதற்கான பணிகளை பிரதமர் வலுவாக செய்து வருகிறார்” என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kovai Child Murder Case: கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கு… இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சி அதிரடி
Kovai Child Murder Case: கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கு… இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சி அதிரடி
குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலி… நேர்மையால் ஹீரோ ஆன கோவை தூய்மைப் பணியாளர்
குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலி… நேர்மையால் ஹீரோ ஆன கோவை தூய்மைப் பணியாளர்
”அரசு விடுதிகளில் இப்படித்தான் உணவு கிடைக்கும்” – அதிகாரி பதிலால் கோவையில் மாணவிகள் வேதனை...
”அரசு விடுதிகளில் இப்படித்தான் உணவு கிடைக்கும்” – அதிகாரி பதிலால் கோவையில் மாணவிகள் வேதனை...
CBI அதிகாரி என நடித்த மர்ம நபர்… கோவையில் முதியவரிடம் ₹20 லட்சம் பறிப்பு...
CBI அதிகாரி என நடித்த மர்ம நபர்… கோவையில் முதியவரிடம் ₹20 லட்சம் பறிப்பு...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
டிஎஸ்பி ஆபீஸ் பக்கத்துலேயே மூதாட்டி சரமாரியாக வெட்டிக்கொலை; திருப்பத்தூரை உலுக்கிய சம்பவம்
டிஎஸ்பி ஆபீஸ் பக்கத்துலேயே மூதாட்டி சரமாரியாக வெட்டிக்கொலை; திருப்பத்தூரை உலுக்கிய சம்பவம்
MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ
MG Majestor: கம்பீரத்தின் மறு உருவம்! அறிமுகமாகியது MG Majestor 4×4 - பில்டப்புக்கு வொர்த் ப்ரோ
தயாரிப்பாளராகும் ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு !
தயாரிப்பாளராகும் ஈட்டி பட இயக்குநர் ரவி அரசு !
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
பல்கலை. வேந்தர் முதலமைச்சர்தான்: உச்சநீதிமன்றமே சொல்லியும் அமைச்சர் குழப்புவதா? அன்புமணி கேள்வி
EPS ADMK: கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
கைவிட்ட விஜய்.! வேறு வழியில்லாமல் இபிஎஸ்யிடம் சரண் அடைந்த எஸ்பி.வேலுமணி டீம்- நடந்தது என்ன.?
Embed widget